Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 65
65. காற்றினிலே வரும் கீதம்.

ஸ்ரீ கிருஷ்ணனின் பால்ய லீலைகளில் ராஸலீலாவும் இடம் பெறும் . ரொம்ப சந்தோஷம் உண்டானால் நாம் கை கால் உடம்பு அசைத்து நமது ஆனந்தத்தை வெளிப்படுத்துகிறோம். பிருந்தாவன கோகுல கோபியர்கள் , தாயன்பு, சகோதர சகோதரி பாவம், சகி எனும் தோழிகளாகவும் கிருஷ்ணனோடு சகஜமாக பழகி மனம் களித்தவர்கள், நேரம் கழித்தவர்கள். நாராயணீயத்தில் மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி இதை அற்புதமாக சில தசகங்களில் பாடுகிறார். பக்தி ரசம் தவிர்த்து எந்த உணர்வும் கொள்ளாமல் ருசிக்க, ரசிக்க வேண்டிய பகுதி.

गोपीजनाय कथितं नियमावसाने
मारोत्सवं त्वमथ साधयितुं प्रवृत्त: ।
सान्द्रेण चान्द्रमहसा शिशिरीकृताशे
प्रापूरयो मुरलिकां यमुनावनान्ते ॥१॥

gOpii janaaya kathitaM niyamaavasaane
maarOtsavaM tvamatha saadhayituM pravR^ittaH |
saandreNa chaandramahasaa shishiriikR^itaashe
praapuurayO muralikaaM yamunaavanaante || 1

கோ³பீஜனாய கதி²தம் நியமாவஸானே
மாரோத்ஸவம் த்வமத² ஸாத⁴யிதும் ப்ரவ்ருத்த꞉ |
ஸாந்த்³ரேண சாந்த்³ரமஹஸா ஶிஶிரீக்ருதாஶே
ப்ராபூரயோ முரலிகாம் யமுனாவனாந்தே || 65-1 ||

கோபியர்கள் கண்ணனைக் காண அவனோடு விளையாட பேச பாட ஆட விரதம், தவம் மேற்கொண்டவர்கள் என்று சொல்லலாம். கண்ணன் அவ்வாறு அவர்களோடு நேரம் செலவழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தான். யமுனாநதி தீரம் கோலாலகலமாக காட்சி அளித்தது. முன்னிரவு சந்திரன் பால் போல் ஒளிப்ரகாசமாக எல்லாவற்றையும் வெள்ளியாக மாற்றியிருந்தான். கருப்பு கிருஷ்ணனை வெள்ளை பின்னணியில் பார்த்தால் தான் எடுப்பாக இருக்கும். எந்த காட்சியும் ஊமைப்படமாக இருந்தால் எப்படி ரசிக்கும். பின்னணி சங்கீதம் வேண்டாமா. இருக்கவே இருக்கிறது கண்ணனின் அதிசய புல்லாங்குழல். அதில் பிறக்காத நாதமா கீதமா? எங்கும் அழகு, எதிலும் ஆனந்தம்.

सम्मूर्छनाभिरुदितस्वरमण्डलाभि:
सम्मूर्छयन्तमखिलं भुवनान्तरालम् ।
त्वद्वेणुनादमुपकर्ण्य विभो तरुण्य-
स्तत्तादृशं कमपि चित्तविमोहमापु: ॥२॥

sammuurchChanaabhirudita svaramaNDalaabhiH
sammuurchChayantamakhilaM bhuvanaantaraalam |
tvadveNunaadamupakarNya vibhO taruNyaH
tattaadR^ishaM kamapi chittavimOhamaapuH || 2

ஸம்மூர்ச²னாபி⁴ருதி³தஸ்வரமண்ட³லாபி⁴꞉
ஸம்மூர்ச²யந்தமகி²லம் பு⁴வனாந்தராலம் |
த்வத்³வேணுனாத³முபகர்ண்ய விபோ⁴ தருண்ய-
ஸ்தத்தாத்³ருஶம் கமபி சித்தவிமோஹமாபு꞉ || 65-2 ||

ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. சிறுவயதில் நாம் எல்லோரும் படித்த ருசிகரமான கதை .
Pied Piper of Hamelin. அதில் டச்சுக்காரன் ஒருவன் குழல் போன்று ஒன்றை வாசிப்பான். அதைக் கேட்டதும், தாத்தா, பாட்டி, மாமா மாமி குஞ்சு எலிகள் அனைத்தும் எங்கிருந்தோ படையாக ஓடி அவனிடம் வரும். இந்த கதை எழுதியவனுக்கு ஒருவேளை கிருஷ்ணன் குழல் ஓசை காந்த ஈர்ப்பு தெரிந்திருக்குமோ?
கண்ணன் குழல் ஜீவசக்தி கொண்டது. மதியை மயக்குவது. சப்த ஸ்வரங்களை பின்னிப் பிணைந்து தேவகணத்தை பிழிந்து தருவது. சங்கீத எல்லைகள் அனைத்தையும் தொட்டு ஸ்வரஜாதி மலர்களை அள்ளி வீசுவது. கோபிகளின் மனம் கோபியர் கொஞ்சும் ரமணன் மேல் கொள்ளைபோனதில் என்ன ஆச்சர்யம்.

ता गेहकृत्यनिरतास्तनयप्रसक्ता:
कान्तोपसेवनपराश्च सरोरुहाक्ष्य: ।
सर्वं विसृज्य मुरलीरवमोहितास्ते
कान्तारदेशमयि कान्ततनो समेता: ॥३॥

taa geha kR^itya nirataastanaya prasaktaaH
kaantOpasevana paraashcha sarOruhaakshyaH |
sarvaM visR^ijya muraliirava mOhitaaste
kaantaaradeshamayi kaantatanO sametaaH || 3

தா கே³ஹக்ருத்யனிரதாஸ்தனயப்ரஸக்தா꞉
காந்தோபஸேவனபராஶ்ச ஸரோருஹாக்ஷ்ய꞉ |
ஸர்வம் விஸ்ருஜ்ய முரலீரவமோஹிதாஸ்தே
காந்தாரதே³ஶமயி காந்ததனோ ஸமேதா꞉ || 65-3 |

அந்த கால பெண்கள் ஒரு நிமிஷ நேரமும் வீணாக்காமல் எண்ணற்ற வீட்டு வேலைகளை சந்தோஷமாக ஆர்வமாக செய்து சுக போகம் வழங்கியவர்கள். அவர்கள் அத்தனை வேலை களையும் உதறிப் போட்டுவிட்டு, புருஷன், பெற்றோர், குழந்தைகள், எவரையும் மறந்து உன்னைத் தேடி ஓடி மதுவனத்திற்கு, பண்டீரவனத்துக்கு ஓடிவந்தார்கள் என்றால் எப்படி உன் வேணுகானம் அவர்களை கிறங்க அடித்திருக்கும்? கிருஷ்ணா நீ மாயாஜாலன் அல்லவா?

काश्चिन्निजाङ्गपरिभूषणमादधाना
वेणुप्रणादमुपकर्ण्य कृतार्धभूषा: ।
त्वामागता ननु तथैव विभूषिताभ्य-
स्ता एव संरुरुचिरे तव लोचनाय ॥४॥

kaashchinnijaanga paribhuuShaNa maadadhaanaa
veNupraNaadamupakarNya kR^itaardhabhuuShaaH |
tvaamaagataa nanu tathaiva vibhuuShitaabhyaH
taa eva sanruruchire tava lOchanaaya ||4

காஶ்சின்னிஜாங்க³பரிபூ⁴ஷணமாத³தா⁴னா
வேணுப்ரணாத³முபகர்ண்ய க்ருதார்த⁴பூ⁴ஷா꞉ |
த்வாமாக³தா நனு ததை²வ விபூ⁴ஷிதாப்⁴ய-
ஸ்தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசனாய || 65-4 ||

கோபியர்கள் நிறைய நகைகள், ஆபரணங்கள் பூட்டிக் கொள்வார்கள், மலர்கள் தலைநிறைய சூட்டிக்கொள்வார்கள்.. அதில் நேரம் நிறைய செலவிடுபவர்கள். ஆனால் என்ன ஆச்சர்யம், உன் குரல் கேட்ட மாத்திரத்தில் அப்படியே அனைத்தையும் அந்த அந்த இடத்திலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டம் நீ இருக்கும் இடத்திற்கு ஓட வைத்தது உன் குழலோசை. நீ ஆபரணம், நகை அணிந்த முகத்தையா விரும்புபவன். மனத்தை யல்லவோ ரசிப்பவன். தேடுபவன். அவர்கள் நகை அணிந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன?

हारं नितम्बभुवि काचन धारयन्ती
काञ्चीं च कण्ठभुवि देव समागता त्वाम् ।
हारित्वमात्मजघनस्य मुकुन्द तुभ्यं
व्यक्तं बभाष इव मुग्धमुखी विशेषात् ॥५॥

haaraM nitambabhuvi kaachana dhaarayantii
kaa~nchii~ncha kaNThabhuvi deva samaagataa tvaam |
haaritvamaatma jaghanasya mukunda tubhyaM
vyaktaM babhaaSha iva mugdhamukhii visheShaat || 5

ஹாரம் நிதம்ப³பு⁴வி காசன தா⁴ரயந்தீ
காஞ்சீம் ச கண்ட²பு⁴வி தே³வ ஸமாக³தா த்வாம் |
ஹாரித்வமாத்மஜக⁴னஸ்ய முகுந்த³ துப்⁴யம்
வ்யக்தம் ப³பா⁴ஷ இவ முக்³த⁴முகீ² விஶேஷாத் || 65-5 ||

கிருஷ்ணா, ஒரு வேடிக்கை உனக்கு தெரியுமா? உன் குழலோசை ஒரு கோபியை என்ன செய்ய வைத்தது தெரியுமா? கழுத்தில் அணிய வேண்டிய நெக்லஸை இடுப்பில் ஒட்டியாணம் போல் சுற்றிக் கொண்டு உன்னை நோக்கி ஓடினாள். உண்மையிலேயே அவள் இடுப்பு அவ்வளவு சின்னதாக இருந்திருக்கும். ஒருவள் நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் சாந்தை கால்களில் இட்டுக்கொண்டு ஓடினாள். யாருக்குமே தலைகால் புரியவில்லை.

काचित् कुचे पुनरसज्जितकञ्चुलीका
व्यामोहत: परवधूभिरलक्ष्यमाणा ।
त्वामाययौ निरुपमप्रणयातिभार-
राज्याभिषेकविधये कलशीधरेव ॥६॥

kaachitkuche punarasajjita ka~nchuliikaa
vyaamOhataH paravadhuubhiralakshyamaaNaa |
tvaamaayayau nirupama praNayaatibhaara
raajyaabhiSheka vidhaye kalashiidhareva || 6

காசித்குசே புனரஸஜ்ஜிதகஞ்சுலீகா
வ்யாமோஹத꞉ பரவதூ⁴பி⁴ரலக்ஷ்யமாணா |
த்வாமாயயௌ நிருபமப்ரணயாதிபா⁴ர-
ராஜ்யாபி⁴ஷேகவித⁴யே கலஶீத⁴ரேவ || 65-6

ஒருவளுக்கு மேலே ஆடை அணிந்துகொள்ளக் கூட மறந்துபோய்விட்டது. அவ்வளவு மதி மயக்கமா? அவசரமா? எல்லாம் உன் குழலோசை பண்ணிய கோலம். மற்றவர்கள் எடுத்துச் சொன்னபோது தான் அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் கவனம் பூரா உனக்கு அபிஷேகம் பண்ண எடுத்துக் கொண்டுவந்த இரண்டு குட யமுனை நீரின் மேல் தான் இருந்ததாம்.

काश्चित् गृहात् किल निरेतुमपारयन्त्य-
स्त्वामेव देव हृदये सुदृढं विभाव्य ।
देहं विधूय परचित्सुखरूपमेकं
त्वामाविशन् परमिमा ननु धन्यधन्या: ॥७॥

kaashchid gR^ihaat kila niretumapaarayantyaH
tvaameva deva hR^idaye sudR^iDhaM vibhaavya |
dehaM vidhuuya parachitsukharuupamekaM
tvaamaavishan paramimaa nanu dhanyadhanyaaH || 7

காஶ்சித்³க்³ருஹாத்கில நிரேதுமபாரயந்த்ய-
ஸ்த்வாமேவ தே³வ ஹ்ருத³யே ஸுத்³ருட⁴ம் விபா⁴வ்ய |
தே³ஹம் விதூ⁴ய பரசித்ஸுக²ரூபமேகம்
த்வாமாவிஶன்பரமிமா நனு த⁴ன்யத⁴ன்யா꞉ || 65-7 ||

இன்னொரு விஷயமும் சொல்கிறேன் கிருஷ்ணா. சில பேருக்கு வீட்டை விட்டு நகர முடியாத நிலை. ஆனால் அவர்கள் இருந்த இடத்திலேயே மனதால் உன்னை நெருங்கவிடாமல் உன் பெயரைச்சொல்லி தியானம் செய்து கொண்டிருந்தார்கள். உன் பேரைச் சொல்லும் ''பேரானந்தம் '' அவர்களை உன்னிடம் இணைத்தது.

जारात्मना न परमात्मतया स्मरन्त्यो
नार्यो गता: परमहंसगतिं क्षणेन ।
तं त्वां प्रकाशपरमात्मतनुं कथञ्चि-
च्चित्ते वहन्नमृतमश्रममश्नुवीय ॥८॥

jaaraatmanaa na paramaatmatayaa smarantyO
naaryO gataaH paramahamsagatiM kshaNena |
taM tvaaM prakaasha paramaatmatanuM katha~nchit
chitte vahannamR^ita-mashrama mashnuviiya ||8

ஜாராத்மனா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ க³தா꞉ பரமஹம்ஸக³திம் க்ஷணேன |
தம் த்வாம் ப்ரகாஶபரமாத்மதனும் கத²ஞ்சி-
ச்சித்தே வஹன்னம்ருதமஶ்ரமமஶ்னுவீய || 65-8 ||

ஒன்று நிச்சயம் கண்ணா. அந்த எல்லா கோபியருக்கும் நீ கடவுளாகவே தென்படவில்லை. அவர்களது உயிருக்கும் மேலான செல்லக் குழந்தையாக தான் தோன்றினாய்.அளவற்ற பாசம் கொண்டு ஆனந்தத்தில் திக்கு முக்காடினார்கள்.

अभ्यागताभिरभितो व्रजसुन्दरीभि-
र्मुग्धस्मितार्द्रवदन: करुणावलोकी ।
निस्सीमकान्तिजलधिस्त्वमवेक्ष्यमाणो
विश्वैकहृद्य हर मे पवनेश रोगान् ॥९॥

abhyaagataabhirabhitO vrajasundariibhiH
mugdhasmitaardra vadanaH karuNaavalOkii |
nissiima kaanti jaladhistvamavekshyamaaNO
vishvaikahR^idya hara me paramesha rOgaan ||9

அப்⁴யாக³தாபி⁴ரபி⁴தோ வ்ரஜஸுந்த³ரீபி⁴-
ர்முக்³த⁴ஸ்மிதார்த்³ரவத³ன꞉ கருணாவலோகீ |
நிஸ்ஸீமகாந்திஜலதி⁴ஸ்த்வமவேக்ஷ்யமாணோ
விஶ்வைகஹ்ருத்³ய ஹர மே பவனேஶ ரோகா³ன் || 65-9 ||

நீ வசீகரன். உன் புன்முறுவல் ஒன்றே போதுமே மதியை மயக்க. உன்னைப் படத்தில் கண்ட நானே மயங்குகிறேனே. நேரில் கண்ட அவர்கள் நிலையைச் சொல்லவா முடியும். முகமலர் என்பது நிச்சயம் உன் முகத்தைப் பார்த்தபிறகு தோன்றிய வார்த்தையாக இருக்கும். எண்டே குருவாயூரப்பா என் வாத நோய் தீர்த்து என்னை வாழவிடு தெய்வமே.