Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 21
21. தசாவதாரம், நவ கண்டங்கள் சப்த
த்வீபங்கள்...

मध्योद्भवे भुव इलावृतनाम्नि वर्षे
गौरीप्रधानवनिताजनमात्रभाजि ।
शर्वेण मन्त्रनुतिभि: समुपास्यमानं
सङ्कर्षणात्मकमधीश्वर संश्रये त्वाम् ॥१॥

madhyOdbhave bhuva ilaavR^ita-naamni varShe
gauriipradhaana-vanitaajanamaatra-bhaaji |
sharveNa mantranutibhissamupaasyamaanaM
sankarShaNaatmaka-madhiish
varasamshraye tvaam || 1

மத்⁴யோத்³ப⁴வே பு⁴வ இலாவ்ருதனாம்னி வர்ஷே
கௌ³ரீப்ரதா⁴னவனிதாஜனமாத்ரபா⁴ஜி |
ஶர்வேண மந்த்ரனுதிபி⁴꞉ ஸுமுபாஸ்யமானம்
ஸங்கர்ஷணாத்மகமதீ⁴ஶ்வர ஸம்ஶ்ரயே த்வாம் || 21-1 ||

கிருஷ்ணா, என் தெய்வமே, நீயே அடைக்கலம் என்று உன் திருவடிகளை பிடித்துக் கொண்டேன். நீ சாதாரணமானவனா? பரமேஸ்வரனே உன்னை போற்றி புகழ்ந்து ஜபிக்கிறார். பாடுகிறார் . இந்த பிரபஞ்சத்தில் நவ கண்டங்கள், ஏழு த்வீபங்கள் (நீர் சூழ்ந்த நிலப் பகுதிகள்) உள்ளன. வர் ஷங்கள் என்பது தேசங்கள்: அவை,

ஜம்பு த்வீபத்தில் - பாரத வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், ஹரி வர்ஷம், இலவ்ருத வர்ஷம், ரம்யக வர்ஷம், ஸ்வேத வர்ஷம், ஸ்ருங்காவத் வர்ஷம்.

ப்ளக்ஷ த்வீபத்தில் - கோமேத வர்ஷம், ஷிஷிர வர்ஷம், சுகோதய வர்ஷம், அனந்த வர்ஷம், ஷிவ வர்ஷம், க்ஷேமக வர்ஷம், துருவ வர்ஷம்,

ஷல்மல த்வீபத்தில் - ஷ்வேத வர்ஷம், லோஹித வர்ஷம், ஜீமூத வர்ஷம், ஹரித வர்ஷம், மானஸ வர்ஷம், ஸுஹ்ருத வர்ஷம்,

குஸ த்வீபத்தில் - உத்பித வர்ஷம், வேணுமண்டல வர்ஷம், விரத வர்ஷம், லவண வர்ஷம், த்ருதி மத் வர்ஷம், பிரபாகர வர்ஷம், கபில வர்ஷம்.

க்ரௌஞ்ச த்வீபத்தில் - குஷல வர்ஷம், மனோனுக வர்ஷம், உஷ்ண வர்ஷம், பீவரக வர்ஷம், அந்தகார வர்ஷம், முனிதேச வர்ஷம், துந்துபிஸ்வன வர்ஷம்.

ஷக த்வீபத்தில் - ஜலத வர்ஷம், சுகுமார வர்ஷம் கௌமார வர்ஷம், மணீவாக வர்ஷம், குசுமோத்தார வர்ஷம் , மோதக வர்ஷம், மஹாத்ரும வர்ஷம்,

புஷ்கர த்வீபத்தில் - மஹாவீத வர்ஷம், தடகி வர்ஷம்
இதெல்லாம் எங்கிருக்கிறது என்று கேட்காதீர்கள். நீயும் நானும் ஜம்பு திவீப பாரத வர்ஷத்தை சேர்ந்தவர்கள். பூமியின் மத்தியில் உள்ளது இலாவ்ருத வர்ஷம். பெண்கள் மட்டுமே அங்கு வசிப்பவர்கள். தலைவி பரமேஸ்வரன் பத்னி பார்வதி தேவி. சக்தி. .

भद्राश्वनामक इलावृतपूर्ववर्षे
भद्रश्रवोभि: ऋषिभि: परिणूयमानम् ।
कल्पान्तगूढनिगमोद्धरणप्रवीणं
ध्यायामि देव हयशीर्षतनुं भवन्तम् ॥२॥

bhadraashvanaamaka ilaavR^itapuurvavarShe
bhadrashravObhirR^IShibhiH pariNuuyamaanam |
kalpaantaguuDha nigamOddharaNa praviiNaM
dhyaayaami deva hayashiirShatanuM bhavantam || 2

ப⁴த்³ராஶ்வனாமக இலாவ்ருதபூர்வவர்ஷே
ப⁴த்³ரஶ்ரவோபி⁴ர்ருஷிபி⁴꞉ பரிணூயமானம் |
கல்பாந்தகூ³ட⁴னிக³மோத்³த⁴ரணப்ரவீணம்
த்⁴யாயாமி தே³வ ஹயஶீர்ஷதனும் ப⁴வந்தம் || 21-2 ||

நாராயணா, உன்னை எப்போதும் தியானித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஹயக்ரீவ ஸ்வரூபமாக வந்த ஹரி. உன்னை பதராஸ்வனா ரிஷிகள் போற்றுகிறார்கள். இந்த பத்ராஸ்வனம் இலாவ்ருத வர்ஷத்தின் கிழக்கே உள்ளது. பிரளயத்தில் மூழ்கிய வேதங்களை மீட்கப்பட்டதற்கு இவர்களும் ஏதோ ஒரு விதத்தில் காரணமில்லையா? எளிதான காரியமா அது?

ध्यायामि दक्षिणगते हरिवर्षवर्षे
प्रह्लादमुख्यपुरुषै: परिषेव्यमाणम् ।
उत्तुङ्गशान्तधवलाकृतिमेकशुद्ध-
ज्ञानप्रदं नरहरिं भगवन् भवन्तम् ॥३॥

dhyaayaami dakshiNagate harivarShavarShe
prahlaadamukhyapuruShaiH pariShevyamaaNam |
uttunga shaanta dhavalaakR^iti-mekashuddhaj~
naanapradaM narahariM bhagavan bhavantam || 3

த்⁴யாயாமி த³க்ஷிணக³தே ஹரிவர்ஷவர்ஷே
ப்ராஹ்லாத³முக்²யபுருஷை꞉ பரிஷேவ்யமாணம் |
உத்துங்க³ஶாந்தத⁴வலாக்ருதிமேகஶுத்³த⁴-
ஜ்ஞானப்ரத³ம் நரஹரிம் ப⁴க³வன் ப⁴வந்தம் || 21-3 ||

நாராயணா, உன்னை தியானிக்கிறேன். பிரஹலாதன் போன்ற பக்தர்களால் எப்போதும் துதிக்கப் படும் நரசிம்மா, நீ அப்போது போல் கோபமாக இப்போது இல்லையே. அமைதியான வெண்மையான, கம்பீரமானவனே, ஞான ஸ்வரூபனே, ஹரிவர்ஷத்த்தில் வாசம் செய்பவனே. என்று போற்றுகிறார் நம்பூதிரி. இந்த ஹரி வர்ஷம் இலவர்ஷத்தின் தெற்கே உள்ளது.

वर्षे प्रतीचि ललितात्मनि केतुमाले
लीलाविशेषललितस्मितशोभनाङ्गम् ।
लक्ष्म्या प्रजापतिसुतैश्च निषेव्यमाणं
तस्या: प्रियाय धृतकामतनुं भजे त्वाम् ॥४॥

varShe pratiichi lalitaatmani ketumaale
liilaavisheSha-lalita-smita-shObhanaangam |
lakshmyaa-prajaapatisutaishcha niShevyamaaNaM
tasyaaH priyaaya dhR^itakaamatanuM bhaje tvaam || 4

வர்ஷே ப்ரதீசி லலிதாத்மனி கேதுமாலே
லீலாவிஶேஷலலிதஸ்மிதஶோப⁴னாங்க³ம் |
லக்ஷ்ம்யா ப்ரஜாபதிஸுதைஶ்ச நிஷேவ்யமாணம்
தஸ்யா꞉ ப்ரியாய த்⁴ருதகாமதனும் ப⁴ஜே த்வாம் || 21-4 ||

குருவாயூரப்பா, நாராயணா, நான் உன்னை பாடுகிறேன். சுந்தர ஸ்வரூபமானவனே தெய்வீக லீலைகளில் ஈடுபடுபவனே, உன் புன்னகைக்கு ஈடு இணையே இல்லை. அதன் வசீகரத்தில் மயங்காத பக்தர்கள் உண்டா? மஹாலக்ஷ்மி, பிரஜாபதியின் புத்ரர்கள் அனைவராலும் வணங்கப்படுபவனே, கேதுமாலா கண்டத்தில் உறைபவனே உன்னைத் தொழுது வணங்குகிறேன் என்கிறார் நம்பூத்ரி. பிரஜாபதியின் புத்ரர்கள் வாழும் இந்த கேதுமாலா கண்டம் இலவர்ஷத்துக்கு மேற்கே உள்ளது.

रम्ये ह्युदीचि खलु रम्यकनाम्नि वर्षे
तद्वर्षनाथमनुवर्यसपर्यमाणम् ।
भक्तैकवत्सलममत्सरहृत्सु भान्तं
मत्स्याकृतिं भुवननाथ भजे भवन्तम् ॥५॥

ramye(a)pyudiichi khalu ramyakanaamni varShe
tadvarShanaatha manuvarya saparyamaaNam |
bhaktaikavatsalamamatsarahR^itsu bhaantaM
matsyaakR^itiM bhuvananaatha bhaje bhavantam || 5

ரம்யே ஹ்யுதீ³சி க²லு ரம்யகனாம்னி வர்ஷே
தத்³வர்ஷனாத²மனுவர்யஸபர்யமாணம் |
ப⁴க்தைகவத்ஸலமமத்ஸரஹ்ருத்ஸு பா⁴ந்தம்
மத்ஸ்யாக்ருதிம் பு⁴வனநாத² ப⁴ஜே ப⁴வந்தம் || 21-5 ||

பிரபஞ்ச நாயகனே, குருவாயூரப்பா, மத்ஸ்யாவதாரம் எடுத்தவனே , வைவஸ்த மனுவால் பூஜிக்கப்படுபவனே, பக்த வத்சலா, பக்தர்களை விரும்புவோர்க்கு தலைவா, பொறாமை அழுக்காறு இல்லாத மனம் கொண்ட வர்களின் ஹ்ருதயத்தில் ஒளிர்பவனே. ரம்யக கண்டத்தில் உறைபவனே, உன்னை அடிபணிகிறேன். ரம்யக கண்டம் இலவர்ஷத்தின் வடக்கே உள்ள பிரதேசம்.

वर्षं हिरण्मयसमाह्वयमौत्तराह-
मासीनमद्रिधृतिकर्मठकामठाङ्गम् ।
संसेवते पितृगणप्रवरोऽर्यमा यं
तं त्वां भजामि भगवन् परचिन्मयात्मन् ॥६॥

varShaM hiraNmaya samaahvayamauttaraahamaasiinamadri
dhR^iti karmaThakaamaThaangam |
samsevate pitR^igaNapravarO(a)ryamaa yaM
taM tvaaM bhajaami bhagavan parachinmayaatman || 6

வர்ஷம் ஹிரண்மயஸமாஹ்வயமௌத்தராஹ-
மாஸீனமத்³ரித்⁴ருதிகர்மட²காமடா²ங்க³ம் |
ஸம்ஸேவதே பித்ருக³ணப்ரவரோ(அ)ர்யமா யம்
தம் த்வாம் ப⁴ஜாமி ப⁴க³வன் பரசின்மயாத்மன் || 21-6 ||

கூர்மமாக அவதாரம் எடுத்த குருவாயூரப்பா, உன்னை போற்றி பாடுகிறேன் கேள். உன்னால் எளிதில் மந்தர மலையை முதுகில் சுமக்க முடிந்தது. பித்ரு லோகத்தில் இருக்கும் பித்ரு தேவதைகளுக்கு தலைவனான அர்யமான் உன்னை எப்போதும் தொழுது வணங்குபவன். அவனும் அவனைத் தலைவனாக கொண்ட பித்ருகணங்களும் ஹிரண்மய கண்டத்தில் இருப்பவர்கள். இந்த ஹிரண்மய கண்டம் இலவர்ஷத்தின் வடக்கே உள்ளது.


किञ्चोत्तरेषु कुरुषु प्रियया धरण्या
संसेवितो महितमन्त्रनुतिप्रभेदै: ।
दंष्ट्राग्रघृष्टघनपृष्ठगरिष्ठवर्ष्मा
त्वं पाहि बिज्ञनुत यज्ञवराहमूर्ते ॥७॥

kiM chOttareShu kuruShu priyayaa dharaNyaa
samsevitOmahitamantranuti prabhedaiH |
danShTraagraghR^iShTaghanapR^iShTha gariShThavarShmaa
tvaM paahi vij~nanuta yaj~navaraahamuurte || 7

கிம் சோத்தரேஷு குருஷு ப்ரியயா த⁴ரண்யா
ஸம்ஸேவிதோ மஹிதமந்த்ரனுதிப்ரபே⁴தை³꞉ |
த³ம்ஷ்ட்ராக்³ரக்⁴ருஷ்டக⁴னப்ருஷ்ட²க³ரிஷ்ட²வர்ஷ்மா
த்வம் பாஹி விஜ்ஞனுத யஜ்ஞவராஹமூர்தே || 21-7 ||

அடுத்தது நான் உன்னை நமஸ்கரிப்பது குருவாயூரப்பா, யஞ வராஹ மூர்த்தியாக. பூவராஹனாக. ஆஹா எவ்வளவு சாதுர்யமாக நீ ஹிரண்யாக்ஷனை தேடி கண்டுபிடித்து ஸ்வேத வராஹமாக கடலில் பாய்ந்து பாதாளத்தில் அவன் ஒளித்து வைத்திருந்த பூமியை அவனிடமிருந்து மீட்டு அவனை ஹா கடல் அடியே இருந்து மேலே கொண்டுவந்தாய் . பூலோகமும் இதர லோகங்களும் வணங்கும் தெய்வமே, உனது வானளாவிய கோரைப் பற்களும் பருத்த சரீரமும் மனதில் ஒரு அச்சத்தையும் பக்தியையும் ஒரே சமயத்தில் தந்தாலும் உன் கண்களில் உள்ள கருணை கொடுக்கும் தைரியத்தில் பக்தர்கள் உன்னைப் பார்த்து வணங்குகிறார்கள்.

याम्यां दिशं भजति किंपुरुषाख्यवर्षे
संसेवितो हनुमता दृढभक्तिभाजा ।
सीताभिरामपरमाद्भुतरूपशाली
रामात्मक: परिलसन् परिपाहि विष्णो ॥८॥

yaamyaaM dishaM bhajati kimpuruShaakhyavarShe
samsevitO hanumataa dR^iDhabhaktibhaajaa |
siitaabhiraamaparamaadbhutaruupashaalii
raamaatmakaH parilasan paripaahi viShNO || 8

யாம்யாம் தி³ஶம் ப⁴ஜதி கிம்புருஷாக்²யவர்ஷே
ஸம்ஸேவிதோ ஹனுமதா த்³ருட⁴ப⁴க்திபா⁴ஜா |
ஸீதாபி⁴ராமபரமாத்³பு⁴தரூபஶாலீ
ராமாத்மக꞉ பரிலஸன்பரிபாஹி விஷ்ணோ || 21-8 ||

அப்பனே, நீ ராமனாக அவதரித்தாய். பக்த ஹனுமான் உனக்கு வலது கையாக சேவை செய்தான். அழகு என்றால் அதன் இன்னொரு பெயர் ராமன் என்றவாறு நீ சிறந்த புத்திமான், பலவான், அழகன் , சத்யம் தவறாதவனாக பக்தர்கள் மனம் மகிழ்ந்து வேண்டி வணங்கும் தேவாதி தேவன் ஸ்ரீ மஹா விஷ்ணு. இப்படி நீ வசிக்கும் இடம் ஒரு கண்டம் அதற்கு கிம்புருஷகண்டம் என்று பெயர். அது ஹரிவர்ஷத்துக்கு தெற்கே உள்ளது.

श्रीनारदेन सह भारतखण्डमुख्यै-
स्त्वं साङ्ख्ययोगनुतिभि: समुपास्यमान: ।
आकल्पकालमिह साधुजनाभिरक्षी
नारायणो नरसख: परिपाहि भूमन् ॥९॥

shriinaaradena saha bhaaratakhaNDamukhyai
stvaM saankhyayOganutibhiH samupaasyamaanaH |
aakalpakaalamiha saadhujanaabhirakshii
naaraayaNO narasakhaH paripaahi bhuuman || 9

ஶ்ரீனாரதே³ன ஸஹ பா⁴ரதக²ண்ட³முக்²யை-
ஸ்த்வம் ஸாங்க்²யயோக³னுதிபி⁴꞉ ஸமுபாஸ்யமான꞉ |
ஆகல்பகாலமிஹ ஸாது⁴ஜனாபி⁴ரக்ஷீ
நாராயணோ நரஸக²꞉ பரிபாஹி பூ⁴மன் || 21-9 ||

நாராயணா, நீ நரனாக அவதரித்தாய். நாரதாதி முனிவர்கள் போற்றி வணங்கும் தெய்வமே, நர நாராயணா, சாங்கிய , யோக மார்கத்தில் எல்லோருக்கும் அருள்புரிபவனே. பிரளய காலத்தில் அடைக்கலம் கொடுத்தவனே, பாரத வர்ஷத்தில் வசிப்பவனே . உன்னை நமஸ்கரிக்கிறேன்.

Dasakam: 21-- Shlokam:10
प्लाक्षेऽर्करूपमयि शाल्मल इन्दुरूपं
द्वीपे भजन्ति कुशनामनि वह्निरूपम् ।
क्रौञ्चेऽम्बुरूपमथ वायुमयं च शाके
त्वां ब्रह्मरूपमपि पुष्करनाम्नि लोका: ॥१०॥

plaakshe(a)rkaruupamayi shaalmala induruupaM
dviipe bhajanti kushanaamani vahniruupam |
krau~nche(a)mburuupamatha vaayumayaM cha shaake
tvaaM brahmaruupamayi puShkaranaamni lOkaaH || 10

ப்லாக்ஷே(அ)ர்கரூபமயி ஶால்மல இந்து³ரூபம்
த்³வீபே ப⁴ஜந்தி குஶனாமனி வஹ்னிரூபம் |
க்ரௌஞ்சே(அ)ம்பு³ரூபமத² வாயுமயம் ச ஶாகே
த்வாம் ப்³ரஹ்மரூபமயி புஷ்கரனாம்னி லோகா꞉ || 21-10 ||

கையில் கலப்பையுடன் காட்சி தந்த ஹலதாரி , பலராமனாக நீ ப்ளக்ஷ த்வீபத்தில் , சூரியனாக ஜொலித்தாய். சால்மல தீவில் சந்திரனாக ஒளி வீசினாய். க்ரூஸா தீவில் அக்னியாக ஜ்வாலை வீசினாய். க்ரௌஞ்ச தீவில் ஜாலமாக ஓடினாய், புஷ்கர தீவினில் ப்ரம்மமாய் காட்சி அளித்தாய் , சாக தீவில் வாயுவாக வீசினாய், எல்லா த்வீபங்களிலும் இவ்வாறு பலப்பல தேவதைகளாக நீ வேண்டுவோர் மனம் இனிக்க அருள் புரிபவன். என் ஐயனே, குருவாயூரப்பா.

सर्वैर्ध्रुवादिभिरुडुप्रकरैर्ग्रहैश्च
पुच्छादिकेष्ववयवेष्वभिकल्प्यमानै: ।
त्वं शिंशुमारवपुषा महतामुपास्य:
सन्ध्यासु रुन्धि नरकं मम सिन्धुशायिन् ॥११॥

sarvai-dhruvaadibhiruDuprakarairgrahaishcha
puchChaadi keShvavayaveShvabhi kalpyamaanaiH |
tvaM shimshumaaravapuShaa mahataamupaasyaH
sandhyaasu rundhi narakaM mama sindhushaayin || 11

ஸர்வைர்த்⁴ருவாதி³பி⁴ருடு³ப்ரகரைர்க்³ரஹைஶ்ச
புச்சா²தி³கேஷ்வவயவேஷ்வபி⁴கல்ப்யமானை꞉ |
த்வம் ஶிம்ஶுமாரவபுஷா மஹதாமுபாஸ்ய꞉
ஸந்த்⁴யாஸு ருந்தி⁴ நரகம் மம ஸிந்து⁴ஶாயின் || 21-11 ||

என்னப்பா, உண்ணி கிருஷ்ணா என்னை நரகத்திலிருந்து காப்பாற்று. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமா, ஆகாசத்தை ஒரு பெரிய சிம்சுமாரம் என்ற பெயர்கொண்ட மத்ஸ்யமாக சொல்வதுண்டு. உன்னை அந்த ரூபத்தில் வணங்குகிறேன். ஆகாசமே உருவான அந்த மத்ஸ்யத்தின் கண்ணாக துருவன் , மற்ற நக்ஷத்ரங்கள் கிரஹங்கள் அந்த மத்ஸ்யத்தின் உடலின் பல பாகங்களாக ஒளி வீசுகிறது.

पातालमूलभुवि शेषतनुं भवन्तं
लोलैककुण्डलविराजिसहस्रशीर्षम् ।
नीलाम्बरं धृतहलं भुजगाङ्गनाभि-
र्जुष्टं भजे हर गदान् गुरुगेहनाथ ॥१२॥

paataalamuulabhuvi sheShatanuM bhavantaM
lOlaika kuNDala viraaji sahasrashiirSham |
niilaambaraM dhR^itahalaM bhujagaanganaabhirjuShTaM
bhaje hara gadaan gurugehanaatha ||12

பாதாலமூலபு⁴வி ஶேஷதனும் ப⁴வந்தம்
லோலைககுண்ட³லவிராஜிஸஹஸ்ரஶீர்ஷம் |
நீலாம்ப³ரம் த்⁴ருதஹலம் பு⁴ஜகா³ங்க³னாபி⁴-
ர்ஜுஷ்டம் ப⁴ஜே ஹர க³தா³ன்கு³ருகே³ஹனாத² || 21-12

உன்னை எப்படி பாடினாலும் என்னால் உன்னை ஆதிசேஷன் ஸ்வரூபமாக பாடாமல் இருக்க முடியாதே குருவாயூரப்பா. கையில் கலப்பை ஏந்திய பலராமன் . ஒரு காதில் மட்டும் வளையத்தோடு ஆயிரம் படங்கள் எடுத்தாடும் அழகே அழகு. நீல வண்ண ஆடை உடுத்து நீ கடல் போலவே காட்சி அளிப்பதும், ஆயிரக்கணக்கான நாக கன்னிகைகள் உனக்கு பணிவிடை செய்வதும் ஒரு கண்கொள்ளாக் காட்சி. நாகலோகத்தின் ஹ்ருதயம் நீ தான். பாவன குரு பவன புராதீஸா, என் நோயையும் குணப்படுத்தி என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று கெஞ்சுகிறேன்.