Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 54
54. காளீயன் விஷம்.

காளிங்கன் என்கிற நாகம் கருடனை ஒருமுறை துன்புறுத்தியது. கருடன் ஆக்ரோஷத்தோடு காளிங்கனை துரத்த, அவன் பிருந்தாவனம் ஓடிவந்துவிட்டான். அங்கே கருடன் நுழையமுடியாதபடி ஒரு ரிஷி சாபம். காளிங்கன் தனது விஷத்தை அங்கே காளிந்தி நதியில் கலந்து பலர் அந்த விஷநீர் பருகி மரணமடைந்தார்கள். கிருஷ்ணன் காளிங்கனை விரட்டிவிட்டு விஷத்தை போக்கி அந்த கோபர்களை உயிர்ப்பித்தான். இனி ஸ்லோகங்கள்:

त्वत्सेवोत्कस्सौभरिर्नाम पूर्वं
कालिन्द्यन्तर्द्वादशाब्दम् तपस्यन् ।
मीनव्राते स्नेहवान् भोगलोले
तार्क्ष्यं साक्षादैक्षताग्रे कदाचित् ॥१॥

tvatsevOtkaH saubharirnaama puurvaM
kaalindyantardvaadashaabdaM tapasyan |
miinavraate snehavaan bhOgalOle
taarkshyaM saakshaadaikshataagre kadaachit || 1

த்வத்ஸேவோத்க꞉ ஸௌப⁴ரிர்னாம பூர்வம்
காலிந்த்³யந்தர்த்³வாத³ஶாப்³த³ம் தபஸ்யன் |
மீனவ்ராதே ஸ்னேஹவான்போ⁴க³லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாதை³க்ஷதாக்³ரே கதா³சித் || 54-1 ||

குருவாயூரப்பா, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? சௌபரி என்கிற ரிஷி உன்னை நினைத்து தவமிருக்க இந்த காளிந்தி நதியில் 12 வருஷம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மீன் சிநேகிதம் ஏற்பட்டது. அப்போது மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

त्वद्वाहं तं सक्षुधं तृक्षसूनुं
मीनं कञ्चिज्जक्षतं लक्षयन् स: ।
तप्तश्चित्ते शप्तवानत्र चेत्त्वं
जन्तून् भोक्ता जीवितं चापि मोक्ता ॥२॥

tvadvaahaM taM sakshudhaM tR^ikshasuunuM
miinaM ka~nchijjakshataM lakshayan saH |
taptashchitte shaptavaanatra chettvaM
jantuun bhOktaa jiivitaM chaapi mOktaa || 2

த்வத்³வாஹம் தம் ஸக்ஷுத⁴ம் த்ருக்ஷஸூனும்
மீனம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷயன் ஸ꞉ |
தப்தஶ்சித்தே ஶப்தவானத்ர சேத்த்வம்
ஜந்தூன் போ⁴க்தா ஜீவிதம் சாபி மோக்தா || 54-2 ||

கருடன் அருகே வந்தான். அவன் கண்ணில் பசி தெரிந்தது.ரிஷியின் சினேகிதி மீனைக் கண்டதும் நாக்கில் நீர் சுரந்தது. மீனைக்காலி செய்தவன் எல்லாமீன்களையும் ஒன்றுவிடாமல் தின்பதற்கு துடித்தான். ரிஷிக்கு ரொம்ப வருத்தம். ''அடே கருடா, இனிமேல் இந்த காளிந்தி நதிப்பக்கம் வந்து எந்த மீனையாவது தொட்டால் அது தான் உனது கடைசி சாப்பாடு. அடுத்த கணமே உனக்கு மரணம். இது நிச்சயம். ஓடு, எங்காவது போய் தப்பித்துக் கொள்'' என்று சாபமிட்டார்.

तस्मिन् काले कालिय: क्ष्वेलदर्पात्
सर्पाराते: कल्पितं भागमश्नन् ।
तेन क्रोधात्त्वत्पदाम्भोजभाजा
पक्षक्षिप्तस्तद्दुरापं पयोऽगात् ॥३॥

tasmin kaale kaaliyaH kshveladarpaat
sarpaaraateH kalpitaM bhaagamashnan |
tena krOdhaat tvatpadaambhOjabhaajaa
pakshakshiptaH tadduraapaM payO(a)gaat || 3

தஸ்மின்காலே காலிய꞉ க்ஷ்வேலத³ர்பாத்
ஸர்பாராதே꞉ கல்பிதம் பா⁴க³மஶ்னந் |
தேன க்ரோதா⁴த்த்வத்பதா³ம்போ⁴ஜபா⁴ஜா
பக்ஷக்ஷிப்தஸ்தத்³து³ராபம் பயோ(அ)கா³த் || 54-3 ||

அப்போது தான் இந்த காளிங்கன் எனும் நாகம் அங்கே வந்தான். தனது விஷத்தால் நீரை விஷமாக்கி கருடன் எந்த மீனையும் திங்க முடியாமல் செய்துவிட்டான். உனது சேவகன் சிறந்த பக்தன் கருடனுக்கு காளிங்கன் மேல் கோபம் வந்தது. இறக்கையை விரித்துக்கொண்டு காளிங்கனை கொல்ல வந்தபோது காளிங்கன் விஷநீரின் அடிக்கு சென்று பதுங்கி கொண்டான். கருடனால் காளிந்தி நதி நீரை தொடக்கூட முடியாது. ரிஷி சாபம் நினைவுக்கு வந்தது.

घोरे तस्मिन् सूरजानीरवासे
तीरे वृक्षा विक्षता: क्ष्वेलवेगात् ।
पक्षिव्राता: पेतुरभ्रे पतन्त:
कारुण्यार्द्रं त्वन्मनस्तेन जातम् ॥४॥

ghOre tasmin suurajaaniiravaase
tiire vR^ikshaa vikshataaH kshvelavegaat |
pakshivraataaH peturabhre patantaH
kaaruNyaardraM tvanmanastena jaatam ||4

கோ⁴ரே தஸ்மின்ஸூரஜானீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா꞉ க்ஷ்வேலவேகா³த் |
பக்ஷிவ்ராதா꞉ பேதுரப்⁴ரே பதந்த꞉
காருண்யார்த்³ரம் த்வன்மனஸ்தேன ஜாதம் || 54-4 ||

காளிங்கனின் தொந்தரவு தாங்கமுடியவில்லை. அவனது கொடிய விஷத்தால், கரையில் இருந்த மரங்கள் செடிகொடிகள் எல்லாம் பட்டுப்போயின. மேலே அந்த விஷநீர் காற்றை சுவாசித்த பறவைகள் செத்து விழுந்தன. கிருஷ்ணா நீ பிருந்தாவனத்தில் இருந்தபோது இந்த விஷயம் உன் காதில் விழுந்து நீ அந்த உயிர்களுக்காக கருணை கொண்டாய்.

काले तस्मिन्नेकदा सीरपाणिं
मुक्त्वा याते यामुनं काननान्तम् ।
त्वय्युद्दामग्रीष्मभीष्मोष्मतप्ता
गोगोपाला व्यापिबन् क्ष्वेलतोयम् ॥५॥

kaale tasminnekadaa siirapaaNiM
muktvaayaate yaamunaM kaananaantam |
tvayyuddaama griiShma bhiiShmOShmataptaa
gO gOpaalaa vyaapiban kshvelatOyam || 5

காலே தஸ்மின்னேகதா³ ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுனம் கானநாந்தம் |
த்வய்யுத்³தா³மக்³ரீஷ்மபீ⁴ஷ்மோஷ்மதப்தா
கோ³கோ³பாலா வ்யாபிப³ன் க்ஷ்வேலதோயம் || 54-5 ||

இப்படிப்பட்ட சமயத்தில் தான் வாதபுரீஸ்வரா, நீ ஒருநாள் கிருஷ்ணன் எனும் கோபனாக பசுக்களை மேய்த்துக்கொண்டு பலராமனுடனும் நண்பர்களோடும் காட்டின் அடர்ந்த பகுதிகளில் திறிந்தாய். வெயில் சுட்டெரித்தது. கன்றுக்குட்டிகள், பசுக்கள் நண்பர்கள் எல்லோருக்குமே தாகம். குடிக்க நீர் தேடினார்கள். காளிந்தி நதி நீரை வயிறு முட்ட குடித்துவிட்டார்கள்.

नश्यज्जीवान् विच्युतान् क्ष्मातले तान्
विश्वान् पश्यन्नच्युत त्वं दयार्द्र: ।
प्राप्योपान्तं जीवयामासिथ द्राक्
पीयूषाम्भोवर्षिभि: श्रीकटक्षै: ॥६॥

nashyajjiivaan vichyutaan kshmaatale taan
vishvaan pashyannachyuta tvaM dayaardraH |
praapyOpaantaM jiivayaamaasitha draak
piiyuuShaambhO varShibhiH shriikaTaakshaiH || 6

நஶ்யஜ்ஜீவான் விச்யுதான் க்ஷ்மாதலே தான்
விஶ்வான் பஶ்யன்னச்யுத த்வம் த³யார்த்³ர꞉ |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித² த்³ராக்
பீயூஷாம்போ⁴வர்ஷிபி⁴꞉ ஶ்ரீகடாக்ஷை꞉ || 54-6 ||

ஆஹா இது என்ன விபரீதம், நண்பர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஒன்று விடாமல் கரையில் இறந்து விழுந்து கிடக்க என்ன ஆபத்து நேர்ந்தது இங்கு? அச்சுதா, இரக்கம் நிறைந்த உன் மனம் கலங்கி நின்றாய் நீ. உன் கருணைப்பார்வையை அவர்கள்மேல் செலுத்திய அடுத்த கணமே அனைத்தும், அனைவரும் உயிர் பெற்ற அதிசயம் நிகழ்ந்தது.

किं किं जातो हर्षवर्षातिरेक:
सर्वाङ्गेष्वित्युत्थिता गोपसङ्घा: ।
दृष्ट्वाऽग्रे त्वां त्वत्कृतं तद्विदन्त-
स्त्वामालिङ्गन् दृष्टनानाप्रभावा: ॥७॥

kiM kiM jaatO harShavarShaatirekaH
sarvaangeShvityutthitaa gOpasanghaaH |
dR^iShTvaagre tvaaM tvatkR^itaM tadvidantaH
tvaamaalingan dR^iShTanaanaa prabhaavaaH || 7

கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷாதிரேக꞉
ஸர்வாங்கே³ஷ்வித்யுத்தி²தா கோ³பஸங்கா⁴꞉ |
த்³ருஷ்ட்வா(அ)க்³ரே த்வாம் த்வத்க்ருதம் தத்³வித³ந்த-
ஸ்த்வாமாலிங்க³ன் த்³ருஷ்டனானாப்ரபா⁴வா꞉ || 54-7 ||

புத்துயிர் பெற்ற கோபர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். என்ன நடந்தது நமக்கு ? எப்படி நமது மனதில் இத்தனை சந்தோஷம்.?நமது தேஹமே ஆனந்தத்தில் பற க்கிறதே! உன் எதிரே எழுந்து நின்றார்கள். நீர் குடித்து மயங்கி கண் இருந்து விஷத்தால் மாண்டது அரைகுறையாக நினைவுக்கு வந்தது. இதற்கு முன் நீ நிகழ்த்திய அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் நின்றது. இப்போது அவர்கள் அனைவரும் பசுக்களோடு உயிர்பிழைத்தது உன்னால் தான் என்பது அறிந்தார்கள். உன்னை அன்போடு பாசத்தோடு, நன்றியோடு இறுகக்கட்டி அணைத்தார்கள்.

गावश्चैवं लब्धजीवा: क्षणेन
स्फीतानन्दास्त्वां च दृष्ट्वा पुरस्तात् ।
द्रागावव्रु: सर्वतो हर्षबाष्पं
व्यामुञ्चन्त्यो मन्दमुद्यन्निनादा: ॥८॥

gaavashchaivaM labdhajiivaaH kshaNena
sphiitaanandaastvaaM cha dR^iShTvaa purastaat |
draagaavavruH sarvatO harShabaaShpaM
vyaamu~nchantyO mandamudyanninaadaaH || 8

கா³வஶ்சைவம் லப்³த⁴ஜீவா꞉ க்ஷணேன
ஸ்பீ²தானந்தா³ஸ்த்வாம் ச த்³ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்³ராகா³வவ்ரு꞉ ஸர்வதோ ஹர்ஷபா³ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த³முத்³யன்னினாதா³꞉ || 54-8 ||

வாய் பேசாத பசுக்களுக்கும் நன்றி உணர்ச்சி உண்டே. அவற்றின் கண்களில் நண்றிக கண்ணீர் பெருகியது. உன்னிடம் அருகே வந்து முகர்ந்தன, நக்கின, மெல்லிதாக முனகின .உன்னைச் சுற்றி சுற்றி பிரதக்ஷணம் செய்தன. ''அம்மா'' என்ற அவற்றின் குரலில் நீ தான் இந்த உலகத்துக்கே அம்மா என்பது ரொம்ப ரொம்ப அர்த்தபாவத்தோடு ஒலித்தது.

रोमाञ्चोऽयं सर्वतो न: शरीरे
भूयस्यन्त: काचिदानन्दमूर्छा ।
आश्चर्योऽयं क्ष्वेलवेगो मुकुन्दे-
त्युक्तो गोपैर्नन्दितो वन्दितोऽभू: ॥९॥

rOmaa~nchO(a)yaM sarvatO naH shariire
bhuuyasyantaH kaachidaanandamuurchChaa |
aashcharyO(a)yaM kshvelavegO mukundetyuktO
gOpaiH nanditO vanditO(a)bhuuH || 9

ரோமாஞ்சோ(அ)யம் ஸர்வதோ ந꞉ ஶரீரே
பூ⁴யஸ்யந்த꞉ காசிதா³னந்த³மூர்சா² |
ஆஶ்சர்யோ(அ)யம் க்ஷ்வேலவேகோ³ முகுந்தே³-
த்யுக்தோ கோ³பைர்னந்தி³தோ வந்தி³தோ(அ)பூ⁴꞉ || 54-9 ||

உன் சக கோப தோழர்கள் கிருஷ்ணா, உன்னை ஆலிங்கனம் செய்து முத்தமிட்டார்கள். மனமார நண்றியோடு வணங்கினார்கள். ''முகுந்தா, நீ என்ன மாயம் செய்தாயோ? எங்கள் உடலில் எதை பாய்ச்சினாயோ, அந்த ''விஷத்தின்'' சக்தி எங்களை புளகாங்கிதம் கொள்ள செய்கிறதப்பா. உடலெங்கும் மயிர்க்கூச்செறிகிறது. ஆனந்தம் பீரிட்டு வருகிறது''.

एवं भक्तान् मुक्तजीवानपि त्वं
मुग्धापाङ्गैरस्तरोगांस्तनोषि ।
तादृग्भूतस्फीतकारुण्यभूमा
रोगात् पाया वायुगेहाधिवास ॥१०॥

evaM bhaktaanmuktajiivaanapi tvaM
mugdhaapaangaiH astarOgaamstanOShi |
taadR^igbhuuta sphiita kaaruNya bhuumaa
rOgaatpaayaa vaayugehaadhinaatha ||10

ஏவம் ப⁴க்தான்முக்தஜீவானபி த்வம்
முக்³தா⁴பாங்கைரஸ்தரோகா³ம்ஸ்தனோஷி |
தாத்³ருக்³பூ⁴தஸ்பீ²தகாருண்யபூ⁴மா
ரோகா³த்பாயா வாயுகே³ஹாதி⁴னாத² || 54-10

எண்டே குருவாயூரப்பா, உன் பக்தர்கள் மரித்தாலும் , உன் கடைக்கண் பார்வையால் புத்துயிர் தந்து அவர்களை உயிர்ப்பிக்கிறவன். இவ்வளவு கருணை கொண்ட தெய்வத்தை எங்கே காணமுடியும்? என் நோயையும் அவ்வாறே போக்கி ரக்ஷிப்பாய்.