Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 22
22 பகவன் நாமாவின் பரம சக்தி

अजामिलो नाम महीसुर: पुरा
चरन् विभो धर्मपथान् गृहाश्रमी ।
गुरोर्गिरा काननमेत्य दृष्टवान्
सुधृष्टशीलां कुलटां मदाकुलाम् ॥१॥

ajaamilO naama mahiisuraH puraa
charan vibhO dharmapathaan gR^ihaashramii |
gurOrgiraa kaananametya dR^iShTavaan
sudhR^iShTashiilaaM kulaTaaM madaakulaam ||

அஜாமிலோ நாம மஹீஸுர꞉ புரா
சரன்விபோ⁴ த⁴ர்மபதா²ன் க்³ருஹாஶ்ரமீ |
கு³ரோர்கி³ரா கானநமேத்ய த்³ருஷ்டவான்
ஸுத்⁴ருஷ்டஶீலாம் குலடாம் மதா³குலாம் || 22-1 ||

குருவாயூரப்பா, உனக்கு தெரிந்ததையே தான் சொல்லிக்கொண்டு வருகிறேன். நீயில்லாமல் எந்த சம்பவமும் நிகழ்வும் இல்லையே அப்பா. காரணம் என்ன சொல்லட்டுமா ? எல்லாவற்றிலும் நீ தானே இருக்கிறாய், எல்லாமும் நீயாகவே தானே இருக்கிறாய்.

வெகு காலம் முன்பு ஒரு ப்ராமண குடும்பஸ்தன் அஜாமிளன் என்ற பெயரோடு வாழ்ந்தான். அவன் அப்பா சொல்படி காட்டுக்கு போய் தவமிருக்கச் சென்றவன் எதிரே குடித்து விட்டு ஆட்டம் போட்டம் ஒரு தீய குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை சந்திக்கிறான்.

स्वत: प्रशान्तोऽपि तदाहृताशय:
स्वधर्ममुत्सृज्य तया समारमन् ।
अधर्मकारी दशमी भवन् पुन-
र्दधौ भवन्नामयुते सुते रतिम् ॥२॥

svataH prashaantO(a)pi tadaahR^itaashayaH
svadharmamutsR^ijya tayaa samaaraman |
adharmakaarii dashamii bhavan punardadhau
bhavannaamayute sute ratim ||

ஸ்வத꞉ ப்ரஶாந்தோ(அ)பி ததா³ஹ்ருதாஶய꞉
ஸ்வத⁴ர்மமுத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமன் |
அத⁴ர்மகாரீ த³ஶமீ ப⁴வன்புன-
ர்த³தௌ⁴ ப⁴வன்னாமயுதே ஸுதே ரதிம் || 22-2 ||

இயற்கையில் நல்ல குணங்களை உடையவன் என்றாலும் விநாச காலம் வந்தால் விபரீதமாக புத்தி செயல்படுமல்லவா?. தன்னை, தன் கடமைகளை, மறந்து அவளை மனைவியாக்கிக் கண்டான்.அதர்மத்தில் வாழ்வு சென்றது. வயதாகி கிழவனானான். அவன் கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயர்வைத்தது அவன் செய்த பூர்வ ஜென்ம புண்யம். அந்த பிள்ளை நாராயணன் மேல் கொள்ளை ஆசை பாசம். நாராயணன் என்பது உன்பெயரும் தானே குருவாயூரப்பா?
''ஆமாம்'' என்று தலையாட்டினான் கதை கேட்டுக்கொண்டிருந்த உண்ணி கிருஷ்ணன்.

स मृत्युकाले यमराजकिङ्करान्
भयङ्करांस्त्रीनभिलक्षयन् भिया ।
पुरा मनाक् त्वत्स्मृतिवासनाबलात्
जुहाव नारायणनामकं सुतम् ॥३॥

sa mR^ityukaale yamaraajakinkaraan
bhayankaraamstriinabhilakshayan bhiyaa |
puraa manaaktvatsmR^iti vaasanaabalaat
juhaava naaraayaNanaamakaM sutam ||

ஸ ம்ருத்யுகாலே யமராஜகிங்கரான்
ப⁴யங்கராம்ஸ்த்ரீனபி⁴லக்ஷயன்பி⁴யா |
புரா மனாக்த்வத்ஸ்ம்ருதிவாஸனாப³லாத்
ஜுஹாவ நாராயணனாமகம் ஸுதம் || 22-3 ||

மரணாந்த காலம் வந்துவிட்டது அஜாமிளனுக்கு. மூன்று எம கிங்கரர்கள் வந்து எதிரே நிற்கிறார்கள். அவனுக்கு பயம். யாராவது அருகில் இருக்க மாட்டார்களா , தனியாக இவர்களிடம் மாட்டிக்கொண்டோமே என்று நடுங்கி உரக்க தனது செல்லப்பிள்ளையை கூப்பிட்டான் ''நாராயணா, நாராயணா''.

दुराशयस्यापि तदात्वनिर्गत-
त्वदीयनामाक्षरमात्रवैभवात् ।
पुरोऽभिपेतुर्भवदीयपार्षदा:
चतुर्भुजा: पीतपटा मनोरमा: ॥४॥

duraashayasyaapi tadaatvanirgatatvadiiya
naamaaksharamaatravaibhavaat
|purO(a)bhipeturbhavadiiyapaarShadaaH
chaturbhujaaH piitapaTaa manOharaaH ||

து³ராஶயஸ்யாபி ததா³த்வனிர்க³த-
த்வதீ³யனாமாக்ஷரமாத்ரவைப⁴வாத் |
புரோ(அ)பி⁴பேதுர்ப⁴வதீ³யபார்ஷதா³꞉
ஶ்சதுர்பு⁴ஜா꞉ பீதபடா மனோஹரா꞉ || 22-4 ||

அஜாமிளன் நிறைய பாபங்கள் செய்தவன் தான். சந்தேகமே இல்லை. இருந்தாலும் அவன் உன் பெயரைச் சொல்லி விட்டானே. அவன் குரல் அவன் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ, தெரியாது. ஆனால் நிச்சயம் உன் காதில் விழுந்து விட்டதால் உன்னைப்போலவே சதுர்புஜங்கள், பீதாம்பர வஸ்திரத்துடன் உன் தூதர்கள் வந்து அஜாமிளனுக்கும் அவன் உயிரைப் பறிக்க வந்த எமதூதர்களுக்கும் நடுவில் நின்று கொண்டார்கள். பார்த்தாயா உன் பெயருக்குண்டான சக்தியை? பகவானைக் காட்டிலும் பகவன் நாமம் அதிக சக்தி கொண்டது.


अमुं च संपाश्य विकर्षतो भटान्
विमुञ्चतेत्यारुरुधुर्बलादमी ।
निवारितास्ते च भवज्जनैस्तदा
तदीयपापं निखिलं न्यवेदयन् ॥५॥

amuM cha sampaashya vikarShatO bhaTaan
vimu~nchate-tyaarurudhu-rbalaadamii |
nivaaritaaste cha bhavajjanaistadaa
tadiiya paapaM nikhilaM nyavedayan ||

அமும் ச ஸம்பாஶ்ய விகர்ஷதோ ப⁴டான்
விமுஞ்சதேத்யாருருது⁴ர்ப³லாத³மீ |
நிவாரிதாஸ்தே ச ப⁴வஜ்ஜனைஸ்ததா³
ததீ³யபாபம் நிகி²லம் ந்யவேத³யன் || 22-5 ||

எமதூதர்கள் வந்த வேலையை ஆரம்பித்தார்கள். அஜாமிளனை பாசக்கயிற்றால் கட்டி நரகத்துக்கு கொண்டு செல்ல முயன்ற போது அதை உன் தூதர்கள் தடுத்தார்கள்.

எமதூதர்கள் கையில் ஜாபிதாவோடு வந்திருந்தார்கள். ''இதோ பாருங்கள் இந்த ஆள் செய்த பாப காரியங்களை. அதற்காக தான் இவனை நரகதண்டனை அனுபவிக்க எடுத்துச் செல்கிறோம். தடுக்காதீர்கள்'' என்று உன் தூதர்களிடம் சொன்னார்கள்.

भवन्तु पापानि कथं तु निष्कृते
कृतेऽपि भो दण्डनमस्ति पण्डिता: ।
न निष्कृति: किं विदिता भवादृशा-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥६॥

bhavantu paapaani kathaM tu niShkR^ite
kR^ite(a)pi bhO daNDanamasti paNDitaaH |
na niShkR^itiH kiM viditaa bhavaadR^ishaamiti
prabhO tvatpuruShaa babhaaShire ||

ப⁴வந்து பாபானி கத²ம் து நிஷ்க்ருதே
க்ருதே(அ)பி போ⁴ த³ண்ட³னமஸ்தி பண்டி³தா꞉ |
ந நிஷ்க்ருதி꞉ கிம் விதி³தா ப⁴வாத்³ருஶா-
மிதி ப்ரபோ⁴ த்வத்புருஷா ப³பா⁴ஷிரே || 22-6 ||

''எம தூதர்களே, அஜாமிளன் செய்த பாபங்களை மறுக்கவில்லை. ஒருவன் அதற்கு பிராயச் சித்தம் செய்தபிறகு அப்புறம் தண்டனை ஏது ? பாவங்களுக்கு பரிகாரம் உண்டு என்பது உங்களுக்கு தெரியாதா?''

श्रुतिस्मृतिभ्यां विहिता व्रतादय:
पुनन्ति पापं न लुनन्ति वासनाम् ।
अनन्तसेवा तु निकृन्तति द्वयी-
मिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥७॥

shrutismR^itibhyaanvihitaa vrataadayaH
punanti paapaM na lunanti vaasanaam |
anantasevaa tu nikR^intati dvayiimiti
prabhO tvatpuruShaa babhaaShire ||

ஶ்ருதிஸ்ம்ருதிப்⁴யாம் விஹிதா வ்ரதாத³ய꞉
புனந்தி பாபம் ந லுனந்தி வாஸனாம் |
அனந்தஸேவா து நிக்ருந்ததி த்³வயீ-
மிதி ப்ரபோ⁴ த்வத்புருஷா ப³பா⁴ஷிரே || 22-7 ||

வேதங்களில் எல்லா பாபங்களும் நீங்க, நிவர்த்தி செய்ய க்ருச்ரம் என்று சில பரிகார விதிகள் இருக்கிறதே அது தெரியாதா? அதைச் செய்தபோது பாபங்கள் அழிந்துவிடுமே . இனிமேல் செய்யப்போகும் பாபங்களை அந்த விதி முறைகள் தடுக்காது. ஆனால் பகவான் நாமத்தை ஸ்மரித்தால் செய்த, செய்யப்போகும் எதிர்கால பாபங்கள் கூட அழியும்.

अनेन भो जन्मसहस्रकोटिभि:
कृतेषु पापेष्वपि निष्कृति: कृता ।
यदग्रहीन्नाम भयाकुलो हरे-
रिति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥८॥

anena bhO janmasahasrakOTibhiH
kR^iteShu paapeShvapi niShkR^itiH kR^itaa |
yadagrahiinnaama bhayaakulO hareriti
prabhO tvatpuruShaa babhaaShire ||

அனேன போ⁴ ஜன்மஸஹஸ்ரகோடிபி⁴꞉
க்ருதேஷு பாபேஷ்வபி நிஷ்க்ருதி꞉ க்ருதா |
யத³க்³ரஹீன்னாம ப⁴யாகுலோ ஹரே-
ரிதி ப்ரபோ⁴ த்வத்புருஷா ப³பா⁴ஷிரே || 22-8 ||

எம தூதர்களே , இந்த அஜாமிளன், ஆயிரம் பிறவிகளில் செய்த பாபங்களுக்கு பரிகாரம் செய்து விட்டவன். பயத்தோடு மனமுவந்து எங்கள் பிரபுவின் நாமத்தை தியானித்து குரலெழுப் பியவன்.

नृणामबुद्ध्यापि मुकुन्दकीर्तनं
दहत्यघौघान् महिमास्य तादृश: ।
यथाग्निरेधांसि यथौषधं गदा -
निति प्रभो त्वत्पुरुषा बभाषिरे ॥९॥

nR^iNaamabuddhyaa(a)pi mukunda kiirtanaM
dahatyaghaughaan mahimaasya taadR^ishaH |
yathaagniredhaamsi yathauShadhaM gadaaniti
prabhO tvatpuruShaa babhaaShire ||

ந்ருணாமபு³த்³த்⁴யாபி முகுந்த³கீர்தனம்
த³ஹத்யகௌ⁴கா⁴ன்மஹிமாஸ்ய தாத்³ருஶ꞉ |
யதா²க்³னிரேதா⁴ம்ஸி யதௌ²ஷத⁴ம் க³தா³-
நிதி ப்ரபோ⁴ த்வத்புருஷா ப³பா⁴ஷிரே || 22-9 ||

ஹரிநாமம் பஜனை செய்தவன், பாடியவன், உச்சரித்தவன், எவனாக இருந்தாலும் அவனது பாப மூட்டை காணாமல் போய்விடும். காய்ந்த விறகை அக்னி எரிப்பது போல் சாம்பலாக்கி விடும். சக்தியுள்ள மருந்து வியாதியை போக்குவது போல் அழித்து விடும். பகவன் நாமாவுக்கு அத்தனை அதீத சக்தி.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

इतीरितैर्याम्यभटैरपासृते
भवद्भटानां च गणे तिरोहिते ।
भवत्स्मृतिं कंचन कालमाचरन्
भवत्पदं प्रापि भवद्भटैरसौ ॥१०॥

itiiritairyaamyabhaTairapaasR^ite
bhavadbhaTaanaaM cha gaNe tirOhite |
bhavatsmR^itiM ka~nchana kaalamaacharan
bhavatpadaM praapi bhavadbhaTairasau ||

இதீரிதைர்யாம்யப⁴டைரபாஸ்ருதே
ப⁴வத்³ப⁴டானாம் ச க³ணே திரோஹிதே |
ப⁴வத்ஸ்ம்ருதிம் கஞ்சன காலமாசரன்
ப⁴வத்பத³ம் ப்ராபி ப⁴வத்³ப⁴டைரஸௌ || 22-10 ||

அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ செய்த பிழைகளுக்கு இப்படி பகவன் நாமாவால் பரிகாரம் உண்டு. எமதூதர்கள் நிறைய கேட்டுவிட்டார்கள். ஆகவே உடனே திரும்பி விட்டார்கள் . அதற்கு பிறகு உயிரோடு வாழ்ந்த அஜாமிளன் பழையபடி திருந்தி பகவானை தியானித்து விட்டு காலம் முடிந்த பின் விஷ்ணுலோகம் சென்றான்.


स्वकिङ्करावेदनशङ्कितो यम-
स्त्वदंघ्रिभक्तेषु न गम्यतामिति ।
स्वकीयभृत्यानशिशिक्षदुच्चकै:
स देव वातालयनाथ पाहि माम् ॥११॥

svakinkaraavedana shankitO yamastvadanghri
bhakteShu na gamyataamiti |
svakiiya bhR^ityaanashishikshaduchchakaiH
sa deva vaataalayanaatha paahi maam ||

ஸ்வகிங்கராவேத³னஶங்கிதோ யம-
ஸ்த்வத³ங்க்⁴ரிப⁴க்தேஷு ந க³ம்யதாமிதி |
ஸ்வகீயப்⁴ருத்யானஶிஶிக்ஷது³ச்சகை꞉
ஸ தே³வ வாதாலயனாத² பாஹி மாம் || 22-11 |

''எங்கேடா அந்த அஜாமிளன் என்று கேட்ட எம தர்மனிடம் நடந்ததை தூதர்கள் சொல்ல, ''டேய் , இனிமேல் எந்த விஷ்ணு பக்தன் அருகிலும் செல்லாதீர்கள். நீங்கள் செய்தது தப்பு'' என்று கட்டளை இட்டான். என்ன குருவாயூரப்பா நான் சொல்வதைக் கேட்டு சிரிக்கிறாய். சொன்னது சரிதானே?
ஆமாம் என்று தலையாட்டிய குருவாயூரப்பனிடம், ஆகவே நீ என் நோய்களையும் தீர்த்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்ட நம்பூதிரி