Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 9
9 ப்ரம்மாவின் ஸ்ருஷ்டி துவங்கியது.

स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे
कुत: स्विदिदमम्बुधावुदितमित्यनालोकयन् ।
तदीक्षणकुतूहलात् प्रतिदिशं विवृत्तानन-
श्चतुर्वदनतामगाद्विकसदष्टदृष्ट्यम्बुजाम् ॥१॥

sthitaḥ sa kamalōdbhavastava hi nābhipaṅkēruhē
kutaḥ svididamaṁbudhāvuditamityanālōkayan |
tadīkṣaṇakutūhalātpratidiśaṁ vivr̥ttānana-
ścaturvadanatāmagādvikasadaṣṭadr̥ṣṭyaṁbujām || 9-1 ||

ஸ்தி²த꞉ ஸ கமலோத்³ப⁴வஸ்தவ ஹி நாபி⁴பங்கேருஹே
குத꞉ ஸ்விதி³த³மம்பு³தா⁴வுதி³தமித்யனாலோகயன் |
ததீ³க்ஷணகுதூஹலாத்ப்ரதிதி³ஶம் விவ்ருத்தானந-
ஶ்சதுர்வத³னதாமகா³த்³விகஸத³ஷ்டத்³ருஷ்ட்யம்பு³ஜாம் || 9-1 ||

குருவாயூரப்பா, நாராயணா, பிரளயம் முடிந்து கல்பம் துவங்குகிறது. உனது நாபிக் கமலத்தில் உதித்த தாமரைக் கொடியில் மலர்ந்த தாமரை இதழ்கள் மேல் சிருஷ்டி கர்த்தா ப்ரம்மா அமர்ந்து கொண்டு எங்கிருந்து இந்த தாமரை வந்தது என்று ஒரு கணம் அதிசயித்து, தனது நான்கு சிரங்களையும் திருப்பி எங்கும் தனது எட்டு கண்களை வீசிப் பார்க்கிறார்.

महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं
विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् ।
क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं
कुत: स्विदिदम्बुजं समजनीति चिन्तामगात् ॥२॥

mahārṇavavighūrṇitaṁ kamalamēva tatkēvalaṁ
vilōkya tadupāśrayaṁ tava tanuṁ tu nālōkayan |
ka ēṣa kamalōdarē mahati nissahāyō hyahaṁ
kutaḥ svididamaṁbujaṁ samajanīti cintāmagāt || 9-2 ||

மஹார்ணவவிகூ⁴ர்ணிதம் கமலமேவ தத்கேவலம்
விலோக்ய தது³பாஶ்ரயம் தவ தனும் து நாலோகயன் |
க ஏஷ கமலோத³ரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம்
குத꞉ ஸ்விதி³த³மம்பு³ஜம் ஸமஜனீதி சிந்தாமகா³த் || 9-2 ||

எங்கும் ஜலமயம், ஒரு உருவமும் உயிரும் தென்படவில்லை, நிசப்தம், கடலொலி தவிர. ப்ரம்மாவைத்தவிர வேறு எவருமே இல்லை. இவ்வளவு நீண்ட பெரிய தாமரைக்கொடி எங்கிருந்து முளைத்தது? பிரம்மனுக்கு நாராயணன் கண்ணில் தெரியவில்லை. பூ மறைத்தது. நடுக்கடலில் தாமரை எழும்பி ஆடுவது போல் இருந்தது. பிரம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி கடலில் தாமரை? எப்படி அதன் மேல் நான்?'' என்று யோசிக்கிறார்.


अमुष्य हि सरोरुह: किमपि कारणं सम्भ्वे-
दिति स्म कृतनिश्चयस्स खलु नालरन्ध्राध्वना ।
स्वयोगबलविद्यया समवरूढवान् प्रौढधी -
स्त्वदीयमतिमोहनं न तु कलेवरं दृष्टवान् ॥३॥

amuṣya hi sarōruhaḥ kimapi kāraṇaṁ saṁbhavē-
diti sma kr̥taniścayaḥ sa khalu nālarandhrādhvanā |
svayōgabalavidyayā samavarūḍhavānprauḍhadhīḥ
tvadīyamatimōhanaṁ na tu kalēbaraṁ dr̥ṣṭavān || 9-3 ||

அமுஷ்ய ஹி ஸரோருஹ꞉ கிமபி காரணம் ஸம்ப⁴வே-
தி³தி ஸ்ம க்ருதனிஶ்சய꞉ ஸ க²லு நாலரந்த்⁴ராத்⁴வனா |
ஸ்வயோக³ப³லவித்³யயா ஸமவரூட⁴வான்ப்ரௌட⁴தீ⁴꞉
த்வதீ³யமதிமோஹனம் ந து கலேப³ரம் த்³ருஷ்டவான் || 9-3 ||

ப்ரம்ம ஞானி அல்லவா? தாமரை தானாகவே வரவில்லை. தன்னைச் சுமக்கவில்லை. ஏதோ ஒரு தெய்வீக காரணம் அதன் பின் இருக்கிறது. தனது யோக சக்தியால் அந்த தாமரைத் தண்டினுள் புகுந்து தேடியும் எங்கிருந்து அது உற்பத்தியானது என்பதை பிரம்மாவால் அறியமுடியவில்லை.

तत: सकलनालिकाविवरमार्गगो मार्गयन्
प्रयस्य शतवत्सरं किमपि नैव संदृष्टवान् ।
निवृत्य कमलोदरे सुखनिषण्ण एकाग्रधी:
समाधिबलमादधे भवदनुग्रहैकाग्रही ॥४॥

tatassakalanālikāvivaramārgagō mārgayan
prayasya śatavatsaraṁ kimapi naiva sandr̥ṣṭavān |
nivr̥tya kamalōdarē sukhaniṣaṇṇa ēkāgradhīḥ
samādhibalamādadhē bhavadanugrahaikāgrahī || 9-4 ||

ததஸ்ஸகலனாலிகாவிவரமார்க³கோ³ மார்க³யன்
ப்ரயஸ்ய ஶதவத்ஸரம் கிமபி நைவ ஸந்த்³ருஷ்டவான் |
நிவ்ருத்ய கமலோத³ரே ஸுக²னிஷண்ண ஏகாக்³ரதீ⁴꞉
ஸமாதி⁴ப³லமாத³தே⁴ ப⁴வத³னுக்³ரஹைகாக்³ரஹீ || 9-4 ||

நூற்றுக்கணக்கான வருஷங்கள் பிரம்மன் அந்த தாமரைத் தண்டின் துவாரங்களில் உட்புகுந்து தேடியும் அதன் ஆதாரத்தை அறியமுடியாததால் பிரம்மதேவன் திரும்ப தாமரை மலர்மேல் வந்து அமர்ந்து தவம் இருந்தார். நாராயணா உன் சக்தி எவரால் அறியமுடியும்? உன் தரிசனம் பெற ப்ரம்மா சமாதி நிலையடைந்தார் .


शतेन परिवत्सरैर्दृढसमाधिबन्धोल्लसत्-
प्रबोधविशदीकृत: स खलु पद्मिनीसम्भव: ।
अदृष्टचरमद्भुतं तव हि रूपमन्तर्दृशा
व्यचष्ट परितुष्टधीर्भुजगभोगभागाश्रयम् ॥५॥

śatēna parivatsarairdr̥ḍhasamādhibandhōllasat-
prabōdhaviśadīkr̥taḥ sa khalu padminīsaṁbhavaḥ |
adr̥ṣṭacaramadbhutaṁ tava hi rūpamantardr̥śā
vyacaṣṭa parituṣṭadhīrbhujagabhōgabhāgāśrayam || 9-5 ||

ஶதேன பரிவத்ஸரைர்த்³ருட⁴ஸமாதி⁴ப³ந்தோ⁴ல்லஸத்-
ப்ரபோ³த⁴விஶதீ³க்ருத꞉ ஸ க²லு பத்³மினீஸம்ப⁴வ꞉ |
அத்³ருஷ்டசரமத்³பு⁴தம் தவ ஹி ரூபமந்தர்த்³ருஶா
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ⁴ர்பு⁴ஜக³போ⁴க³பா⁴கா³ஶ்ரயம் || 9-5 ||

தவமிருந்தால் தரிசனம் தரும் தெய்வமே. ப்ரம்மதேவனுக்கு ஞானம் பிறந்தது. உனது திவ்ய தரிசனம் கிட்டியது. ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்ட உனது திவ்ய சௌந்தர்ய ஸ்வரூபத்தைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்/ எவராலும் காணமுடியாத அற்புத காட்சி ப்ரம்மதேவனுக்கு கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தார் . தான் தோன்றிய காரணம் புரிந்து கொண்டார் .

किरीटमुकुटोल्लसत्कटकहारकेयूरयुङ्-
मणिस्फुरितमेखलं सुपरिवीतपीताम्बरम् ।
कलायकुसुमप्रभं गलतलोल्लसत्कौस्तुभं
वपुस्तदयि भावये कमलजन्मे दर्शितम् ॥६॥

kirīṭamukuṭōllasatkaṭakahārakēyūrayuṅ-
maṇisphuritamēkhalaṁ suparivītapītāṁbaram |
kalāyakusumaprabhaṁ galatalōllasatkaustubhaṁ
vapustadayi bhāvayē kamalajanmanē darśitam || 9-6 ||

கிரீடமுகுடோல்லஸத்கடகஹாரகேயூரயுங்-
மணிஸ்பு²ரிதமேக²லம் ஸுபரிவீதபீதாம்ப³ரம் |
கலாயகுஸுமப்ரப⁴ம் க³லதலோல்லஸத்கௌஸ்துப⁴ம்
வபுஸ்தத³யி பா⁴வயே கமலஜன்மனே த³ர்ஶிதம் || 9-6 ||

நாராயணா, உன்னுடைய திவ்ய ஸ்வரூபம், ஒளிவிடும் தங்க கிரீடம், கண்ணைப் பறிக்கும் நீலோத்பல நீல நிறம், நீ அணிந்திருக்கும் கௌஸ்துப மலர் அழகு, கழுத்தில் , தோளில் , மார்பில் அலங்கரிக்கும் பல வண்ண ஆபரணங்கள், இடுப்பில் தரித்த பொன்னிற பீதாம்பர வஸ்திரம் அதை பிணைத்திருக்கும் இன்னொரு மேல் வஸ்திரத்தின் கண்ணைப் பறிக்கும் அழகு, இவ்வாறு நீ அளிக்கும் உன் திவ்ய தரிசனத்தில் மயங்காதார் யார் ? ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடி போற்றி நமஸ்கரிக்கிறேன். பிரம்மனும் அதைத்தானே செய்தார் .

श्रुतिप्रकरदर्शितप्रचुरवैभव श्रीपते
हरे जय जय प्रभो पदमुपैषि दिष्ट्या दृशो: ।
कुरुष्व धियमाशु मे भुवननिर्मितौ कर्मठा-
मिति द्रुहिणवर्णितस्वगुणबंहिमा पाहि माम् ॥७॥

śrutiprakaradarśitapracuravaibhava śrīpatē
harē jaya jaya prabhō padamupaiṣi diṣṭyā dr̥śōḥ |
kuruṣva dhiyamāśu mē bhuvananirmitau karmaṭhā-
miti druhiṇavarṇitasvaguṇabaṁhimā pāhi mām || 9-7 ||

ஶ்ருதிப்ரகரத³ர்ஶிதப்ரசுரவைப⁴வ ஶ்ரீபதே
ஹரே ஜய ஜய ப்ரபோ⁴ பத³முபைஷி தி³ஷ்ட்யா த்³ருஶோ꞉ |
குருஷ்வ தி⁴யமாஶு மே பு⁴வனநிர்மிதௌ கர்மடா²-
மிதி த்³ருஹிணவர்ணிதஸ்வகு³ணப³ம்ஹிமா பாஹி மாம் || 9-7 ||

ஸ்ரீ லட்சுமி காந்தா , நாராயணா, வேதங்கள் உன்ன்னைப் போற்றி பாடுகின்றன. உலகில் துன்பம் துயரம் எல்லாம் போக்கி இன்பமளிக்கும் லோகரக்ஷகா, நான் செய்த புண்ய பலனால் எனக்கு உனது திவ்ய தரிசனம் கிடைத்தது. நான் பாக்கியசாலி. எனக்கு நீ அளித்த இந்த பிரபஞ்ச ஸ்ரிஷ்டி காரியத்தை நான் குறைவற சிறப்பாக நிறைவேற்ற நீயே எனக்கு சக்தியும், திறமையும் ஞானத்தையும் தரவேண்டும்.'' என்று ப்ரம்ம தேவன் உன்னை வேண்டினார் அல்லவா? குருவாயூரப்பா, நானும் வேண்டிக்கொள்கிறேன், என் மீதும் கருணை காட்டப்பா.என் குறை தீர்த்து என்னை ரக்ஷித்தருள்வாய்'' என்று நாராயண நம்பூதிரி ஸ்தோத்ரம் செய்கிறார்.

लभस्व भुवनत्रयीरचनदक्षतामक्षतां
गृहाण मदनुग्रहं कुरु तपश्च भूयो विधे ।
भवत्वखिलसाधनी मयि च भक्तिरत्युत्कटे-
त्युदीर्य गिरमादधा मुदितचेतसं वेधसम् ॥८॥

labhasva bhuvanatrayīracanadakṣatāmakṣatāṁ
gr̥hāṇa madanugrahaṁ kuru tapaśca bhūyō vidhē |
bhavatvakhilasādhanī mayi ca bhaktiratyutkaṭē-
tyudīrya giramādadhā muditacētasaṁ vēdhasam || 9-8 ||

லப⁴ஸ்வ பு⁴வனத்ரயீரசனத³க்ஷதாமக்ஷதாம்
க்³ருஹாண மத³னுக்³ரஹம் குரு தபஶ்ச பூ⁴யோ விதே⁴ |
ப⁴வத்வகி²லஸாத⁴னீ மயி ச ப⁴க்திரத்யுத்கடே-
த்யுதீ³ர்ய கி³ரமாத³தா⁴ முதி³தசேதஸம் வேத⁴ஸம் || 9-8 ||

பகவானே நீ திருவாய் மலர்ந்தருளிய வார்த்தை எப்படி பிரம்மனை மகிழ்வித்தது. ஆஹா , இதோ நான் திருப்பி சொல்கிறேன் நீ அருளிய அந்த வரத்தை: '' பிரம்மதேவா, உனக்கு மங்களமுண்டாகட்டும். நீ துவங்கப்போகும் த்ரி புவன சிருஷ்டி iகாரியம் பரிபூர்ணமாக நிறைவேறட்டும். எனது ஆசிகள். மீண்டும் தவமிருந்து உனது சிறந்த பக்தியின் பயனாக, உனது விருப்பம் இனிதாக நிறைவேறட்டும் '' பிரம்மனின் சந்தோஷத்தை நான் சொல்லவா முடியும்?

शतं कृततपास्तत: स खलु दिव्यसंवत्सरा-
नवाप्य च तपोबलं मतिबलं च पूर्वाधिकम् ।
उदीक्ष्य किल कम्पितं पयसि पङ्कजं वायुना
भवद्बलविजृम्भित: पवनपाथसी पीतवान् ॥९॥

śataṁ kr̥tatapāstataḥ sa khalu divyasaṁvatsarā-
navāpya ca tapōbalaṁ matibalaṁ ca pūrvādhikam |
udīkṣya kila kampitaṁ payasi paṅkajaṁ vāyunā
bhavadbalavijr̥ṁbhitaḥ pavanapāthasī pītavān || 9-9 ||

ஶதம் க்ருததபாஸ்தத꞉ ஸ க²லு தி³வ்யஸம்வத்ஸரா-
நவாப்ய ச தபோப³லம் மதிப³லம் ச பூர்வாதி⁴கம் |
உதீ³க்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுனா
ப⁴வத்³ப³லவிஜ்ரும்பி⁴த꞉ பவனபாத²ஸீ பீதவான் || 9-9 ||

உண்ணி கிருஷ்ணா, உன் திருவாக்கின் படி, மிகுந்த உற்சாகத்தோடு ப்ரம்ம தேவன் மறுபடியும் ஒரு நூறு வருஷங்கள் தவமிருந்தார் . உன் அருளால் அவருக்கு சர்வ சக்தியும் சித்தியாயிற்று. தெய்வபலமும், மனோபலமும் ஒரு சேரப்பெற்று முன்னிலும் அதிக சக்தியோடு அவர் உன்னை வணங்கினார் . அவர் அமர்ந்திருந்த தாமரை மலர் கடலில் காற்றில் மிதந்து அசைந்தது. உன்னிடமிருந்து பெற்ற அளவிடமுடியாத சக்தியோடு காற்று நீர் இரண்டுமே உனது ஜீவசக்தியாக அவருள்ளே செல்ல ப்ரம்மா புத்துணர்ச்சி யடைந்தார் .

तवैव कृपया पुनस्सरसिजेन तेनैव स:
प्रकल्प्य भुवनत्रयीं प्रववृते प्रजानिर्मितौ ।
तथाविधकृपाभरो गुरुमरुत्पुराधीश्वर
त्वमाशु परिपाहि मां गुरुदयोक्षितैरीक्षितै: ॥१०॥

tavaiva kr̥payā punaḥ sarasijēna tēnaiva saḥ
prakalpya bhuvanatrayīṁ pravavr̥tē prajānirmitau |
tathāvidhakr̥pābharō gurumarutpurādhīśvara
tvamāśu paripāhi māṁ gurudayōkṣitairīkṣitaiḥ || 9-10 ||

தவைவ க்ருபயா புன꞉ ஸரஸிஜேன தேனைவ ஸ꞉
ப்ரகல்ப்ய பு⁴வனத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜானிர்மிதௌ |
ததா²வித⁴க்ருபாப⁴ரோ கு³ருமருத்புராதீ⁴ஶ்வர
த்வமாஶு பரிபாஹி மாம் கு³ருத³யோக்ஷிதைரீக்ஷிதை꞉ || 9-10

அடுத்து ப்ரம்மா தாமரை மலர்மேல் அமர்ந்தவாறு மூவுலகையும் படைத்தார் , அவற்றில் பலகோடி ஜீவன்கள் உயிர் பெற்றன. எண்டே குருவாயூரப்பா, எவ்வளவு தயை, காருண்யம் உனக்கு. பிரபு என் மேலும் கருணை கூர்ந்து ரட்சிக்குமாறு உன்னை நமஸ்கரிக்கிறேன் ''