Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 30
30. வாமனன் வந்தானடி .

शक्रेण संयति हतोऽपि बलिर्महात्मा
शुक्रेण जीविततनु: क्रतुवर्धितोष्मा ।
विक्रान्तिमान् भयनिलीनसुरां त्रिलोकीं
चक्रे वशे स तव चक्रमुखादभीत: ॥१॥

shakreNa sanyati hatO(a)pi balirmahaatmaa
shukreNa jiivitatanuH kratuvardhitOShmaa |
vikraantimaan bhayaniliina suraaM trilOkiiM
chakre vashe sa tava chakramukhaadabhiitaH || 1

ஶக்ரேண ஸம்யதி ஹதோ(அ)பி ப³லிர்மஹாத்மா
ஶுக்ரேண ஜீவிததனு꞉ க்ரதுவர்தி⁴தோஷ்மா |
விக்ராந்திமான் ப⁴யனிலீனஸுராம் த்ரிலோகீம்
சக்ரே வஶே ஸ தவ சக்ரமுகா²த³பீ⁴த꞉ || 30-1 ||

அம்ருத கலசத்தை அசுரர்கள் கைப்பற்றியதும் தேவாசுர யுத்தம் நடந்து இந்திரனால் பல அசுரர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லவா.? பலி இந்திரனால் வதம் செய்யப்பட்டான். ஆனால் பலி அசுரர் குரு சுக்ராச்சாரியாரால் மீண்டும் உயிர் பெற்றான். பல யாகங்களை புரிந்தான். தவ வலிமை, யாக பலன் இவை அவனை பலம் கொண்டவனாக மாற்றி, அவன் நாராயணா, உன் சுதர்சன சக்ரத்தைக் கண்டு கூட பயமற்றவனாக போய் விட்டான். மூவுலகையும் வென்ற அசுரன் அவன் இப்போது. மூவுலகிலும் இருக்க முடியாமல் தேவர்கள் அவனிடமிருந்து தப்பி ஓடினார்கள்.

पुत्रार्तिदर्शनवशाददितिर्विषण्णा
तं काश्यपं निजपतिं शरणं प्रपन्ना ।
त्वत्पूजनं तदुदितं हि पयोव्रताख्यं
सा द्वादशाहमचरत्त्वयि भक्तिपूर्णा ॥२॥

putraarti darshana vashaadaditirviShaNNaa
taM kaashyapaM nijapatiM sharaNaM prapannaa |
tvatpuujanaM taduditaM hi payOvrataakhyaM
saa dvaadashaahamacharattvayi bhaktipuurNaa || 2

புத்ரார்தித³ர்ஶனவஶாத³தி³திர்விஷண்ணா
தம் காஶ்யபம் நிஜபதிம் ஶரணம் ப்ரபன்னா |
த்வத்பூஜனம் தது³தி³தம் ஹி பயோவ்ரதாக்²யம்
ஸா த்³வாத³ஶாஹமசரத்த்வயி ப⁴க்திபூர்ணா || 30-2 ||

தேவர்களின் தாய் அதிதி தனது பிள்ளைகள் படும் அவஸ்தையைக் கண்டு கண்ணீர் உகுத்தாள் கணவர் காஷ்யபரிடம் சென்று ''நீங்கள் தான் ஏதாவது செய்யவேண்டும்'' என கெஞ்ச, அவர் அறிவுரையின் படி ப்யோவ்ருதம் மேற்கொண்டாள் . சக்தி வாய்ந்த புத்ர பாக்யம் அது.

तस्यावधौ त्वयि निलीनमतेरमुष्या:
श्यामश्चतुर्भुजवपु: स्वयमाविरासी: ।
नम्रां च तामिह भवत्तनयो भवेयं
गोप्यं मदीक्षणमिति प्रलपन्नयासी: ॥३॥

tasyaavadhau tvayi niliinamateramuShyaaH
shyaamashchaturbhujavapuH svayamaaviraasiiH |
namraaM cha taamiha bhavattanayO bhaveyaM
gOpyaM madiikshaNamiti pralapannayaasiiH || 3

தஸ்யாவதௌ⁴ த்வயி நிலீனமதேரமுஷ்யா꞉
ஶ்யாமஶ்சதுர்பு⁴ஜவபு꞉ ஸ்வயமாவிராஸீ꞉ |
நம்ராம் ச தாமிஹ ப⁴வத்தனயோ ப⁴வேயம்
கோ³ப்யம் மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ꞉ || 30-3 ||

அவள் விரதம் முடிந்தபிறகு நாராயணா, நீ அதிதியின் முன் தோன்றினாய். உன்னைக்கண்டு ஆனந்தித்தாள் . அவள் பக்தியை மெச்சினாய். நீலமேக ஸ்யாம ரூபனாக, சதுர்புஜங்களோடு, சங்கு சக்ர கதாதாரியாக நீ நின்றால் எவர் ஆனந்தப் படாமல் இருப்பார்.? உன் பாதங்களில் விழுந்து தனது பிள்ளைகள் தேவர்கள் படும் கஷ்டத்தை நீக்குமாறு உன்னை வேண்டினாள். ''அம்மா, உன் கவலையை தீர்க்கிறேன். நானே உனக்கு மகனாக பிறக்க போகிறேன். இந்த விஷயத்தை ரஹஸ்யமாக வைத்துக் கொள் '' என்று சொல்லிவிட்டு நீ அங்கிருந்து மறைந்தாய்.


त्वं काश्यपे तपसि सन्निदधत्तदानीं
प्राप्तोऽसि गर्भमदिते: प्रणुतो विधात्रा ।
प्रासूत च प्रकटवैष्णवदिव्यरूपं
सा द्वादशीश्रवणपुण्यदिने भवन्तं ॥४॥

tvaM kaashyape tapasi sannidadhattadaaniiM
praaptO(a)si garbhamaditeH praNutO vidhaatraa |
praasuuta cha prakaTa vaiShNavadivya ruupaM
saa dvaadashii shravaNa puNyadine bhavantam ||4

த்வம் காஶ்யபே தபஸி ஸன்னித³த⁴த்ததா³னீம்
ப்ராப்தோ(அ)ஸி க³ர்ப⁴மதி³தே꞉ ப்ரணுதோ விதா⁴த்ரா |
ப்ராஸூத ச ப்ரகடவைஷ்ணவதி³வ்யரூபம்
ஸா த்³வாத³ஶீஶ்ரவணபுண்யதி³னே ப⁴வந்தம் || 30-4 ||

அதிதி மகனாக, குருவாயூரப்பா, நீ ஸ்ராவண மாசம் துவாதசி அன்று பிறந்தாய். சிறந்த வைஷ்ணவனாக அவதரித்தாய்.

पुण्याश्रमं तमभिवर्षति पुष्पवर्षै-
र्हर्षाकुले सुरगणे कृततूर्यघोषे ।
बध्वाऽञ्जलिं जय जयेति नुत: पितृभ्यां
त्वं तत्क्षणे पटुतमं वटुरूपमाधा: ॥५॥

puNyaashramaM tamabhivarShati puShpavarShairharShaakule
surakule kR^itatuuryaghOShe |
badhvaa(a)~njaliM jaya jayeti nutaH pitR^ibhyaaM
tvaM tatkshaNe paTutamaM vaTuruupamaadhaaH || 5

புண்யாஶ்ரமம் தமபி⁴வர்ஷதி புஷ்பவர்ஷை-
ர்ஹர்ஷாகுலே ஸுரக³ணே க்ருததூர்யகோ⁴ஷே |
ப³த்³த்⁴வாஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத꞉ பித்ருப்⁴யாம்
த்வம் தத்க்ஷணே படுதமம் வடுரூபமாதா⁴꞉ || 30-5 ||

தேவர்கள் கொண்டாடினார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். காஸ்யப மகரிஷி ஆஸ்ரமத்தை பூ மழையால் மூழ்கடித்தார்கள். உன்னை வணங்கினார்கள். வாழ்த்தினார்கள். நீ ஒரு பாலகனாக, அழகிய பிரம்மச்சாரியாக வளர்ந்தாய்.

तावत्प्रजापतिमुखैरुपनीय मौञ्जी-
दण्डाजिनाक्षवलयादिभिरर्च्यमान: ।
देदीप्यमानवपुरीश कृताग्निकार्य-
स्त्वं प्रास्थिथा बलिगृहं प्रकृताश्वमेधम् ॥६॥

taavatprajaapatimukhairupaniiya mau~njiidaN
DaajinaakshavalayaadibhirarchyamaanaH|
dediipyamaanavapuriisha kR^itaagnikaaryastvaM
praasthithaa baligR^ihaM prakR^itaashvamedham || 6

தாவத்ப்ரஜாபதிமுகை²ருபனீய மௌஞ்ஜீ-
த³ண்டா³ஜினாக்ஷவலயாதி³பி⁴ரர்ச்யமான꞉ |
தே³தீ³ப்யமானவபுரீஶ க்ருதாக்³னிகார்ய-
ஸ்த்வம் ப்ராஸ்தி²தா² ப³லிக்³ருஹம் ப்ரக்ருதாஶ்வமேத⁴ம் || 30-6 ||

தக்க பிராயத்தில் இளம் வயதில் உனக்கு உன் தந்தை ரிஷி காஸ்யபர் உபநயனம் பண்ணி வைத்தார். ப்ரம்மோபதேசம் செய்தார். உன்னைப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி யாக இருந்தாய் நாராயணா, மூஞ்சி தர்பை, பலாச குச்சி, மான் தோல், ருத்ராக்ஷம் விபூதிப்பட்டை. ஆஹா உன் பொன்னிற தேகம் என்ன ஒளி வீசுகிறது! . ஹோமம் வளர்த்து அக்னியை வழிபட்டாய். அப்போது மஹாபலி சக்ரவர்த்தி அஸ்வமேத யாகம் செய்து பிராமணர்களுக்கு தானம் வழங்குகிறான் என்று அறிந்தாய். நேராக மஹாபலி அரண்மனையை நோக்கி நடந்தாய்.

गात्रेण भाविमहिमोचितगौरवं प्रा-
ग्व्यावृण्वतेव धरणीं चलयन्नायासी: ।
छत्रं परोष्मतिरणार्थमिवादधानो
दण्डं च दानवजनेष्विव सन्निधातुम् ॥७॥

gaatreNa bhaavimahimOchitagauravaM praagvyaavR^
iNvateva dharaNiiM chalayannayaasiiH |
ChatraM parOShmatiraNaarthamivaadadhaanO
daNDaM cha daanavajaneShviva sannidhaatum || 7

கா³த்ரேண பா⁴விமஹிமோசிதகௌ³ரவம் ப்ரா-
க்³வ்யாவ்ருண்வதேவ த⁴ரணீம் சலயன்னயாஸீ꞉ |
ச²த்ரம் பரோஷ்மதிரணார்த²மிவாத³தா⁴னோ
த³ண்ட³ம் ச தா³னவஜனேஷ்விவ ஸன்னிதா⁴தும் || 30-7 ||

குருவாயூரப்பா, நீ நடந்த அழகைச் சொல்கிறேன் கேள். அழகிய சின்ன ப்ராமண பிரம்மச் சாரி. உன் உருவமே ஏதோ பெரிதாக எதிர்காலத்தில் நடக்கப்போகிறது என்று உள்ளுணர்வை தந்தது. உன் நடையால் பூமியே நடுநடுங்கி அதிர்வது போல் தோன்றியது. ஒரு கையில் தாழங்குடை. அது வெயிலை தடுக்க இல்லை. உன் எதிரிகளின் பலத்தை தடுப்பது போல் ஒரு ஆயுதமாக தோன்றியது. உன் கையில் ஏந்திய பலாச செடி குச்சி. அது தான் அசுரர்களை அழிக்கும் கதாயுதமோ? நீ அழகாக சின்ன சின்ன நடை நடந்து, பலியின் அரண்மனை நோக்கி நடந்தாய்.

मासेदुषि त्वयि रुचा तव रुद्धनेत्रै: ।
भास्वान् किमेष दहनो नु सनत्कुमारो
योगी नु कोऽयमिति शुक्रमुखैश्शशङ्के ॥८॥

taaM narmadOttarataTe hayamedhashaalaamaaseduShi
tvayi ruchaa tava ruddhanetraiH |
bhaasvaan kimeSha dahanO nu sanatkumaarO
yOgii nu kO(a)yamiti shukramukhaiH shashanke || 8

தாம் நர்மதோ³த்தரதடே ஹயமேத⁴ஶாலா-
மாஸேது³ஷி த்வயி ருசா தவ ருத்³த⁴னேத்ரை꞉ |
பா⁴ஸ்வான்கிமேஷ த³ஹனோ நு ஸனத்குமாரோ
யோகீ³ நு கோ(அ)யமிதி ஶுக்ரமுகை²꞉ ஶஶங்கே || 30-8 ||

அரண்மனையை ஒட்டி பெரிய பந்தல் போட்டிருந்தான் மஹாபலி . நர்மதா நதியின் வடகரை எங்கும் பெரிய யாக மண்டபம். உன்னிடமிருந்து வீசிய தெய்வீக ஒளி மகாபலியின் குரு, அசுரர்களின் குருவான சுக்ராச்சார்யாரையே அதிசயிக்க வைத்தது. ஒருவேளை நீ சூர்ய குஞ்சோ? ஸநத்குமாரரோ? யார் இந்த பிரம்மச்சர்ய சக்தி ஸ்வரூபன் என்று வியக்க வைத்தது.

आनीतमाशु भृगुभिर्महसाऽभिभूतै-
स्त्वां रम्यरूपमसुर: पुलकावृताङ्ग: ।
भक्त्या समेत्य सुकृती परिणिज्य पादौ
तत्तोयमन्वधृत मूर्धनि तीर्थतीर्थम् ॥९॥

aaniitamaashu bhR^igubhirmahasaabhibhuutai
stvaaM ramyaruupamasuraH pulakaavR^itaangaH |
bhaktyaa sametya sukR^itii pariNijya paadau
tattOyamanvadhR^ita muurdhani tiirthatiirtham || 9

ஆனீதமாஶு ப்⁴ருகு³பி⁴ர்மஹஸாபி⁴பூ⁴தை-
ஸ்த்வாம் ரம்யரூபமஸுர꞉ புலகாவ்ருதாங்க³꞉
ப⁴க்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிணிஜ்ய பாதௌ³
தத்தோயமன்வத்⁴ருத மூர்த⁴னி தீர்த²தீர்த²ம் || 30-9 ||

எண்ணற்றவர்கள் நிரம்பிய யாக சாலைக்கு வந்துவிட்டாய். உன்னைக் கண்டதுமே உன் ஒளியால் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு சுக்ராச்சாரியார் ஓடிவந்தார். அவரோடு மற்ற ரிஷிகள் பிராமணர்கள். உடல் பூரா மயிர்கூச்செறிய , சுக்ராச்சாரியார் ஓடி வந்தார். உன்னை வணங்கி வரவேற்று, உன் பாதங்களை புண்ய தீர்த்தங்களால் அபிஷேகித்தார். பாதாபிஷேக தீர்த்தத்தைத் ஸ்ரத்தையாக தனது சிரத்தில் ப்ரோக்ஷணம் செய்து கொண்டார்.

प्रह्लादवंशजतया क्रतुभिर्द्विजेषु
विश्वासतो नु तदिदं दितिजोऽपि लेभे ।
यत्ते पदाम्बु गिरिशस्य शिरोभिलाल्यं
स त्वं विभो गुरुपुरालय पालयेथा: ॥१०॥

prahlaadavamshajatayaa kratubhirdvijeShu
vishvaasatO nu tadidaM ditijO(a)pi lebhe |
yatte padaambu girishasya shirO(a)bhilaalyaM
sa tvaM vibhO gurupuraalaya paalayethaaH ||10

ப்ரஹ்லாத³வம்ஶஜதயா க்ரதுபி⁴ர்த்³விஜேஷு
விஶ்வாஸதோ நு ததி³த³ம் தி³திஜோ(அ)பி லேபே⁴ |
யத்தே பதா³ம்பு³ கி³ரிஶஸ்ய ஶிரோபி⁴லால்யம்
ஸ த்வம் விபோ⁴ கு³ருபுராலய பாலயேதா²꞉ || 30-10 |

மஹாபலி அவரோடு அங்கே கூடவே இருந்தான். அவனும் பக்தி ஸ்ரத்தையாக , பிரம்மச்சாரி உன் பாதாபிஷேக தீர்த்தத்தை தனது தலையில் தெளித்துக் கொண்டான். அந்த தீர்த்தத்தை பரமேஸ்வரனே ப்ரோக்ஷணம் செய்வது போல் தோன்றியது. எத்தனை யாகங்கள் செய்தவன்! எத்தனை பிராமணர்களுக்கு தானம் தர்மம் செய்தவன்.!

எண்ட குருவாயூரப்பா எனக்கும் உன் அருள் வேண்டுமப்பா. என் நோய் தீர்த்து என்னையும் ரக்ஷி.