Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 93
93. மறுபடியும் தத்தாத்ரேயரின் 24 குருமார்களா?

உலகத்தில் யாரும் இளைத்தவரோ, சளைத்தவரோ இல்லை. பகவான் சிருஷ்டியில் அனைவரும் ஒன்றே. ஒருவரிடம் ஒரு தகுதி இருந்தால் மற்றவரிடம் வேறொரு அற்புத சக்தி, தகுதி இருக்கிறது. இதை உணராமல் ஒருவரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் சொல்லுதல் தவறு.
இந்த தசகத்தில் தத்தாத்ரேயர் தனது 24 குருமார்களை பற்றி சொன்ன விஷயங்களை நினைவு படுத்துகிறார் பட்டத்ரி.

बन्धुस्नेहं विजह्यां तव हि करुणया त्वय्युपावेशितात्मा
सर्वं त्यक्त्वा चरेयं सकलमपि जगद्वीक्ष्य मायाविलासम् ।
नानात्वाद्भ्रान्तिजन्यात् सति खलु गुणदोषावबोधे विधिर्वा
व्यासेधो वा कथं तौ त्वयि निहितमतेर्वीतवैषम्यबुद्धे: ॥१॥

bandhusnehaM vijahyaaM tava hi karuNayaa tvayyupaaveshitaatmaa
sarvaM tyaktvaa chareyaM sakalamapi jagadviikshya maayaavilaasam |
naanaatvaad bhraantijanyaat sati khalu guNadOShaavabOdhe vidhirvaa
vyaasedhO vaa kathaM tau tvayi nihitamaterviitavaiShamyabuddheH || 1

ப³ந்து⁴ஸ்னேஹம் விஜஹ்யாம் தவ ஹி கருணயா த்வய்யுபாவேஶிதாத்மா
ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி ஜக³த்³வீக்ஷ்ய மாயாவிலாஸம் |
நானாத்வாத்³ப்⁴ராந்திஜன்யாத்ஸதி க²லு கு³ணதோ³ஷாவபோ³தே⁴ விதி⁴ர்வா
வ்யாஸேதோ⁴ வா கத²ம் தௌ த்வயி நிஹிதமதேர்வீதவைஷம்யபு³த்³தே⁴꞉ || 93-1 ||

பகவானே, எனக்கு சுற்றம் உறவு பந்தம் சொந்தம் எதுவும் வேண்டாம். உன் அருளால் அவற்றை நான் களைவேன் .அப்புறம் என்ன?. ஏகாங்கி, எல்லாம் துறந்தவன், கால் போன போக்கில் எங்கும் சுற்றுவேன். இந்த உலகம் ஒரு மாயை என்று புரிந்துகொள்வேன். இது நல்லது கெட்டது, இதைச் செய்யவேண்டும், செய்யக்கூடாது என்ற நிர்பந்தம் உலக வாழ்க்கையில் ஈடுபடுபவனுக்கு தானே. எனக்கெதற்கு? என் ஒரே எண்ணம், நோக்கம், செயல், வாக்கு எல்லாமே உன் மேலே, நீ ஒன்றே எனக்கு குறி. எனக்கு மற்ற பாகுபாடுகள், வேறுபாடுகள் தேவையில்லையே.

क्षुत्तृष्णालोपमात्रे सततकृतधियो जन्तव: सन्त्यनन्ता-
स्तेभ्यो विज्ञानवत्त्वात् पुरुष इह वरस्तज्जनिर्दुर्लभैव ।
तत्राप्यात्मात्मन: स्यात्सुहृदपि च रिपुर्यस्त्वयि न्यस्तचेता-
स्तापोच्छित्तेरुपायं स्मरति स हि सुहृत् स्वात्मवैरी ततोऽन्य: ॥२॥

kshuttR^iShNaalOpamaatre satatakR^itadhiyO jantavaH santyanantaastebhyO
vij~naanavattvaat puruSha iha varastajjanirdurlabhaiva |
tatraapyaatmaa(a)(a)tmanaH syaatsuhR^idapi cha ripuryastvayi nyastachetaastaapOchChitterupaayaM
smarati sa hi suhR^it svaatmavairii tatO(a)nyaH || 2

க்ஷுத்த்ருஷ்ணாலோபமாத்ரே ஸததக்ருததி⁴யோ ஜந்தவ꞉ ஸந்த்யனந்தா-
ஸ்தேப்⁴யோ விஜ்ஞானவத்த்வாத்புருஷ இஹ வரஸ்தஜ்ஜனிர்து³ர்லபை⁴வ |
தத்ராப்யாத்மா(ஆ)த்மன꞉ ஸ்யாத்ஸுஹ்ருத³பி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா-
ஸ்தாபோச்சி²த்தேருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத்ஸ்வாத்மவைரீ ததோ(அ)ன்ய꞉ || 93-2 ||

''கிருஷ்ணா, பொழுது விடிந்தால் இரவு படுக்கும் வரை, என்ன கிடைக்கும் உண்ண, எதைப் பருகலாம் என்று தேடி அலைபவர்கள் மிருகங்கள் என்று சொல்வேன். இது உடல் தேவையை பூர்த்தி செய்ய அலையும் மிருக குணம். இதை மீறி, எது தேவை எது வேண்டாம் என்று அலசும் புத்தி கொண்டவன் மனிதன். அரிது அரிது மானுடராகப் பிறத்தல் அரிது என்பதை உணர்ந்தவன் அதிர்ஷ்டசாலி. ஒருவனின் நண்பன் விரோதி ரெண்டும் அவனே. அப்படி தன்னையே நண்பனாக அறிந்தவன் தான் உன் மேல் பக்தி கொண்டவன். அவனில் உள்ள உன்னையே நண்பனாக கண்டவன். அவனுக்கு துயரம் துன்பம் எதுவும் இல்லை. தன்னையே தனக்கு விரோதியாக கொள்பவனைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாவம், துன்பம், துயரப்படுவதற்கென்றே பிறந்தவன்.

त्वत्कारुण्ये प्रवृत्ते क इव नहि गुरुर्लोकवृत्तेऽपि भूमन्
सर्वाक्रान्तापि भूमिर्नहि चलति ततस्सत्क्षमां शिक्षयेयम् ।
गृह्णीयामीश तत्तद्विषयपरिचयेऽप्यप्रसक्तिं समीरात्
व्याप्तत्वञ्चात्मनो मे गगनगुरुवशाद्भातु निर्लेपता च ॥३

tvatkaaruNye pravR^itte ka iva na hi gururlOkavR^itte(a)pi bhuuman
sarvaakraantaa(a)pi bhuumirnahi chalati tatassatkshamaaM shikshayeyam |
gR^ihNiiyaamiisha tattadviShayaparichaye(a)pyaprasaktiM samiiraat
vyaaptatvaM chaatmanO me gaganaguruvashaadbhaatu nirlepataa cha || 3

த்வத்காருண்யே ப்ரவ்ருத்தே க இவ ந ஹி கு³ருர்லோகவ்ருத்தே(அ)பி பூ⁴மன்
ஸர்வாக்ராந்தாபி பூ⁴மிர்ன ஹி சலதி தத꞉ ஸத்க்ஷமாம் ஶிக்ஷயேயம் |
க்³ருஹ்ணீயாமீஶ தத்தத்³விஷயபரிசயே(அ)ப்யப்ரஸக்திம் ஸமீராத்-
வ்யாப்தத்வஞ்சாத்மனோ மே க³க³னகு³ருவஶாத்³பா⁴து நிர்லேபதா ச || 93-3 ||

குருவாயூரப்பா, உன் கடாக்ஷம் பெற்றவன், உன் அருள் நிறைந்தவன் குருவாக கிடைத்தால் அதை விட வேறென்ன பாக்யம்? தன்னை அகழ்வாரையும் தாங்கும் நிலம் என்பார்களே அது போல பொறுமை, அன்பு மனதில் நிறைந்தால், இகழ்வார் தூற்றுவார் எவரானாலும் என்னை பாதிக்க மாட்டார்கள். எத்தனையோ துர்கந்தம் இருந்தாலும் காற்று அதோடு கலப்பதில்லை, எந்த பற்றுதலும் இன்றி, நான் ஆகாசத்தைப்போல் நிலையாக, என் ஆத்மாவுடன் இணைந்து ஆனந்திப் பேன்.

स्नेहाद्व्याधात्तपुत्रप्रणयमृतकपोतायितो मा स्म भूवं
प्राप्तं प्राश्नन् सहेय क्षुधमपि शयुवत् सिन्धुवत्स्यामगाध: ।
मा पप्तं योषिदादौ शिखिनि शलभवत् भृङ्गवत्सारभागी
भूयासं किन्तु तद्वद्धनचयनवशान्माहमीश प्रणेशम् ॥५॥

svachChaH syaaM paavanO(a)haM madhura udakavadvahnivanmaa sma gR^ihNaaM
sarvaanniinO(a)pi dOShaM taruShu tamiva maaM sarvabhuuteShvaveyaam |
puShTirnaShTiH kalaanaaM shashina iva tanOrnaatmanO(a)stiiti vidyaaM
tOyaadivyastamaartaaNDavadapi cha tanuShvekataaM tvatprasaadaat ||4

ஸ்வச்ச²꞉ ஸ்யாம் பாவனோ(அ)ஹம் மது⁴ர உத³கவத்³வஹ்னிவன்மா ஸ்ம க்³ருஹ்ணாம்
ஸர்வான்னீனோ(அ)பி தோ³ஷம் தருஷு தமிவ மாம் ஸர்வபூ⁴தேஷ்வவேயாம் |
புஷ்டிர்னஷ்டி꞉ கலானாம் ஶஶின இவ தனோர்னாத்மனோ(அ)ஸ்தீதி வித்³யாம்
தோயாதி³வ்யஸ்தமார்தாண்ட³வத³பி ச தனுஷ்வேகதாம் த்வத்ப்ரஸாதா³த் || 93-4 ||

கிருஷ்ணா, நான் பஞ்சபூதங்களைப்போல் எப்படி இருக்கவேண்டும் என்று இது வரை , பூமி, ஆகாயம், காற்று, பற்றி எல்லாம் சொன்னேனே, நீரைபோல் நான் சுத்தமாக, பளிங்கு போல், தெளிந்து, இனிமையுடன் இருக்கவேண்டும். எதை உண்டாலும் அது என்னை பாதிக்கக் கூடாது. அக்னி எப்படி எதை ஸ்வாஹா பண்ணினாலும் எந்த வித பாதிப்பும் இன்றி இருக்கிறதோ அப்படி. இரு மரங்கள் ஒன்றோடொன்று உரசி காட்டில் தீ விபத்து ஏற்படுகிறது. உரசாவிட்டால்? ஆகவே அவற்றை அழிக்கும் அக்னி அவற்றுக்குள் தான் இருக்கிறது வெளிப்படவில்லை. . அது போல் எல்லாவற்றிலும், எல்லோரிலும் நான் என்னை காணவேண்டும். அதாவது, என்னிலுள்ள ஆத்மாவை. ''நான், என்'' என்றாலே ஆத்மாவைப் பற்றி தானே. அது நீ தானே. எங்கும் நீரில் சூரியன் தன்னைப் பிரதிபலிப்பதைப் போலெ எங்கும் எதிலும் உன்னை உணர வேண்டும், ஆத்மாவை உணரவேண்டும். நீர் மற்றவையில் உள்ள அழுக்கை நீக்கி, தானும் அழுக்கற்று இருப்பது போல் நான் குற்றம் குறை இன்றி எல்லோரும் இருக்க உதவவேண்டும், என்னிலும் எதுவும் இருக்கக் கூடாது. சந்திரன் தேய்ந்து வளர்வது போல், மாறுவதைப் போல் இந்த தேஹத்துக்கும் எப்போதும் மாறுதல் உண்டு என்று புரிந்து கொள்ளவேண்டும். அது உள்ளே இருக்கும் ஆத்மாவை எந்த விதத்திலும் பாதிக்காது. உலகில் உடல்கள் எல்லோருக்கும் வெவ்வேறாக இருந்த போதிலும் உள்ளே ஒரே ஆத்மா தான் என்று உணரவேண்டும்.

मा बद्ध्यासं तरुण्या गज इव वशया नार्जयेयं धनौघं
हर्तान्यस्तं हि माध्वीहर इव मृगवन्मा मुहं ग्राम्यगीतै: ।
नात्यासज्जेय भोज्ये झष इव बलिशे पिङ्गलावन्निराश:
सुप्यां भर्तव्ययोगात् कुरर इव विभो सामिषोऽन्यैर्न हन्यै ॥६॥

snehaadvyaadhaasta putra vyasanamR^ita kapOtaayitO maa sma bhuuvaM
praaptaM praashnan saheya kshudhamapi shayuvat sindhuvatsyaamagaadhaH |
maapaptaM yOShidaadau shikhini shalabhavat bhR^ingavatsaarabhaagii
bhuuyaasaM kintu tadvaddhanachayanavashaanmaa(a)hamiisha praNesham || 5

ஸ்னேஹாத்³வ்யாதா⁴ஸ்தபுத்ரப்ரணயம்ருதகபோதாயிதோ மா ஸ்ம பூ⁴வம்
ப்ராப்தம் ப்ராஶ்னந்ஸஹேய க்ஷுத⁴மபி ஶயுவத்ஸிந்து⁴வத்ஸ்யாமகா³த⁴꞉ |
மா பப்தம் யோஷிதா³தௌ³ ஶிகி²னி ஶலப⁴வத்³ப்⁴ருங்க³வத்ஸாரபா⁴கீ³
பூ⁴யாஸம் கிந்து தத்³வத்³த⁴னசயனவஶான்மாஹமீஶ ப்ரணேஶம் || 93-5 ||

கிருஷ்ணா, நாராயணா, நான் என்ன கேட்கிறேன் தெரியுமா உன்னை:
பாகவதத்தில் வருமே அந்த புறா நான் அல்ல. அது வேடன் பிடித்த தனது குஞ்சுகளை காப்பாற்ற தானே போய் வலையில் விழுந்து வேடனுக்கு உணவாகியதே அந்த பாசம், நேசம், எனக்கு வேண்டாம். நான் மலைப்பாம்பாக இருக்கிறேன், கிடைத்த போது உண்டு, கிடைக்காதபோது பட்டினி கிடக்கத் தயார். ஆழ் கடல் போல் என்னை அமைதியாக அசைவற்று இருக்கச் செய். தீப ஒளியை பழமென நினைத்து மயங்கி தீயில் வெந்து சாகும் விட்டில் போல் நான் மோகத்தில், காமத்தில் வீழக்கூடாது. தேன் வண்டு போல் நான் எதிலுமே சாரத்தை மட்டும் தேடவேண்டும். அந்த வண்டுபோல் தேனைக் குடிக்கிறேன் என்று அதிலேயே மூழ்கி மாள்வதைப்போல நான் செல்வத்தை தேடி அலைந்து அதை அளவுகடந்து சேர்ப்பதில் என் வாழ்க்கை முடியக்கூடாது.

वर्तेय त्यक्तमान: सुखमतिशिशुवन्निस्सहायश्चरेयं
कन्याया एकशेषो वलय इव विभो वर्जितान्योन्यघोष: ।
त्वच्चित्तो नावबुध्यै परमिषुकृदिव क्ष्माभृदायानघोषं
गेहेष्वन्यप्रणीतेष्वहिरिव निवसान्युन्दुरोर्मन्दिरेषु ॥७॥

maa badhyaasaM taruNyaa gaja iva vashayaa naarjayeyaM dhanaughaM
hartaa(a)nyastaM hi maadhvii hara iva mR^igavanmaa muhaM graamyagiitaiH |
naatyaasajjeya bhOjye jhaSha iva baDishe pingalaavanniraashaH
supyaaM bhartavya yOgaat kurara iva vibhO saamiShO(a)nyairna hanyai || 6

மா ப³த்³த்⁴யாஸம் தருண்யா க³ஜ இவ வஶயா நார்ஜயேயம் த⁴னௌக⁴ம்
ஹர்தான்யஸ்தம் ஹி மாத்⁴வீஹர இவ ம்ருக³வன்மா முஹம் க்³ராம்யகீ³தை꞉ |
நாத்யாஸஜ்ஜேய போ⁴ஜ்யே ஜ²ஷ இவ ப³லிஶே பிங்க³லாவன்னிராஶ꞉ [** ப³டி³ஶே **] ஸுப்யாம் ப⁴ர்தவ்யயோகா³த்குரர இவ விபோ⁴ ஸாமிஷோ(அ)ன்யைர்ன ஹன்யை || 93-6 ||

இன்னும் நான் உனைக் கேட்பது என்ன தெரியுமா:
மதம் கொண்ட, பலம் மிக்க ஆண் காட்டு யானையை பெண் யானையைக் கொண்டு பள்ளத்தில் விழச் செய்வார்களே அது போல், நான் பெண்கள் வலையில் விழக்கூடாது. செல்வம் எனக்கு வேண்டாம். அதை என்னிடம் இருந்து கவர்ந்து செல்ல நிறைய தலைகள் என்னை சுற்றும். அப்படித்தான் தேனீ தான் கஷ்டப்பட்டு சேர்த்த தேனை வேடன் அதைக் கொளுத்தி விட்டு, அடையோடு எடுத்துச் செல்ல இடம் கொடுக்கும். இசையில் மயங்கிய மான் வேடனிடம் சிக்கியதைப் போல் நான் பிறர் இனிய சொற்களில் மயங்காமல் காப்பாற்று. பசியில்லாமலேயே அதிகமான உணவு கிடைப்பதில் மகிழ்ந்து தூண்டில் புழுவுக்காசைப்பட்டு மாண்ட மீனாக நான் இருக்க வேண்டாம். உன் பக்தை பிங்களாவைப் போல் நான் உன் நினைவு ஒன்றிலேயே வேறெதுவும் பற்றி கவலையின்றி நிம்மதியாக தூங்க வேண்டும். சொத்து சுதந்திரம் மேல் ஆசை கொண்டு பிறரால் என் வாழ்வு முடியவேண்டாம். தனது வாயில் கவ்விக்கொண்டிருந்த தவளைக்காக கழுகால் கொல்லப்பட்ட பறவை கதை எனக்கு நினைவிருக்கிறது.

त्वय्येव त्वत्कृतं त्वं क्षपयसि जगदित्यूर्णनाभात् प्रतीयां
त्वच्चिन्ता त्वत्स्वरूपं कुरुत इति दृढं शिक्षये पेशकारात् ।
विड्भस्मात्मा च देहो भवति गुरुवरो यो विवेकं विरक्तिं
धत्ते सञ्चिन्त्यमानो मम तु बहुरुजापीडितोऽयं विशेषात् ॥८॥

varteya tyaktamaanaH sukhamati shishuvannissahaayashchareyaM
kanyaayaa ekasheShO valaya iva vibhO varjitaanyOnyaghOShaH |
tvachchittO naavabudhyai paramiShukR^idiva kshmaabhR^idaayaana ghOShaM
geheShvanya praNiiteShvahiriva nivasaanyundurOrmandireShu || 7

வர்தேய த்யக்தமான꞉ ஸுக²மதிஶிஶுவன்னிஸ்ஸஹாயஶ்சரேயம்
கன்யாயா ஏகஶேஷோ வலய இவ விபோ⁴ வர்ஜிதான்யோன்யகோ⁴ஷ꞉ |
த்வச்சித்தோ நாவபு³த்⁴யை பரமிஷுக்ருதி³வ க்ஷ்மாப்⁴ருதா³யானகோ⁴ஷம்
கே³ஹேஷ்வன்யப்ரணீதேஷ்வஹிரிவ நிவஸான்யுந்து³ரோர்மந்தி³ரேஷு || 93-7 ||

நாராயணா, பிறரின் மதிப்பு, கர்வம், அவமதிப்பு எதுவுமறியாத சிறு குழந்தையாக நான் எப்போதும் சிரித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க அருள் புரி. மற்றவையோடு ஜோடி சேராமல், சத்தம் போடாமல் தனித்து ஒரு பெண் அணிந்திருந்த ஒற்றை வளையல் போல் நான் எவரோடும் இணையாமல் ஆரவாரத்தில் ஈடுபடாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கவேண்டும். ராஜா வந்து அருகில் நிற்பது கூட தெரியாமல் தான் தீட்டிக்கொண்டிருந்த அம்பு மேலேயே கவனமாக இருந்த தட்டானைப் போல நான் உன்மேல் மட்டுமே முழு கவனத்தோடு இருக்க வை. தனக்கென்று ஒரு வீடு இல்லாமல், வீடு எல்லாம் கட்டும் ஆசையில்லாமல், எலிகள் கட்டிய வளைக்குள் இருக்கும் பாம்பாக நான் இருக்க வேண்டும்.

त्वय्येव त्वत्कृतं त्वं क्षपयसि जगदित्यूर्णनाभात् प्रतीयां
त्वच्चिन्ता त्वत्स्वरूपं कुरुत इति दृढं शिक्षये पेशकारात् ।
विड्भस्मात्मा च देहो भवति गुरुवरो यो विवेकं विरक्तिं
धत्ते सञ्चिन्त्यमानो मम तु बहुरुजापीडितोऽयं विशेषात् ॥८॥

tvayyeva tvatkR^itaM taM kshapayasi jagadityuurNa naabhaatpratiiyaaM
tvachchintaa tvatsvaruupaM kuruta iti dR^iDhaM shikshaye peshakaaraat |
viDbhasmaatmaa cha dehO bhavati guruvarO yO vivekaM viraktiM
dhatte sanchintyamaanO mama tu bahurujaa piiDitO(a)yaM visheShaat || 8

த்வய்யேவ த்வத்க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜக³தி³த்யூர்ணனாபா⁴த்ப்ரதீயாம்
த்வச்சிந்தா த்வத்ஸ்வரூபம் குருத இதி த்³ருட⁴ம் ஶிக்ஷேயே பேஶகாராத் |
விட்³ப⁴ஸ்மாத்மா ச தே³ஹோ ப⁴வதி கு³ருவரோ யோ விவேகம் விரக்திம்
த⁴த்தே ஸஞ்சிந்த்யமானோ மம து ப³ஹுருஜாபீடி³தோ(அ)யம் விஶேஷாத் || 93-8 ||

கிருஷ்ணா, தன் எச்சிலில் வலை கட்டும் சிலந்தி கூட எனக்கு பாடம் கற்பித்தது. அதைப்போல் தானே நீயும் உன்னிடமிருந்தே இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டி செய்தவன். புழு குளவியால் கொட்டப்பட்டு குளவியாக மாறியது போல் நான் உன்னையே த்யானம் செயது உன்னிலேயே கலந்துவிடவேண்டும். இந்த தேகத்தை நான் மல ஜலம் அழுக்கு நிறைந்த குப்பையாக கருதவில்லை. அதனிடம் இருந்து நிறைய பாடம் கற்றுக்கொள்ள அதுவும் ஒரு குரு என்று புரிந்து கொண்டேன். அது கொடுக்கும் உபாதையால் நோய்வாய் பட்டு உன்னை நினைக்க, உன்மேல் பக்தி பெற அதுவும் ஒரு காரணம் அல்லவா?

ही ही मे देहमोहं त्यज पवनपुराधीश यत्प्रेमहेतो-
र्गेहे वित्ते कलत्रादिषु च विवशितास्त्वत्पदं विस्मरन्ति ।
सोऽयं वह्नेश्शुनो वा परमिह परत: साम्प्रतञ्चाक्षिकर्ण-
त्वग्जिह्वाद्या विकर्षन्त्यवशमत इत: कोऽपि न त्वत्पदाब्जे ॥९॥

hii hii me dehamOhaM tyaja pavanapuraadhiisha yatperamahetOH
gehe vitte kalatraadiShu cha vivashitaastvatpadaM vismaranti |
sO(a)yaM vahneH shunO vaa paramiha parataH saamprataM chaakshikarNa
tvagjihvaadyaa vikarShantyavashamata itaH kO(a)pi na tvatpadaabje || 9

ஹீ ஹீ மே தே³ஹமோஹம் த்யஜ பவனபுராதீ⁴ஶ யத்ப்ரேமஹேதோ-
ர்கே³ஹே வித்தே கலத்ராதி³ஷு ச விவஶிதாஸ்த்வத்பத³ம் விஸ்மரந்தி |
ஸோ(அ)யம் வஹ்னே꞉ ஶுனோ வா பரமிஹ பரத꞉ ஸாம்ப்ரதஞ்சாக்ஷிகர்ண-
த்வக்³ஜிஹ்வாத்³யா விகர்ஷந்த்யவஶமத இத꞉ கோ(அ)பி ந த்வத்பதா³ப்³ஜே || 93-9 ||

வாதபுரீசா, போதுமடா சாமி போதும். இந்த உடல் மேல் மோகம் போதுமப்பா. அதன் மேல் கொண்ட ஆசை என்னை வீடு, வாசல், பணம் சொத்து, மனைவி, குழந்தைகள், சுற்றம், சொந்தம் பந்தம் என்று நிறைய சிக்கலில் மூழ்கடிக்கிறது. அதனால் உன் தாமரைத்திருவடியை நினைக்கவே நேரமில்லா மல் செய்கிறது. எவ்வளவு தான் தடவித் தடவி, சுகமாக வளர்த்தாலும் இந்த உடல் கடைசியில் நாய் நரி கழுகு நெருப்புக்கு தான் உணவு. உயிரோடு இருக்கும்போதும் அப்பப்பா அது பஞ்சேந்ந்த்ரியங் களின் ஈர்ப்புக்கு இழுத்து என்னை எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது. என்னை உன்னிடம் கொண்டு சேர்க்க வேறு எதுவுமே துணை இல்லையப்பா.

दुर्वारो देहमोहो यदि पुनरधुना तर्हि निश्शेषरोगान्
हृत्वा भक्तिं द्रढिष्ठां कुरु तव पदपङ्केरुहे पङ्कजाक्ष ।
नूनं नानाभवान्ते समधिगतममुं मुक्तिदं विप्रदेहं
क्षुद्रे हा हन्त मा मा क्षिप विषयरसे पाहि मां मारुतेश ॥१०॥

durvaarO dehamOhO yadi punaradhunaa tarhi nishsheSharOgaan
hR^itvaa bhaktiM draDhiShThaaM kuru tava padapankeruhe pankajaaksha |
nuunaM naanaabhavaante samadhigatamimaM muktidaM vipradehaM
kshudre haa hanta maa maa kshipa viShayarase paahi maaM maarutesha10

து³ர்வாரோ தே³ஹமோஹோ யதி³ புனரது⁴னா தர்ஹி நிஶ்ஶேஷரோகா³ன்
ஹ்ருத்வா ப⁴க்திம் த்³ரடி⁴ஷ்டா²ம் குரு தவ பத³பங்கேருஹே பங்கஜாக்ஷ |
நூனம் நானாப⁴வாந்தே ஸமதி⁴க³தமிமம் முக்தித³ம் விப்ரதே³ஹம்
க்ஷுத்³ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷயரஸே பாஹி மாம் மாருதேஶ || 93-10 ||

எண்டே குருவாயூரப்பா, இந்த உடம்பு, தேகத்தின் மீது எனக்குள்ள பற்று தவிர்க்க முடியாததாக இருக்கிறது. உடனே என் நோய்வாய் எல்லாம் தீர்த்து என் மனம் உன் திருவடிகளில் லயித்து அசைக்கமுடியாத பக்தியில் நான் திளைக்க அருள் புரிவாய். எனக்கு நீ கொடுத்த வாய்ப்பு அற்புதம். எளிதில் அடைய முடியாத இந்த ப்ராமண உடம்பு,பல பிறவிகளுக்கு அப்புறம் கிடைத்தது இதை அதன் மதிப்பறியாமல் கீழ்த்தர உணர்வுகளில் ஈடுபட வைத்து நான் துன்பப்படாமல் உன்னருள் பெற வையப்பா.