Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 61
61. யாக பலன் கிடைத்தது.

இந்த தசகத்தில் வரும் விஷயம் வ்ரஜபூமியில் எப்படி ஒரு சில பிராமணர்கள் வெறும் யாக யஞங்களில் மட்டும் கவனம் செலுத்தி கிருஷ்ணனை நினைக்கவில்லையோ, அதற்கு மாறாக அவர்கள் வீட்டில் மனைவிகள் பெண்கள் கிருஷ்ணன் பலராமனிடம் அன்பு செலுத்தி தெய்வமாக வழிபட்டார்கள், என்பதையும் க்ரிஷ்ணனால் அனுப்பப்பட்ட யாதவ சிறுவர்களுக்கு கணவர்கள் கட்டளையை மீறி அந்த பெண்மணிகள் கிருஷ்ணனுக்கு உணவுஅளித்து பிராமணர்கள் கோபத்துக்கு ஆளாகி கிருஷ்ணனை சரணடைந்ததையும், பின்னர் அந்த பிராமணர்கள் தவறை உணர்ந்து திருந்தியதையும் விவரிக்கிறது.

ततश्च वृन्दावनतोऽतिदूरतो
वनं गतस्त्वं खलु गोपगोकुलै: ।
हृदन्तरे भक्ततरद्विजाङ्गना-
कदम्बकानुग्रहणाग्रहं वहन् ॥१॥

tatashcha bR^indaavanatO(a)tiduuratO
vanaM gatastvaM khalu gOpagOkulaiH |
hR^idantare bhaktatara dvijaanganaa
kadambakaanugrahaNaagrahaM vahan || 1

ததஶ்ச வ்ருந்தா³வனதோ(அ)திதூ³ரதோ
வனம் க³தஸ்த்வம் க²லு கோ³பகோ³குலை꞉ |
ஹ்ருத³ந்தரே ப⁴க்ததரத்³விஜாங்க³னா-
கத³ம்ப³கானுக்³ரஹணாக்³ரஹம் வஹன் || 61-1 ||

கிருஷ்ணா, நீ கடவுளின் மனித அவதாரம் என்பது உனக்கே தெரியும். வ்ரஜபூமியில் பிரிந்தா வனத்தை கடந்து சற்று தூரத்தில் ஒரு காட்டுப் பகுதியின் அருகே கிராமத்தில் சில பிராமணர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் யாக யஞங்களை செய்வதிலும் அதில் தோன்றும் உபதேவதைகளை வணங்குவதிலும் மட்டுமே காலம் கழித்தவர்கள் என்பதால் மூல காரணன் உன்னை அறியவில்லை. அவர்களது மனைவிமார்கள் உன் மஹிமை, பெருமை உணர்ந்து உன்னை தெய்வமாக போற்றுபவர்கள். அந்த பெண்களை வாழ்த்தி அருள் புரிய நீ திட்டம் வகுத்தாய். ஆகவே ஒருநாள் உன் நண்பர்களோடும் பசுக்கள் கன்றுகளோடும் அவர்கள் வாழ்ந்த பகுதியின் அருகே உள்ள காட்டுக்கு மேய்ச்சலுக்குச் சென்றாய்.

ततो निरीक्ष्याशरणे वनान्तरे
किशोरलोकं क्षुधितं तृषाकुलम् ।
अदूरतो यज्ञपरान् द्विजान् प्रति
व्यसर्जयो दीदिवियाचनाय तान् ॥२॥

tatO niriikshyaasharaNe vanaantare
kishOralOkaM kshudhitaM tR^iShaakulam |
aduuratO yaj~naparaan dvijaan prati
vyasarjayO diidiviyaachanaaya taan || 2

ததோ நிரீக்ஷ்யாஶரணே வனாந்தரே
கிஶோரலோகம் க்ஷுதி⁴தம் த்ருஷாகுலம் |
அதூ³ரதோ யஜ்ஞபரான் த்³விஜான்ப்ரதி
வ்யஸர்ஜயோ தீ³தி³வியாசனாய தான் || 61-2 ||

நேரம் ஓடியது. சூரியன் உச்சந் தலைக்கு மேல் சென்றுவிட்டான். வீட்டிலிருந்து எவரும் உணவு கொண்டு வரவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது , உன்னுடன் வந்த பிருந்தாவன சிறுவர்கள் களைத்து சோர்ந்து உட்கார்ந்து விட்டார்கள்.
ஒரு சிலரை கூப்பிட்டு ''ஏன் சோர்வாக உட்கார்ந்துவிட்டீர்கள். பசியா? இதோ இந்த காட்டின் எல்லையைத் தாண்டி தெரியும் கிராமத்தில் சில பிராமணர்கள் வசிக்கிறார்கள். இன்று அங்கே யாகம் ஏதோ செய்கிறார்கள் போல் இருக்கிறது. மந்திர சப்தம் கேட்கிறதே. யாகம் செய்வதால் நிச்சயம் அன்னதானம் நடக்கும். நீங்கள் அங்கே சென்று அவர்களிடம் கேட்டு நம் எல்லோருக்கும் உணவு வாங்கி வாருங்கள்'' என்று அனுப்பினாய்.

गतेष्वथो तेष्वभिधाय तेऽभिधां
कुमारकेष्वोदनयाचिषु प्रभो ।
श्रुतिस्थिरा अप्यभिनिन्युरश्रुतिं
न किञ्चिदूचुश्च महीसुरोत्तमा: ॥३॥

gateShvathO teShvabhidhaaya te(a)bhidhaaM
kumaarakeShvOdana yaachiShu prabhO |
shrutisthiraa apyabhininyuH ashrutiM
na ki~nchiduuchushcha mahiisurOttamaaH || 3

க³தேஷ்வதோ² தேஷ்வபி⁴தா⁴ய தே(அ)பி⁴தா⁴ம்
குமாரகேஷ்வோத³னயாசிஷு ப்ரபோ⁴ |
ஶ்ருதிஸ்தி²ரா அப்யபி⁴னின்யுரஶ்ருதிம்
ந கிஞ்சிதூ³சுஶ்ச மஹீஸுரோத்தமா꞉ || 61-3 ||

கிருஷ்ணா, உன் நண்பர்கள் அந்த கிராமத்தில் நீ சொன்னது போலவே ஏதோ ஒரு யாகம் எல்லோரும் சேர்ந்து செய்வதையும் ஏராளமாக உணவு தயாரித்திருப்பதையும் அறிந்து அவர்களிடம் ''பிருந்தாவன கிருஷ்ணன் எங்களை அனுப்பினான், அவனுக்கும் எங்களுக்கும் உணவு கேட்டு வாங்கி வரச்சொன்னான் '' என்கிறார்கள். பிராமணர்கள் அவர்களை லக்ஷியம் செய்யவில்லை. வேதம் தெரிந்தும் உன்னை உணராதவர்கள் உன் பெயர் சொல்லியும் உணவளிக்கவில்லை ,

अनादरात् खिन्नधियो हि बालका: ।
समाययुर्युक्तमिदं हि यज्वसु ।
चिरादभक्ता: खलु ते महीसुरा:
कथं हि भक्तं त्वयि तै: समर्प्यते ॥४॥

anaadaraat khinnadhiyO hi baalakaaH
samaayayu-ryuktamidaM hi yajvasu |
chiraadabhaktaaH khalu te mahiisuraaH
kathaM hi bhaktaM tvayi taiH samarpyate ||4

அனாத³ராத்கி²ன்னதி⁴யோ ஹி பா³லகா꞉
ஸமாயயுர்யுக்தமித³ம் ஹி யஜ்வஸு |
சிராத³ப⁴க்தா꞉ க²லு தே மஹீஸுரா꞉
கத²ம் ஹி ப⁴க்தம் த்வயி தை꞉ ஸமர்ப்யதே || 61-4 ||

சோர்ந்து போன உன் நண்பர்கள் ஏமாற்றத்தோடும் பசியோடும் உன்னிடம் வெறுங்கையோடு
திரும்பி வந்து நடந்ததைச் சொன்னார்கள். சடங்குகளை மட்டும் லக்ஷியம் பண்ணுபவனுக்கு சங்கரனோ சாரங்கனோ தோன்றுவானா? பிராமணர்கள் கிருஷ்ணனுக்கு என்று சொல்லியும் உணவளிக்காத போது அவர்கள் சடங்குகள் என்ன பலனளிக்கும்? பரமனிடம் பக்தியற்றவன் கையால் பாமரனுக்கு பிரசாதம் எப்படி கிடைக்கும்?

निवेदयध्वं गृहिणीजनाय मां
दिशेयुरन्नं करुणाकुला इमा: ।
इति स्मितार्द्रं भवतेरिता गता-
स्ते दारका दारजनं ययाचिरे ॥५॥

nivedayadhvaM gR^ihiNiijanaaya maaM
disheyurannaM karuNaakulaa imaaH |
iti smitaardraM bhavateritaa gataastedaarakaa
daarajanaM yayaachire || 5

நிவேத³யத்⁴வம் க்³ருஹிணீஜனாய மாம்
தி³ஶேயுரன்னம் கருணாகுலா இமா꞉ |
இதி ஸ்மிதார்த்³ரம் ப⁴வதேரிதா க³தா-
ஸ்தே தா³ரகா தா³ரஜனம் யயாசிரே || 61-5 ||

கிருஷ்ணா, நீ சிறிதும் கலங்கவில்லை.எல்லாம் உன் திட்டப்படி தானே நடக்கிறது. நீ புன்சிரிப்போடு அந்த நண்பர்களை மீண்டும் அந்த கிராமத்தில் பிராமணர்களின் வீட்டுக்குச் சென்று அவர்கள் வீட்டு மனைவியரிடம் ''கிருஷ்ணனுக்கு பசிக்கிறதாம், உணவு தாருங்கள் என்று சொல்லி கேட்டு வாங்கி வாருங்கள்'' என்று அனுப்பினாய். அந்த யாதவ கோபர்களும் அவ்வாறே செய்தார்கள்.

गृहीतनाम्नि त्वयि सम्भ्रमाकुला-
श्चतुर्विधं भोज्यरसं प्रगृह्य ता: ।
चिरंधृतत्वत्प्रविलोकनाग्रहा:
स्वकैर्निरुद्धा अपि तूर्णमाययु: ॥६॥

gR^ihiitanaamni tvayi sambhramaakulaaH
chaturvidhaM bhOjyarasaM pragR^ihya taaH |
chiraM dhR^ita tvatpravilOkanaagrahaaH
svakairniruddhaa(a)pi tuurNamaayayuH || 6

க்³ருஹீதனாம்னி த்வயி ஸம்ப்⁴ரமாகுலா-
ஶ்சதுர்வித⁴ம் போ⁴ஜ்யரஸம் ப்ரக்³ருஹ்ய தா꞉ |
சிரம் த்⁴ருதத்வத்ப்ரவிலோகனாக்³ரஹா꞉
ஸ்வகைர்னிருத்³தா⁴ அபி தூர்ணமாயயு꞉ || 61-6 ||

என்ன மந்திரமோ, மாயமோ தெரியவில்லை குருவாயூரா ! அந்த பெண்கள் வெகுகாலமாக உன்னை தரிசிக்க ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தவர்கள். உன் பெயரைச் சொல்லியதும் அவர்கள் உடல் சிலிர்த்தது. மனதில் சந்தோஷம் படபடத்தது. கையும் காலும் ஓடவில்லை அவர்களுக்கு.
அவர்கள் கேட்ட முதல் கேள்வி?
''கிருஷ்ணன் எங்கே இருக்கிறான்?இங்கே வந்திருக்கிறானா? அவனைப் பார்க்க முடியுமா?''
'' ஆமாம், இதோ இந்த ஊர் எல்லையில் காட்டில் பலராமன், பசுக்கள், கன்றுகளோடும் எங்களோடும் இருக்கிறான்''
யாகத்திற்கு பிறகு எல்லா பிராமணர்களும், மற்றவர்களும் புசிக்க, அன்னதானம் செய்ய தயார் செய்து வைத்திருந்த உணவுகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்த ஸ்த்ரீகள், உன் நண்பர்கள் கோபர்களோடு உன்னை தரிசிக்க ஓடிவிட்டார்கள்.

विलोलपिञ्छं चिकुरे कपोलयो:
समुल्लसत्कुण्डलमार्द्रमीक्षिते ।
निधाय बाहुं सुहृदंससीमनि
स्थितं भवन्तं समलोकयन्त ता: ॥७॥

vilOlapinchChaM chikure kapOlayOH
samullasatkuNDala maardramiikshite |
nidhaaya baahuM suhR^idaM sasiimani
sthitaM bhavantaM samalOkayanta taaH || 7

விலோலபிஞ்ச²ம் சிகுரே கபோலயோ꞉
ஸமுல்லஸத்குண்ட³லமார்த்³ரமீக்ஷிதே |
நிதா⁴ய பா³ஹும் ஸுஹ்ருத³ம்ஸஸீமனி
ஸ்தி²தம் ப⁴வந்தம் ஸமலோகயந்த தா꞉ || 61-7 ||

கண்ணா, அந்த ப்ராமண ஸ்த்ரீகள், அந்த கிராமத்திற்கும் நீ இருந்த காட்டுப்பகுதிக்கும் இடையே உள்ள தூரத்தை வெகு வேகமாகப் பறந்து சென்று கடந்தார்கள் என்று சொல்லும்படியாக ஓட்டமும் நடையுமாக உன்னை வந்தடைந்தார்கள். ஆஹா, என்ன பேரானந்தம் அவர்களுக்கு. அவர்கள் மனதில் இருந்தவாறே நீ உன் சிரத்தில் மயில் இறகை செருகிக்கொண்டு உன் கன்னத்தை காதின் மகரகுண்டலங்கள் தொட்டுக்கொண்டு ஆட, காந்த சக்தி கொண்ட கருணை மிக்க கண்களோடு உன் தோழன் ஒருவன் தோளின் மேல் கை போட்டுக்கொண்டு அந்த ஸ்த்ரீகள் தரிசிக்க வகையாக நின்றாய்.

तदा च काचित्त्वदुपागमोद्यता
गृहीतहस्ता दयितेन यज्वना ।
तदैव सञ्चिन्त्य भवन्तमञ्जसा
विवेश कैवल्यमहो कृतिन्यसौ ॥८॥

tadaa cha kaachit tvadupaagamOdyataa
gR^ihiita hastaa dayitena yajvanaa |
tadaiva sanchintya bhavantamanjasaa
vivesha kaivalya mahO kR^itinyasau ||8

ததா³ ச காசித்த்வது³பாக³மோத்³யதா
க்³ருஹீதஹஸ்தா த³யிதேன யஜ்வனா |
ததை³வ ஸஞ்சிந்த்ய ப⁴வந்தமஞ்ஜஸா
விவேஶ கைவல்யமஹோ க்ருதின்யஸௌ || 61-8 ||

ஒரு பிராமணன் அவர்களைத் தொடர்ந்து வந்தவன் தனது மனைவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல முற்பட்டான். அவள் செய்வதறியாது உன்னை மன நிறைவோடு தியானித்தாள். அக்கணமே அவளுக்கு முக்தி காத்திருந்தது. எவ்வளவு பாக்கியசாலி, அதிர்ஷ்டக்காரி அந்த ஸ்த்ரீ.

आदाय भोज्यान्यनुगृह्य ता: पुन-
स्त्वदङ्गसङ्गस्पृहयोज्झतीर्गृहम् ।
विलोक्य यज्ञाय विसर्जयन्निमा-
श्चकर्थ भर्तृनपि तास्वगर्हणान् ॥९॥

aadaaya bhOjyaanyanugR^ihya taaH punaH
tvadanga sangaspR^ihayOjjhatiirgR^iham |
vilOkya yaj~naaya visarjayan imaashchakartha
bhartR^Inapi taasvagarhaNaan || 9

ஆதா³ய போ⁴ஜ்யான்யனுக்³ருஹ்ய தா꞉ புன-
ஸ்த்வத³ங்க³ஸங்க³ஸ்ப்ருஹயோஜ்ஜ²தீர்க்³ருஹம் |
விலோக்ய யஜ்ஞாய விஸர்ஜயன்னிமா-
ஶ்சகர்த² ப⁴ர்த்ருனபி தாஸ்வக³ர்ஹணான் || 61-9 ||

எல்லா ஸ்த்ரீர்களும் கொண்டு வந்திருந்த உணவு வகைகள் அத்தனையும் உங்களுக்கெல்லாம் பரிமாறினார்கள். பசியோடு இருந்த உனது நண்பர்கள் பசுக்கள் கன்றுகள் எல்லாமே வயிறு நிறைய ஆகாரம் உண்டனர். போஜனம் முடிந்ததும், நீ அவர்களை வாழ்த்தி ''நீங்கள் திரும்பி உங்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்'' என்று அனுப்பினாய். அவர்கள் கணவன்மார்கள் மனம் மாறி அவர்களை இன்முகத்துடன் வரவேற்க அவர்கள் மனதையும் மாற்றி இருந்த அசகாய சாமர்த்திய சாலி அல்லவா நீ?

निरूप्य दोषं निजमङ्गनाजने
विलोक्य भक्तिं च पुनर्विचारिभि:
प्रबुद्धतत्त्वैस्त्वमभिष्टुतो द्विजै-
र्मरुत्पुराधीश निरुन्धि मे गदान् ॥१०॥

niruupya dOShaM nijamanganaa jane
vilOkya bhaktiM cha punarvichaaribhiH |
prabuddhatattvaistvamabhiShTutO dvijaiH
marutpuraadhiisha nirundhi me gadaan ||10

நிரூப்ய தோ³ஷம் நிஜமங்க³னாஜனே
விலோக்ய ப⁴க்திம் ச புனர்விசாரிபி⁴꞉ |
ப்ரபு³த்³த⁴தத்த்வைஸ்த்வமபி⁴ஷ்டுதோ த்³விஜை-
ர்மருத்புராதீ⁴ஶ நிருந்தி⁴ மே க³தா³ன் || 61-10 ||

தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு, அலக்ஷியம் என்று உணர்ந்த அந்த வேத பிராமணர்கள் அதன் பிறகு அந்த தவறை செய்வார்களா? பக்தியின் தன்மை, அதன் ஆழம் இவற்றை தமது மனைவியர்கள் மூலம் அவர்கள் அறிய நீ வழி செய்தவன். இதற்கு தான் அன்று அந்த காட்டுக்கு செல்லலாம் என்று வழக்கமாக கொண்டுவரும் உணவையும் கொண்டுவரவேண்டாம் என்று தடுத்து பசியாற, வயிறார அறுசுவை உண்டி அனுபவிக்க எல்லோரையும் அழைத்து வந்தாயா? அதன் மூலம் பிராமணர்களுக்கும் உண்மையைஉணர்த்தினாயா? எண்டே குருவாயூரப்பா, என் நோயையும் தீர்த்து எனக்கும் அருள்செய்யப்பா.