Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 68
68. எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே...

அன்பு பக்தியால் வளர்ந்து அது எல்லையில்லாமல் பெருக்கெடுத்து சித்தம் முழுதும் வியாபித்து கோபிகள் வேறொன்றும் அறியா கிருஷ்ண பித்தர்களாக மாறி வருவதை உணர்நத கண்ணன் அவ்வப்போது அவர்களை இயல்பு நிலைக்கு திரும்ப அறிவுரை கூறுவதாக இந்த தசகம் அமைந்திருக்கிறது. நாராயண பட்டத்ரி தன்னையும் ஒரு கோபியாக பாவித்து அற்புதமாக அவர்களின் மனோநிலையை, அனுபவத்தை உணர்ந்து எழுத்தில் வடிக்கிறார்.

तव विलोकनाद्गोपिकाजना: प्रमदसङ्कुला: पङ्कजेक्षण ।
अमृतधारया संप्लुता इव स्तिमिततां दधुस्त्वत्पुरोगता: ॥१॥

tavavilOkanaadgOpikaajanaaH pramadasankulaaH pankajekshaNa |
amR^itadhaarayaa samplutaa iva stimitataaM dadhustvatpurOgataaH || 1

தவ விலோகனாத்³கோ³பிகாஜனா꞉ ப்ரமத³ஸங்குலா꞉ பங்கஜேக்ஷண |
அம்ருததா⁴ரயா ஸம்ப்லுதா இவ ஸ்திமிததாம் த³து⁴ஸ்த்வத்புரோக³தா꞉ || 68-1 ||

தாமரைக்கண்ணா, தேனைக் குடிப்பது ஒரு சுகம் என்பதை விட தேனிலேயே குளிப்பது எவ்வளவு ஆனந்தமான அனுபவம். இதைத் தான் அந்த வ்ரஜபூமி கோபியர்கள் அனுபவித்தவர்கள். உன்னைக் கண்டதும் அவர்களுக்கு நிலை கொள்ளவில்லை. ஒன்றும் செய்ய இயலாமல் பரவசம் எய்திய நிலையில் , சிலையாக உன் எதிரே நின்றனர்.

तदनु काचन त्वत्कराम्बुजं सपदि गृह्णती निर्विशङ्कितम् ।
घनपयोधरे सन्निधाय सा पुलकसंवृता तस्थुषी चिरम् ॥२॥

tadanu kaachana tvatkaraambujaM sapadi gR^ihNatii nirvishankitam |
ghanapayOdhare sanvidhaaya saa pulakasanvR^itaa tasthuShii chiram || 2

தத³னு காசன த்வத்கராம்பு³ஜம் ஸபதி³ க்³ருஹ்ணதீ நிர்விஶங்கிதம் |
க⁴னபயோத⁴ரே ஸம்விதா⁴ய ஸா புலகஸம்வ்ருதா தஸ்து²ஷீ சிரம் || 68-2 ||

ஒருவள் உனைக் கண்டதும் எங்கிருந்தோ வேகமாக ஓடிவந்து உன்னைக் கட்டிக்கொண்டாள். ''தேடிக்கொண்டிருந்த உன்னை பார்த்ததும் ஆனந்தத்தில் என் மார்பு எப்படி துடிக்கிறது பார் கண்ணா'' என்று உன் கரங்களை எடுத்து நெஞ்சகத்தில் வைத்துக் கொண்டாள்

तव विभोऽपरा कोमलं भुजं निजगलान्तरे पर्यवेष्टयत् ।
गलसमुद्गतं प्राणमारुतं प्रतिनिरुन्धतीवातिहर्षुला ॥३॥

tava vibhO(a)paraa kOmalaM bhujaM nijagalaantare paryaveShTayat |
galasamudgataM praaNamaarutaM prati nirundhatiivaa(a)ti harShulaa || 3

தவ விபோ⁴ புரா கோமலம் பு⁴ஜம் நிஜக³லாந்தரே பர்யவேஷ்டயத் |
க³லஸமுத்³க³தம் ப்ராணமாருதம் ப்ரதினிருந்த⁴தீவாதிஹர்ஷுலா || 68-3 ||

''இங்கே என் நிலையைப் பார், உன்னைக் காணாமல் விக்கி விக்கி அழுது என் தொண்டை எப்படி வறண்டு பேச முடியாமல் ஊமையாகிவிட்டேன் பார். மூச்சே நின்றுவிட்டது பார்'' என்று கிருஷ்ணா உன் கரங்களை எடுத்து தனது கழுத்தைச் சுற்றி இறுக்கி வளைத்து வைத்துக் கொண்டாள் இன்னொருவள்.

अपगतत्रपा कापि कामिनी तव मुखाम्बुजात् पूगचर्वितम् ।
प्रतिगृहय्य तद्वक्त्रपङ्कजे निदधती गता पूर्णकामताम् ॥४॥

apagatatrapaa kaa(a)pi kaaminii tava mukhaambujaatpuugacharvitam |
pratigR^ihayya tadvaktrapankaje nidadhatii gataa puurNakaamataam || 4

அபக³தத்ரபா காபி காமினீ தவ முகா²ம்பு³ஜாத்பூக³சர்விதம் |
ப்ரதிக்³ருஹய்ய தத்³வக்த்ரபங்கஜே நித³த⁴தீ க³தா பூர்ணகாமதாம் || 68-4 ||

இன்னொரு கோபியின் செயல் வேடிக்கையாக இருக்கிறது. உணர்ச்சி வசப்பட்டு, உன் வாயில் நீ மென்றுகொண்டிருந்த தாம்பூலத்தை வெடுக்கென்று பிடுங்கி தனது வாயில் போட்டுக்கொண்டு ஆனந்தமாக ருசித்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் உன்னைக் கண்ட மகிழ்ச்சியில் சூரியனாக ஒளி வீசியது. அவளால் பேசவே முடியவில்லை.

विकरुणो वने संविहाय मामपगतोऽसि का त्वामिह स्पृशेत् ।
इति सरोषया तावदेकया सजललोचनं वीक्षितो भवान् ॥५॥

vikaruNO vane sanvihaaya maam apagatO(a)si kaa tvaamiha spR^ishet |
iti sarOShayaa taavadekayaa sajalalOchanaM viikshitO bhavaan || 5

விகருணோ வனே ஸம்விஹாய மாமபக³தோ(அ)ஸி கா த்வாமிஹ ஸ்ப்ருஶேத் |
இதி ஸரோஷயா தாவதே³கயா ஸஜலலோசனம் வீக்ஷிதோ ப⁴வான் || 68-5 ||

''போடா, நீ எனக்கு வேண்டாம், என்ன நெஞ்சழுத்தம் உனக்கு, எங்களை இந்த இருட்டான காட்டில் விட்டு விட்டு திடீரென்று எவ்வளவு இரக்கமில்லாமல், ஓடினவன் நீ. இனிமேல் நாங்கள் உன்னை தொடுவோம் என்று நினைக்கிறாயா? நீ வேண்டவே வேண்டாம் போ என்று அழுதுகொண்டே தனது கோபத்தை ஏமாற்றத்தை உரக்க கத்தி வெளியிட்டாள் ஒரு கோபி. அவ்வளவு பாசம் அவளுக்கு கண்ணன் மேல். அது கோபமாக வெடித்தது.

इति मुदाऽऽकुलैर्वल्लवीजनै: सममुपागतो यामुने तटे ।
मृदुकुचाम्बरै: कल्पितासने घुसृणभासुरे पर्यशोभथा: ॥६॥

iti mudaa(a)(a)kulairvallavii janaiH samamupaagatO yaamune taTe |
mR^idukuchaambaraiH kalpitaasane ghusR^iNabhaasure paryashObhathaaH || 6

இதி முதா³குலைர்வல்லவீஜனை꞉ ஸமமுபாக³தோ யாமுனே தடே |
ம்ருது³குசாம்ப³ரை꞉ கல்பிதாஸனே கு⁴ஸ்ருணபா⁴ஸுரே பர்யஶோப⁴தா²꞉ || 68-6 ||

''சரி சரி வாருங்கள் எல்லோரும் யமுனைக்கு போவோம்'' என்று நீ அவர்களை அழைத்துக்கொண்டு நதிக்கரைக்கு சென்றாய் கிருஷ்ணா. அவர்களது மேல் வஸ்த்ரங்களை எல்லாம் வாங்கி மடித்து மெத்தையாக்கி அதன் மேல் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டாய். அந்த வஸ்திரங்கள் குங்குமப்பூ கரையோடு வாசனையை எங்கும் பரப்பியது.

कतिविधा कृपा केऽपि सर्वतो धृतदयोदया: केचिदाश्रिते ।
कतिचिदीदृशा मादृशेष्वपीत्यभिहितो भवान् वल्लवीजनै: ॥७॥

katividhaa kR^ipaa ke(a)pi sarvatO dhR^itadayOdayaaH kechidaashrite |
katichidiidR^ishaa maadR^isheShvapiityabhihitO bhavaan vallaviijanaiH || 7

கதிவிதா⁴ க்ருபா கே(அ)பி ஸர்வதோ த்⁴ருதத³யோத³யா꞉ கேசிதா³ஶ்ரிதே |
கதிசிதீ³த்³ருஶா மாத்³ருஶேஷ்வபீத்யபி⁴ஹிதோ ப⁴வான்வல்லவீஜனை꞉ || 68-7 ||

சிலருக்கு உன்னைக் கேள்வி கேட்க தோன்றியது உனக்கு நினைவிருக்கிறதா கிருஷ்ணா? ஒருத்தி கேட்டாளே .
''கிருஷ்ணா, தயை, கருணை, என்பது என்னென்ன வகை?''
''ஏன் இப்படி கேட்கிறாய்?'' என்றாய் நீ .
''சிலர் எல்லோர் மேலும், எல்லாவற்றின் மேலும் காருண்யமாக நடந்துகொள்கிறார்கள்.
சிலர் குறிப்பாக சிலர் மேல் மட்டும், அவர்கள் பக்தியை அன்பை மட்டும் மெச்சி அவர்கள் மேல் அன்பாக, கருணையாக நடந்துகொள்கிறார்கள், உன்னைப்போல''
''சிலர் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் நெஞ்சைப் பஞ்சால் நெஞ்சை துடைத்தது போல் நடந்துகொள்கிறார்களே. உதாரணம் வேண்டுமானால் இதோ எங்களைப் பார் நாங்கள் வீடு வாசல், குடும்பம் என்று சகலத்தையும் விட்டுவிட்டு நீ மட்டுமே வேண்டும், என்று உன்மேல் அன்போடு உன்னைச் சரணடைந்து தேடி ஓடி வருகிறோம், ஆனால் நீ பாரா முகமாக இருக்கிறாயே,
அது என்ன வகை? சொல்'' என்றாள் இன்னொருவள் .

अयि कुमारिका नैव शङ्क्यतां कठिनता मयि प्रेमकातरे ।
मयि तु चेतसो वोऽनुवृत्तये कृतमिदं मयेत्यूचिवान् भवान् ॥८॥

ayi kumaarikaa naiva shankyataaM kaThinataa mayi premakaatare |
mayi tu chetasO vO(a)nuvR^ittaye kR^itamidaM mayetyuuchivaan bhavaan || 8

அயி குமாரிகா நைவ ஶங்க்யதாம் கடி²னதா மயி ப்ரேமகாதரே |
மயி து சேதஸோ வோ(அ)னுவ்ருத்தயே க்ருதமித³ம் மயேத்யூசிவான்ப⁴வான் || 68-8 ||

''குருவாயூரப்பா, உனக்கு சிரிப்பு தான் வந்தது. எல்லோரையும் அழைத்து உன்னைத் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு அப்போது நீ என்ன சொன்னாய் தெரியுமா?

''இதோ பாருங்கள் என் பிரியமுள்ளவர்களே, எனக்கு இரக்கம், கருணை, தயை என்பது சிறிதும் இல்லை என்று நீங்கள் தப்பாக எடைபோடவேண்டாம், சந்தேகமும் கொள்ளவேண்டாம்.
எனக்கு உங்கள் மேல் பிரியம் இல்லை என்பது தப்புக் கணக்கு. இது நான் உங்களை சோதனை செயது பார்த்த ஒரு விளையாட்டு. என் மேல் நீங்கள் எவ்வளவு பாசமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து நான் சந்தோஷப்பட நிகழ்ந்த ஒரு விளையாட்டு. உங்கள் மனம் மேலும் மேலும் என்னையே எண்ணவேண்டும் என்ற விருப்பத்தில் நான் நிகழ்த்திய ஒரு வேடிக்கையான செய்கை'' என்கிறாய்..

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்னும் போது உணர்ச்சிப் பெருக்கால் பேச்சு வராது என்று தானே பொருள்.

अयि निशम्यतां जीववल्लभा: प्रियतमो जनो नेदृशो मम ।
तदिह रम्यतां रम्ययामिनीष्वनुपरोधमित्यालपो विभो ॥९॥

ayi nishamyataaM jiivavallabhaaH priyatamO janO nedR^ishO mama |
tadiha ramyataanramya yaaminiiShvanuparOdha mityaalapO vibhO || 9

அயி நிஶம்யதாம் ஜீவவல்லபா⁴꞉ ப்ரியதமோ ஜனோ நேத்³ருஶோ மம |
ததி³ஹ ரம்யதாம் ரம்யயாமினீஷ்வனுபரோத⁴மித்யாலபோ விபோ⁴ || 68-9 ||

''ஒருவர் விடாமல், நீங்கள் அத்தனைபேரும் என் மனதில் குடிகொண்டவர்கள். உங்களுக்கு நான் இன்னும் என்ன சொல்லப்போகிறேன் தெரியுமா? இதுவரை உங்களைப்போல் வேறெவரும் என் மேல் இவ்வளவு பிரியம் கொண்டதாக எனக்கு நினைவில்லை. எழுந்திருங்கள் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆனந்தமான இரவுகளில் நிலவொளியில் நாம் ஆடிப்பாடி மகிழ்வோம். மனதில் பரிபூர்ண அன்பு ஒன்றே பிரதானமாக இந்த விகல்பமும் இன்றி யமுனைநதிக்கரையில் ஓடிப்பிடித்து விளையாடுவோம்'' என்று சொல்லி அவர்கள் உன்னை துரத்த நீ வேகமாக எழுந்து ஓடினாயே.

इति गिराधिकं मोदमेदुरैर्व्रजवधूजनै: साकमारमन् ।
कलितकौतुको रासखेलने गुरुपुरीपते पाहि मां गदात् ॥१०॥

iti giraa(a)dhikaM mOdamedurairvrajavadhuujanaiH saakamaaraman |
kalita kautukO raasa khelane gurupuriipate paahi maaM gadaat ||10

இதி கி³ராதி⁴கம் மோத³மேது³ரைர்வ்ரஜவதூ⁴ஜனை꞉ ஸாகமாரமன் |
கலிதகௌதுகோ ராஸகே²லனே கு³ருபுரீபதே பாஹி மாம் க³தா³த் || 68-10 ||

''குருவாயூரா , உன் வார்த்தைகளுக்கு தான் என்ன மந்திர சக்தி. அந்த கோபியர்கள் அனைவரும் ஆனந்தமாக நீ சொல்வதைக் கேட்டு மகிழ்ந்தார்கள். கோகுல கோபியரின் கிருஷ்ணானந்த அனுபவத்துக்கு ஈடு இணை இந்த பிரபஞ்சத்திலேயே வேறெதுவும் இல்லை. அவர்களது ராஸ க்ரீடையை நினைத்துப் பார்த்தாலே நமது மனத்திலும் என்ன ஆனந்தம் உண்டாகிறது நினைத்தாலே இனிக்கும் என்கிற வார்த்தையை ருசிக்க முடிகிறது. எண்டே குருவாயூரப்பா, என் நோய் தீர்த்து நானும் ஆனந்தமாக உன்னை நினைத்து பாட எனக்கு அருள் புரிவாய்.