Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12
12. பூமியும் பூவராஹனும்

स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो
दृष्ट्वा महीमसमये सलिले निमग्नाम् ।
स्रष्टारमाप शरणं भवदङ्घ्रिसेवा-
तुष्टाशयं मुनिजनै: सह सत्यलोके ॥१॥

svāyaṁbhuvō manurathō janasargaśīlō
dr̥ṣṭvā mahīmasamayē salilē nimagnām |
sraṣṭāramāpa śaraṇaṁ bhavadaṅghrisēvā-
tuṣṭāśayaṁ munijanaiḥ saha satyalōkē || 12-1 ||

ஸ்வாயம்பு⁴வோ மனுரதோ² ஜனஸர்க³ஶீலோ
த்³ருஷ்ட்வா மஹீமஸமயே ஸலிலே நிமக்³னாம் |
ஸ்ரஷ்டாரமாப ஶரணம் ப⁴வத³ங்க்⁴ரிஸேவா-
துஷ்டாஶயம் முனிஜனை꞉ ஸஹ ஸத்யலோகே || 12-1 ||

குருவாயூரப்பா , ஹிரண்யாக்ஷன் பூமா தேவியைப் பாய்போல் சுருட்டி தூக்கிக்கொண்டு போய் கடலுக்கடியே மறைத்து வைத்தான் என்று தெரிந்துகொண்டேன். அப்போது என்ன நடந்தது? மனிதர்கள் உலகில் தோன்ற காரணமாயிருந்த முதல் மனு, ஸ்வயம்பு மனு, ஏன் காரணமில்லாமல் பூமி ஜலத்தில் மூழ்குகிறது என்று கவலை கொண்டார். அகாலத்தில் இப்படி ஏன் பூமி ஜலத்தில் மூழ்குவானேன் ? உடனே, மனு முனிவர்களுடன், எப்போதும் உன் திருவடி தாமரையில் சேவித்துக்கொண்டிருக்கும் ப்ரம்மாவைக் காண ஸத்யலோகம் சென்றார்.

कष्टं प्रजा: सृजति मय्यवनिर्निमग्ना
स्थानं सरोजभव कल्पय तत् प्रजानाम् ।
इत्येवमेष कथितो मनुना स्वयंभू: -
रम्भोरुहाक्ष तव पादयुगं व्यचिन्तीत् ॥ २ ॥

kaṣṭaṁ prajāḥ sr̥jati mayyavanirnimagnā
sthānaṁ sarōjabhava kalpaya tatprajānām |
ityēvamēṣa kathitō manunā svayaṁbhūḥ
raṁbhōruhākṣa tava pādayugaṁ vyacintīt || 12-2 ||

கஷ்டம் ப்ரஜா꞉ ஸ்ருஜதி மய்யவனிர்னிமக்³னா
ஸ்தா²னம் ஸரோஜப⁴வ கல்பய தத்ப்ரஜானாம் |
இத்யேவமேஷ கதி²தோ மனுனா ஸ்வயம்பூ⁴꞉
ரம்போ⁴ருஹாக்ஷ தவ பாத³யுக³ம் வ்யசிந்தீத் || 12-2 ||

''என்ன இக்கட்டு இது? சிருஷ்டியின் ஆரம்பத்திலேயே பூமி நீருக்குள் மூழ்கிவிட்ட தே. பிரும்மதேவா ! மக்களுக்கு வாழ இடம் வேண்டுமே . பூமியை மீட்கவேண்டும் என்று பிரார்த்தித்தார் ஸ்வயம்பு மனு. . பிரும்மாவுக்கு தெரியும் இது கிருஷ்ணா உன்னால் தான் நடக்க முடியும் என்று. ஆகவே ப்ரம்மா உன்னிடம் பூமியை மீட்டுத் தர வேண்டிக்கொண்டார்.

हा हा विभो जलमहं न्यपिबं पुरस्ता-
दद्यापि मज्जति मही किमहं करोमि ।
इत्थं त्वदङ्घ्रियुगलं शरणं यतोऽस्य
नासापुटात् समभव: शिशुकोलरूपी ।३॥

hā hā vibhō jalamahaṁ nyapibaṁ purastā-
dadyāpi majjati mahī kimahaṁ karōmi |
itthaṁ tvadaṅghriyugalaṁ śaraṇaṁ yatō:’sya
nāsāpuṭātsamabhavaḥ śiśukōlarūpī || 12-3 ||

ஹா ஹா விபோ⁴ ஜலமஹம் ந்யபிப³ம் புரஸ்தா-
த³த்³யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி |
இத்த²ம் த்வத³ங்க்⁴ரியுக³லம் ஶரணம் யதோ(அ)ஸ்ய
நாஸாபுடாத்ஸமப⁴வ꞉ ஶிஶுகோலரூபீ || 12-3 ||

ப்ரம்மா நாராயணனிடம் உடனே சென்று, ப்ரபோ! பூமியைக் காணவில்லை. ஒருவேளை நீரில் மூழ்கி இருக்குமோ என்று நான் முதலிலேயே நீரை வடிக்க குடிக்க ஏற்பாடு செய்தும் பயனில்லை. பூமி பாதாளத்தில் நீரில் எங்கு மூழ்கி விட்டதென்று அறிய முடியவில்லை. என்ன செய்வது? நீ தான் வழிகாட்ட வேண்டும் நாராயணா, என்று உன் திருவடித் தாமரையை தஞ்சம் அடைந்தார். அப்போது, உன்னுடைய சங்கல்பத்தால், பிரும்மாவினுடைய மூக்கிலிருந்து பன்றிக் குட்டியின் வடிவில் நீ அவதரித்தாய். அது நீ எடுத்த முடிவு. எப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிந்தவனாயிற்றே நீ.

अङ्गुष्ठमात्रवपुरुत्पतित: पुरस्तात्
भोयोऽथ कुम्भिसदृश: समजृम्भथास्त्वम् ।
अभ्रे तथाविधमुदीक्ष्य भवन्तमुच्चै -
र्विस्मेरतां विधिरगात् सह सूनुभि: स्वै: ॥४॥

aṅguṣṭhamātravapurutpatitaḥ purastāt
bhūyō:’tha kuṁbhisadr̥śaḥ samajr̥ṁbhathāstvam |
abhrē tathāvidhamudīkṣya bhavantamuccai-
rvismēratāṁ vidhiragātsaha sūnubhiḥ svaiḥ || 12-4 ||

அங்கு³ஷ்ட²மாத்ரவபுருத்பதித꞉ புரஸ்தாத்
பூ⁴யோ(அ)த² கும்பி⁴ஸத்³ருஶ꞉ ஸமஜ்ரும்ப⁴தா²ஸ்த்வம் |
அப்⁴ரே ததா²வித⁴முதீ³க்ஷ்ய ப⁴வந்தமுச்சை-
ர்விஸ்மேரதாம் விதி⁴ரகா³த்ஸஹ ஸூனுபி⁴꞉ ஸ்வை꞉ || 12-4 ||

தோன்றிய சமயம் கிருஷ்ணா நீ சிறிய உருவில் இருந்தாய். அதிக பக்ஷம் கட்டை விரல் அளவே இருந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில் யானையின் அளவு வளர்ந்துவிட்டாய். வான் உயரத்திற்கு வளர்ந்த உன்னைப் பார்த்த பிரும்மா, ஸ்வயம்பு மனு மற்றும் அனைத்து தேவர்களும் முனிவர்களும் திகைப்பிலும் வியப்பிலும் அதிசயித்தபடி நின்றனர்.

कोऽसावचिन्त्यमहिमा किटिरुत्थितो मे
नासापुटात् किमु भवेदजितस्य माया ।
इत्थं विचिन्तयति धातरि शैलमात्र:
सद्यो भवन् किल जगर्जिथ घोरघोरम् ॥५॥

kō:’sāvacintyamahimā kiṭirutthitō mē
nāsāpuṭātkimu bhavēdajitasya māyā |
itthaṁ vicintayati dhātari śailamātraḥ
sadyō bhavankila jagarjitha ghōraghōram || 12-5 ||

கோ(அ)ஸாவசிந்த்யமஹிமா கிடிருத்தி²தோ மே
நாஸாபுடாத்கிமு ப⁴வேத³ஜிதஸ்ய மாயா |
இத்த²ம் விசிந்தயதி தா⁴தரி ஶைலமாத்ர꞉
ஸத்³யோ ப⁴வன்கில ஜக³ர்ஜித² கோ⁴ரகோ⁴ரம் || 12-5 ||

பிரம்மனுக்கு ஆச்சர்யம். எப்படி என் மூக்கிலிருந்து பன்றிக் குட்டி ஒன்று வெளிவந்தது. ஏன்? அளவிட முடியாத மகிமை உடைய இந்தப் பன்றிக் குட்டி, பின்னர் வானளாவி நிற்கிறது. இது சாதாரண விஷயமில்லை. எல்லாம் என் அருமைத் தந்தையாகிய நாராயணன் செயல். வேறு யாராகவும் இருக்க வழி இல்லை. நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று அதனால் தான் நாம் அடிக்கடி சொல்கிறோம்.
இது பகவானுடைய மாயையாக இருக்கலாம் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு, என்று பிரும்மன் யோசித்து சமாதானம் அடைந்தார். அப்போது, மலையைப் போல் தோன்றிய பன்றி ஆக்ரோஷத்தோடு பயங்கரமாக கர்ஜித்தது .

तं ते निनादमुपकर्ण्य जनस्तप:स्था:
सत्यस्थिताश्च मुनयो नुनुवुर्भवन्तम् ।
तत्स्तोत्रहर्षुलमना: परिणद्य भूय-
स्तोयाशयं विपुलमूर्तिरवातरस्त्वम् ॥६॥

தம் தே நினாத³முபகர்ண்ய ஜனஸ்தப꞉ஸ்தா²꞉
ஸத்யஸ்தி²தாஶ்ச முனயோ நுனுவுர்ப⁴வந்தம் |
தத்ஸ்தோத்ரஹர்ஷுலமனா꞉ பரிணத்³ய பூ⁴ய-
ஸ்தோயாஶயம் விபுலமூர்திரவாதரஸ்த்வம் || 12-6 ||

எங்கும் எதிரொலித்த அந்த வராஹ கர்ஜனையைக் கேட்ட ஜனலோகம், தபோலோகம்,ஸத்யலோகம் ஆகியவற்றில் உள்ள முனிவர்கள் இது பரமாத்மா உன் குரல் என்று உன்னை ஸ்தோத்ரம் செய்தார்கள். அவர்களுக்கு ''பயப்படவேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்ற ஆறுதலைத் தந்தது அந்த குரல். அடுத்த கணமே சந்தோஷமாக நாராயணன் வராக ரூபத்தில் சமுத்ரத்திற்குள் பாய்ந்தார்.

ऊर्ध्वप्रसारिपरिधूम्रविधूतरोमा
प्रोत्क्षिप्तवालधिरवाङ्मुखघोरघोण: ।
तूर्णप्रदीर्णजलद: परिघूर्णदक्ष्णा
स्तोतृन् मुनीन् शिशिरयन्नवतेरिथ त्वम् ॥७॥

ஊர்த்⁴வப்ரஸாரிபரிதூ⁴ம்ரவிதூ⁴தரோமா
ப்ரோத்க்ஷிப்தவாலதி⁴ரவாங்முக²கோ⁴ரகோ⁴ண꞉ |
தூர்ணப்ரதீ³ர்ணஜலத³꞉ பரிகூ⁴ர்ணத³க்ஷ்ணா
ஸ்தோத்ரூன்முனீன் ஶிஶிரயன்னவதேரித² த்வம் || 12-7 ||

சிலிர்த்த ரோமங்கள், தாமிர வர்ணம், முறுக்கிக்கொண்டு உயரமாக நிமிர்த்தப்பட்ட வாலுடனும், பலம் மிகுந்த உடலுடன், முகத்தில் வாயருகே ரெண்டு பக்கத்திலும் கூர்மையான தடித்த உறுதியான மேல் நோக்கி வளர்ந்த பெரிய கோரைப்பற்களுடன் பலமிகுந்த வாளிப்பான தோளுடனும் , கீழ் நோக்கிய மூக்குடனும், சுழலும் கண்களுடனும் தோன்றிய வராகம் நாராயணன் என்று எவராலும் அனுமானிக்க முடியாது.

अन्तर्जलं तदनुसंकुलनक्रचक्रं
भ्राम्यत्तिमिङ्गिलकुलं कलुषोर्मिमालम् ।
आविश्य भीषणरवेण रसातलस्था -
नाकम्पयन् वसुमतीमगवेषयस्त्वम् ॥८॥

அந்தர்ஜலம் தத³னு ஸங்குலனக்ரசக்ரம்
ப்⁴ராம்யத்திமிங்கி³லகுலம் கலுஷோர்மிமாலம் |
ஆவிஶ்ய பீ⁴ஷணரவேண ரஸாதலஸ்தா²-
நாகம்பயன்வஸுமதீமக³வேஷயஸ்த்வம் || 12-8 ||

பெருத்த சப்தத்துடன் வராஹன் கடலில் குதிக்க, பெருமளவு நீர் வெளியே தெறித்து விழ நாராயணா, நீ சமுத்திர பிரவேசம் செய்தபோது, கடல் அலைகள் உயர எழும்பி கலங்கின. நீரில் உள்ள பெரிய உயிர்வாழ் மிருகங்களும், ஜந்துக்களும், தூக்கி எறியப்பட்டன. சுறாக்கள், திமிங்கலங்கள் நிலை குலைந்தன. ரஸாதலம் எனும் பாதாள லோகத்திலுள்ளவர்கள், நாக லோகத்திலுள்ளவர்கள் எல்லாம் என்ன நடக்குமோ என்று கதி கலங்கி ஸ்தம்பித்துப் போனார்கள். 8

दृष्ट्वाऽथ दैत्यहतकेन रसातलान्ते
संवेशितां झटिति कूटकिटिर्विभो त्वम् ।
आपातुकानविगणय्य सुरारिखेटान्
दंष्ट्राङ्कुरेण वसुधामदधा: सलीलम् ॥९॥

த்³ருஷ்ட்வா(அ)த² தை³த்யஹதகேன ரஸாதலாந்தே
ஸம்வேஶிதாம் ஜ²டிதி கூடகிடிர்விபோ⁴ த்வம் |
ஆபாதுகானவிக³ணய்ய ஸுராரிகே²டான்
த³ம்ஷ்ட்ராங்குரேண வஸுதா⁴மத³தா⁴꞉ ஸலீலம் || 12-9 ||

''ப்ரபோ! குருவாயூரப்பா, நாராயணா, நீ வராஹ ரூபனாக ரஸாதல (பாதாள )லோகத்தின் நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியைக் கண்டுபிடித்துவிட்டாய். பூமியை மீட்க வந்த உன்னை எதிர்ப்பார்த்து காத்திருந்து எதிர்த்த ராக்ஷதர்களை எமனுலகுக்கு அனுப்பி, பூமியை ஜாக்கிரதையாக உனது இரு பெரிய கோரைப்பற்களின் இடையே அசையாமல் நிறுத்தி மேலே தூக்கினாய் . பூமி கடல் நடுவே இன்றும் நம்மை தாங்கி நிற்கிறதே.

अभ्युद्धरन्नथ धरां दशनाग्रलग्न
मुस्ताङ्कुराङ्कित इवाधिकपीवरात्मा ।
उद्धूतघोरसलिलाज्जलधेरुदञ्चन्
क्रीडावराहवपुरीश्वर पाहि रोगात् ॥१०॥

அப்⁴யுத்³த⁴ரன்னத² த⁴ராம் த³ஶனாக்³ரலக்³ன
முஸ்தாங்குராங்கித இவாதி⁴கபீவராத்மா |
உத்³தூ⁴தகோ⁴ரஸலிலாஜ்ஜலதே⁴ருத³ஞ்சன்
க்ரீடா³வராஹவபுரீஶ்வர பாஹி ரோகா³த் || 12-10 ||

எண்டே குருவாயூரப்பா! நீ அலகிலா விளையாட்டுடையவன். பூமியைக் காத்து ரக்ஷிக்க வராக அவதாரம் எடுத்த பூவராக பெருமாளே! நீ பூமியை கோரைப்பற்களின் இடையே அசையாமல் நிறுத்தி தூக்கி வந்த காட்சியை மனதில் காண்கிறேன். முளை வந்த கோரைக் கிழங்கைப்போல் பூமி அப்போது தோன்றியது . மிகப் பெரிய சரீரத்தோடு, கலங்கிய சமுத்திரத்திலிருந்து மேலே எழும்பியவனே, பூமியைக் காப்பாற்றிய உனக்கு என் ரோகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவது கஷ்டமான காரியமா? என்னை ரக்ஷிப்பாயாக என்று நமஸ்கரிக்கிறார் மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி.