Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 24
24. எங்கேடா உன் நாராயணன் காட்டு....

हिरण्याक्षे पोत्रिप्रवरवपुषा देव भवता
हते शोकक्रोधग्लपितधृतिरेतस्य सहज: ।
हिरण्यप्रारम्भ: कशिपुरमरारातिसदसि
प्रतिज्ञमातेने तव किल वधार्थं मधुरिपो ॥१॥

hiraNyaakshe pOtripravaravapuShaa deva bhavataa
hate shOka krOdha glapita dhR^itiretasya sahajaH |
hiraNya praarambhaH kashipuramaraaraati sadasi
pratij~naamaatene tava kila vadhaarthaM madhuripO || 1

ஹிரண்யாக்ஷே போத்ரீப்ரவரவபுஷா தே³வ ப⁴வதா
ஹதே ஶோகக்ரோத⁴க்³லபிதக்⁴ருதிரேதஸ்ய ஸஹஜ꞉ |
ஹிரண்யப்ராரம்ப⁴꞉ கஶிபுரமராராதிஸத³ஸி
ப்ரதிஜ்ஞாமாதேனே தவ கில வதா⁴ர்த²ம் மது⁴ரிபோ || 24-1 ||

குருவாயூரப்பா, நீ கிருஷ்ணனாக, யாராலும் வெல்ல முடியாத ராக்ஷஸன் முரனைக் கொன்றவன். ஏனென்றால் நீ அவன் போன்ற ராக்ஷஸர்களைக் கொல்வதற்கென்றே வந்தவன். மற்றவர்கள் எப்படி அறிவார்கள்? உன்மேல் கோபமும் ஆத்திரமும் தான் வரும் இல்லையா? சேதி மூவுலகிலும் பரவி விட்டது
யாராலும் வெல்லமுடியாத ஹிரண்யாக்ஷனை அவனது பாதாள லோகத்திற்கே சென்று ஒரு வெள்ளைப் பன்றி கொன்று விட்டது.....பன்றியா கொன்று பூமியை மீட்டுக் கொண்டுவரும்?


ஹிரண்யாக்ஷன் உடன் பிறந்த ஹிரண்யனுக்கு இது தெரிந்ததும் நெருப்பு மூச்சு விட்டான், கண்கள் சிவந்து பற்களை நறநறவென்று கடித்தான். கொன்றது நீ என்று தெரிந்தது அவனுக்கு. ஹிரண்யாக்ஷன் இறந்ததில் சோகம், துக்கம், அதே சமயம் உன்மேல் கட்டுக்கடங்காத கோபம். சபை கூட்டி பேசினான். முடிவெடுத்தான். அடுத்த வேலை இனிமேல் உன்னைக் கொல்வது தான்.

विधातारं घोरं स खलु तपसित्वा नचिरत:
पुर: साक्षात्कुर्वन् सुरनरमृगाद्यैरनिधनम् ।
वरं लब्ध्वा दृप्तो जगदिह भवन्नायकमिदं
परिक्षुन्दन्निन्द्रादहरत दिवं त्वामगणयन् ॥२॥

vidhaataaraM ghOraM sa khalu tapasitvaa nachirataH
puraH saakshaatkurvan suranara mR^igaadyairanidhanam |
varaM labdhvaa dR^iptO jagadihabhavannaayakamidaM
parikshundannindraadaharata divaM tvaamagaNayan ||

விதா⁴தாரம் கோ⁴ரம் ஸ க²லு தபஸித்வா நசிரத꞉
புர꞉ ஸாக்ஷாத்குர்வன்ஸுரனரம்ருகா³த்³யைரனித⁴னம் |
வரம் லப்³த்⁴வா த்³ருப்தோ ஜக³தி³ஹ ப⁴வன்னாயகமித³ம்
பரிக்ஷுந்த³ன்னிந்த்³ராத³ஹரத தி³வம் த்வாமக³ணயன் || 24-2 ||

குருவாயூரப்பா, ஹிரண்யனுக்குத் தெரியும் உன்னை எளிதில் கொல்ல முடியாது என்று. உன்னால் தானும் கொல்லப்படக்கூடாதே என்பதற்காக கடும் விரதம் தவம் இருந்தான். எளிதில் அகப்படுபவர் ப்ரம்மா தானே, அவரைப் பிடித்து வேண்டியதை வாங்கிக் கொள்ளவேண்டும். பல வருஷங்கள் தவமிருந்த பின் எதிரே ப்ரம்மா தோன்றினார்.
''ஹிரண்யா, எதற்கு தவமிருந்து என்னை வேண்டினாய்? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். தருகிறேன்.''
''ப்ரம்ம தேவா, என் மரணம் தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, இரவிலோ, பகலிலோ, விண்ணிலோ, மண்ணிலோ, எந்த ஆயுதத்தாலோ, ஒரு சொட்டு ரத்தம் தரையில் விழாமலோ நிகழ வேண் டும்..இந்த வரம் தா. அது போதும்''
''ஆஹா அவ்வாறே ஆகுக '' என்று வரம் தந்துவிட்டான் பிரமன்.
அப்புறம் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் ஆனந்தமாக ஹிரண்யன். தேவர்களை ரிஷிகளை வாட்டி எடுத்தான். எவராலும் தனக்கு மரணம் இல்லை என்பதில் கர்வம். ஆணவம். சந்தோஷம். பெருமிதம். எல்லா உலகத்தையும் தனது அதிகாரத்தில் வைத்துக்கொண்டு உன்னைத் தேடினான். இந்திரனை பெட்டி பாம்பாக்கிவிட்டான்.

निहन्तुं त्वां भूयस्तव पदमवाप्तस्य च रिपो-
र्बहिर्दृष्टेरन्तर्दधिथ हृदये सूक्ष्मवपुषा ।
नदन्नुच्चैस्तत्राप्यखिलभुवनान्ते च मृगयन्
भिया यातं मत्वा स खलु जितकाशी निववृते ॥३॥

nihantuntvaaM bhuuyastava padamavaaptasya cha ripOH
bahirdR^iShTerantardadhita hR^idaye suukshmavapuShaa |
nadannuchchai statraapyakhila bhuvanaante cha mR^igayan
bhiyaa yaataM matvaa sa khalu jitakaashii nivavR^ite || 3

நிஹந்தும் த்வாம் பூ⁴யஸ்தவ பத³மவாப்தஸ்ய ச ரிபோ-
ர்ப³ஹிர்த்³ருஷ்டேரந்தர்த³தி⁴த² ஹ்ருத³யே ஸூக்ஷ்மவபுஷா |
நத³ன்னுச்சைஸ்தத்ராப்யகி²லபு⁴வனாந்தே ச ம்ருக³யன்
பி⁴யா யாதம் மத்வா ஸ க²லு ஜிதகாஶீ நிவவ்ருதே || 24-3 ||

குருவாயூரப்பா என்ன சிரிக்கிறாய். உன் பழங்கதை எல்லாம் சரியாக சொல்கிறேனே என்றா? எல்லாம் நீ கொடுத்த ஞாபக சக்தி தானே அப்பா. இல்லாவிட்டால் உன் எதிரே உட்கார்ந்து கொண்டு எப்படி உனைப் பாட இயலும்? உன்னைத் தேடிக்கொண்டு ஹிரண்யன் வைகுந்தம் வந்து விட்டான். நீ எப்படிப்பட்டவன்? அவன் வெளியே எங்கும் உன்னைத் தேடும்போது, நீ என்ன செய் தாய்? சிறு அணு உருவில் அவன் ஹ்ருதயத்துக் குளேயே சென்று அமர்ந்து விட்டாய். ''நாராயணன் என்னைக் கண்டு பயந்து ஓடிவிட்டான்'' என்று சிரித்தான் ஹிரண்யன். ''ஹா ஹா;; என்று சிரித்துக்கொண்டே மூவுலகிலும் உன்னைத் தேட ஆரம்பித்தான். உன்னைக் காணாமல், நீ தொலைந்து போய் விட்டாய் என்று மகிழ்ந்து தனது அரண்மனைக்கு திரும்பினான்.
நாம் எல்லோருமே ஹிரண்யர்கள் தான். உள்ளே இருக்கும் அவனை அறியாமல் வெளியே எங்கோ தேடுபவர்கள்.


ततोऽस्य प्रह्लाद: समजनि सुतो गर्भवसतौ
मुनेर्वीणापाणेरधिगतभवद्भक्तिमहिमा ।
स वै जात्या दैत्य: शिशुरपि समेत्य त्वयि रतिं
गतस्त्वद्भक्तानां वरद परमोदाहरणताम् ॥४॥

tatO(a)sya prahlaadaH samajani sutO garbhavasatau
munerviiNaapaaNeH adhigata bhavad bhaktimahimaa |
sa vai jaatyaa daityaH shishurapi sametya tvayi ratiM
gatastvadbhaktaanaaM varada paramOdaaharaNataam ||

ததோ(அ)ஸ்ய ப்ரஹ்லாத³꞉ ஸமஜனி ஸுதோ க³ர்ப⁴வஸதௌ
முனேர்வீணாபாணேரதி⁴க³தப⁴வத்³ப⁴க்திமஹிமா |
ஸ வை ஜாத்யா தை³த்ய꞉ ஶிஶுரபி ஸமேத்ய த்வயி ரதிம்
க³தஸ்த்வத்³ப⁴க்தானாம் வரத³ பரமோதா³ஹரணதாம் || 24-4 ||

நீ, எல்லோர் எண்ணத்தையும் அறிந்து வேண்டியதை அருள்பவன், வாயு புரீசா, சில காலத்தில் ஹிரண்யனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரஹலாதன் என்று பெயர். ஹிரண்யன் தான் தெய்வம், வேறு எவருமில்லை . அவனை மட்டுமே தெய்வமாக பக்தியோடு வணங்கவேண்டும் என்று ப்ரஹலாதனுக்கு பாடம் கற்பித்தார்கள். பிரஹலாதன் கர்ப்பத்தில் இருக்கும்போது மஹதி எனும் வீணையை ஏந்தியவாறு எப்போதும் சஞ்சாரம் செய்யும் நாரத ரிஷி மூலம் நாராயணா, உன் பெருமையை, மஹிமையை, அறிந்து கொண்டான். ராக்ஷஸ சிறுவனாக இருந்தாலும் அதீத பக்தி உன்மேல் செலுத்தினான். உனது உதாரண பக்தனானான்.

सुरारीणां हास्यं तव चरणदास्यं निजसुते
स दृष्ट्वा दुष्टात्मा गुरुभिरशिशिक्षच्चिरममुम् ।
गुरुप्रोक्तं चासाविदमिदमभद्राय दृढमि-
त्यपाकुर्वन् सर्वं तव चरणभक्त्यैव ववृधे ॥ ५ ॥

suraariiNaaM haasyaM tava charaNadaasyaM nijasute
sa dR^iShTvaa duShTaatmaa gurubhirashishikshachchiramamum |
guruprOktaM chaasaavidamidamabhadraaya dR^iDhamiti
apaakurvan sarvaM tava charaNa bhaktyaiaiva vavR^idhe || 5

ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரணதா³ஸ்யம் நிஜஸுதே
ஸ த்³ருஷ்ட்வா து³ஷ்டாத்மா கு³ருபி⁴ரஶிஶிக்ஷச்சிரமமும் |
கு³ருப்ரோக்தம் சாஸாவித³மித³மப⁴த்³ராய த்³ருட⁴மி-
த்யபாகுர்வன் ஸர்வம் தவ சரணப⁴க்த்யைவ வவ்ருதே⁴ || 24-5 ||

மகனின் வினோத மனப் போக்கை கவனித்த ஹிரண்ய கசிபு எண்ணற்ற ஆசிரியர்களை நியமித்து பிரஹலாதன் மனதை மாற்ற முயற்சித்தும் பிரஹலாதன் எனும் அந்த சிறுவன் மன உறுதியுடன் நாராயணா, உன்னை யே கெட்டியாக மனதில் பக்தியோடு பிடித்துக்கொண்டு வளர்ந்தான்.

अधीतेषु श्रेष्ठं किमिति परिपृष्टेऽथ तनये
भवद्भक्तिं वर्यामभिगदति पर्याकुलधृति: ।
गुरुभ्यो रोषित्वा सहजमतिरस्येत्यभिविदन्
वधोपायानस्मिन् व्यतनुत भवत्पादशरणे ॥६॥

adhiiteShu shreShThaM kimiti paripR^iShThe(a)tha tanaye
bhavadbhaktiM varyaamabhigadati paryaakuladhR^itiH |
gurubhyOrOShitvaa sahajamatirasyetyabhividan
vadhOpaayaanasmin vyatanuta bhavatpaada sharaNe || 6

அதீ⁴தேஷு ஶ்ரேஷ்ட²ம் கிமிதி பரிப்ருஷ்டே(அ)த² தனயே
ப⁴வத்³ப⁴க்திம் வர்யாமபி⁴க³த³தி பர்யாகுலத்⁴ருதி꞉ |
கு³ருப்⁴யோ ரோஷித்வா ஸஹஜமதிரஸ்யேத்யபி⁴வித³ன்
வதோ⁴பாயானஸ்மின் வ்யதனுத ப⁴வத்பாத³ஶரணே || 24-6 ||

''என்னடா நீ சிறப்பாக கற்றுக்கொண்டாய்? '' அப்பாவின் இந்த கேள்விக்கு பதில் தந்தான் பிரஹலாதன்.
''பகவான் நாராயணன் மேல் பக்தி''
ஹிரண்யன் பொறுமை இழந்தான். கடும் சினத்தில் ஆசிரியர்களை கூப்பிட்டு வாட்டி எடுத்தான். கடைசியில் எல்லாம் ஆசிரியர்களால் அல்ல, பிரஹலாதன் மனதில் தானாகவே வேரூன்றிய நாராயணன் பக்தியால் தான் என்று புரிந்து கொண்டான். பிள்ளையென்றும் பாராமல் பரம வைரியாக அவனைக் கொல்ல ஏற்பாடு செய் தான். சின்னஞ்சிறு குழந்தை ப்ரஹ்லாதன் உன் கால்களைக் கெட்டியாக பிடித்துக்கொண்டான். அவனால் வேறு என்ன செய்ய முடியும்?

स शूलैराविद्ध: सुबहु मथितो दिग्गजगणै-
र्महासर्पैर्दष्टोऽप्यनशनगराहारविधुत: ।
गिरीन्द्रवक्षिप्तोऽप्यहह! परमात्मन्नयि विभो
त्वयि न्यस्तात्मत्वात् किमपि न निपीडामभजत ॥७॥

sa shuulairaaviddhaH subahu mathitO diggajagaNaiH
mahaasarpairdaShTOpyanashana garaahaara vidhutaH |
giriindraavakshiptO(a)pyahaha paramaatmannayi vibhO
tvayi nyastaatmatvaat kimapi na nipiiDaamabhajata || 7

ஸ ஶூலைராவித்³த⁴꞉ ஸுப³ஹு மதி²தோ தி³க்³க³ஜக³ணை-
ர்மஹாஸர்பைர்த³ஷ்டோ(அ)ப்யனஶனக³ராஹாரவிது⁴த꞉ |
கி³ரீந்த்³ராவக்ஷிப்தோ(அ)ப்யஹஹ பரமாத்மன்னயி விபோ⁴
த்வயி ந்யஸ்தாத்மத்வாத்கிமபி ந நிபீடா³மப⁴ஜத || 24-7 ||

என் அப்பனே, குருவாயூரீசா, மேலும் சொல்கிறேன் கேள் நீ என்ன செய்தாய் என்று :

பாவம் அந்த சிறுவன், உன் பக்தன், பிரஹலாதன், கூரான ஈட்டிகளால் குத்தப்பட்டான். யானைகளால் நசுக்கப்பட்டான், கொடிய விஷ சர்ப்பங்களால் தீண்டப்பட்டான், ஆகாரம் இல்லாமல் பசியால் வாட்டப் பட்டான், உயரமான மலை மேல் இருந்து கீழே உருட்டப்பட்டான், ஆனால் என்ன ஆச்சர்யம் இதனையிலும் அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. ஏன்?. அவன் உள்ளே இருந்த நீ அல்லவோ அதையெல்லாம் தாங்கிக் கொண்டவன். உன்னை அவை யெல்லாம் என்ன செய்யும்? நீயே தானே அவை எல்லாமே? பிரஹலாதன் தான் எப்போதோ தன்னை உடல் பொருள் ஆவி என்று முழுதுமாக உன்னிடம் தந்து உன்னை சரணடைந்து விட்டானே. நீ தானே பிரஹலாதன் இப்போது.

तत: शङ्काविष्ट: स पुनरतिदुष्टोऽस्य जनको
गुरूक्त्या तद्गेहे किल वरुणपाशैस्तमरुणत् ।
गुरोश्चासान्निध्ये स पुनरनुगान् दैत्यतनयान्
भवद्भक्तेस्तत्त्वं परममपि विज्ञानमशिषत् ॥८॥

tataH shankaaviShTaH sa punarati duShTO(a)sya janakaH
guruuktyaa tadgehe kila varuNapaashaistamaruNat |
gurOshchaasaannidhye sa punaranugaan daityatanayaan
bhavadbhaktestattvaM paramamapi vij~naanamashiShat || 8

தத꞉ ஶங்காவிஷ்ட꞉ ஸ புனரதிது³ஷ்டோ(அ)ஸ்ய ஜனகோ
கு³ரூக்த்யா தத்³கே³ஹே கில வருணபாஶைஸ்தமருணத் |
கு³ரோஶ்சாஸான்னித்⁴யே ஸ புனரனுகா³ந்தை³த்யதனயான்
ப⁴வத்³ப⁴க்தேஸ்தத்த்வம் பரமமபி விஜ்ஞானமஶிஷத் || 24-8 ||

ஹிரண்யன் தோல்வியில் ஆத்திரம் மேலிட்டு மீசை துடிக்க கையைப் பிசைந்தான். பிரகலாதனை என்ன செய்யலாம்? ஒரு வழி பாக்கி இல்லை. எந்த வகையிலும் அவனைக் கொல்ல முடியவில்லையே? பிரஹலாதனை அவன் குருவின் வீட்டிலேயே கட்டிப்போட்டு விட்டான். ப்ரஹலாதனோ, அங்கிருந்தே மற்ற சிஷ்யர்களுக்கும் குரு இல்லாத சமயத்தில் நாராயணா, உன் மஹிமை பற்றியும் உன் மேல் பக்தி கொள்வதன் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி அவர்களை மாற்றினான். பிரஹலாதன் போன்ற ஒரு ஞானியை பார்க்க முடியுமா?

पिता शृण्वन् बालप्रकरमखिलं त्वत्स्तुतिपरं
रुषान्ध: प्राहैनं कुलहतक कस्ते बलमिति ।
बलं मे वैकुण्ठस्तव च जगतां चापि स बलं
स एव त्रैलोक्यं सकलमिति धीरोऽयमगदीत् ॥९॥

pitaa shR^iNvan baala prakaramakhilaM tvatstutiparaM
ruShaa(a)ndhaH praahainaM kulahataka kaste balamiti |
balaM me vaikuNThastava cha jagataaM chaapi sa balaM
sa eva trailOkyaM sakalamiti dhiirO(a)yamagadiit || 9

பிதா ஶ்ருண்வன்பா³லப்ரகரமகி²லம் த்வத்ஸ்துதிபரம்
ருஷாந்த⁴꞉ ப்ராஹைனம் குலஹதக கஸ்தே ப³லமிதி |
ப³லம் மே வைகுண்ட²ஸ்தவ ச ஜக³தாம் சாபி ஸ ப³லம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலமிதி தீ⁴ரோ(அ)யமக³தீ³த் || 24-9 ||

கோபம் உச்சிக்கு எட்டியது ஹிரண்யனுக்கு. தான் கெட்டதும் அல்லாமல் மற்ற அசுரக் குழந்தைகளையும்
நாராயணன் மேல் பக்தி கொள்ள செய்து, நாராயணன் புகழ் பாட வைக்கிறான் இந்த பிரஹலாதன்.
கண் மண் தெரியாத கோபத்தில் பிரகலாதனை இழுத்து வர செய்தான்.

''வம்ச துரோகி, ப்ரஹ்லாதா, உண்மையைச் சொல், உனக்கு இந்த சக்தி எங்கிருந்து வந்தது?யார் தந்தது?''
சிறு குழந்தைக்கு பயம் தெரியாதே.
'' எல்லாம் என் நாராயணன் தான் வேறு யார்?. அவனை விட மூவுலகிலும் சக்திமான் எவருண்டு?''

अरे क्वासौ क्वासौ सकलजगदात्मा हरिरिति
प्रभिन्ते स्म स्तंभं चलितकरवालो दितिसुत: ।
अत: पश्चाद्विष्णो न हि वदितुमीशोऽस्मि सहसा
कृपात्मन् विश्वात्मन् पवनपुरवासिन् मृडय माम् ॥१०॥

are kvaasau kvaasau sakalajagadaatmaa haririti
prabhintesma stambhaM chalita karavaalO diti sutaH |
ataH pashchaadviShNO na hi vaditumiishO(a)smi sahasaa
kR^ipaatman vishvaatman pavanapuravaasin mR^iDaya maam ||

அரே க்வாஸௌ க்வாஸௌ ஸகலஜக³தா³த்மா ஹரிரிதி
ப்ரபி⁴ந்தே ஸ்ம ஸ்தம்ப⁴ம் சலிதகரவாலோ தி³திஸுத꞉ |
அத꞉ பஶ்சாத்³விஷ்ணோ ந ஹி வதி³துமீஶோ(அ)ஸ்மி ஸஹஸா
க்ருபாத்மன் விஶ்வாத்மன் பவனபுரவாஸின் ம்ருட³ய மாம் || 24-10 ||

அப்புறம் நடந்ததென்ன? திதியின் மகன், ஹிரண்யகசிபு உடைவாளை உருவினான். ''சொல்லடா துரோகி, மூன்று உலகும் தானாகிய விஷ்ணு என்கிறாயே அவன் எங்கே இருக்கிறான்? உடனே சொல். முட்டாள் மகனே,''
பிரஹலாதன் அந்த முட்டாளின் மகன் தான். வாஸ்தவம். ''நாராயணன் எல்லாவற்றிலும் இருக்கிறான், எங்கும் இருக்கிறான், இங்கும் இருக்கிறான்.''
''இந்த தூணிலுமா?
''ஆமாம் ''
கடும் கோபத்தில் அந்த தூணை அடித்து நொறுக்கி பிளந்தான் ஹிரண்ய கசிபு''
அப்புறம் நடந்ததை என் தெய்வமே, நான் மேற்கொண்டு சொல்ல முடியவில்லையே!''

எண்டே குருவாயூரப்பா, கருணா ஸாகரமே , பரமாத்மா, என்னை ரக்ஷி, என் மேலும் கருணை வை. என் நோய் நீக்கி என்னை சந்தோஷமாக வாழ வை.''