Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 81
81. கண்ணனை கைப்பிடித்த எண்ணற்றோர்

வரிசையாக ஸ்ரீ கிருஷ்ணன் கல்யாணங்களைப் பற்றி கடந்த சில தசகங்களில் அறிந்தோம், ருக்மிணி, ஜாம்பவதி , சத்யபாமா ஆகியோர் திருமணங்களின் பின்னூட்ட சரித்திரங்களை அறிந்தோம், இந்த தசகத்தில் காளிந்தியுடன் நடந்த கல்யாணம். அப்புறம் கிருஷ்ணன் கல்யாணம் போதாதென்று கிருஷ்ணனின் சகோதரி சுபத்ரவுடன் அர்ஜுனன் கல்யாணம்..தீபாவளி நெருங்கு வதால் நரகாசுரவதமும் நெருங்குகிறது. மற்ற மனைவிகளோடு மற்ற 16000 சிறை மீண்ட கன்னிகைகளின் விருப்பம் பற்றி இந்த தசகத்தில் விஷயம் தருகிறார் நாராயண பட்டத்ரி..

स्निग्धां मुग्धां सततमपि तां लालयन् सत्यभामां
यातो भूय: सह खलु तया याज्ञसेनीविवाहम् ।
पार्थप्रीत्यै पुनरपि मनागास्थितो हस्तिपुर्यां
सशक्रप्रस्थं पुरमपि विभो संविधायागतोऽभू: ॥१॥

snigdhaaM mugdhaamsatatamapi taaM laalayan satyabhaamaaM
yaatO bhuuyaH saha khalu tayaa yaaj~nasenii vivaaham |
paartha priityai punarapi manaagaasthitO hasti puryaaM
shakraprasthaM puramapi vibhO sanvidhaayaagatO(a)bhuuH || 1

ஸ்னிக்³தா⁴ம் முக்³தா⁴ம் ஸததமபி தாம் லாலயன் ஸத்யபா⁴மாம்
யாதோ பூ⁴ய꞉ ஸஹ க²லு தயா யாஜ்ஞஸேனீவிவாஹம் |
பார்த²ப்ரீத்யை புனரபி மனாகா³ஸ்தி²தோ ஹஸ்திபுர்யாம்
ஶக்ரப்ரஸ்த²ம் புரமபி விபோ⁴ ஸம்விதா⁴யாக³தோ(அ)பூ⁴꞉ || 81-1 ||

கிருஷ்ணா, நீ சத்யபாமா வுடன் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணந்த விழாவுக்கு சென்றிருந் தாயே நினைவிருக்கிறதா?. உன் அத்தை பாண்டவர்களின் தாய், உன்னை சில காலம் அவளோடு ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருக்க வேண்டினாள். பிறகு தான் நீ துவாரகைக்கு திரும்பினாய். பாண்டவர்களுக்கு என்று தனி அரண்மனையை இந்த்ரப்ரஸ்தத்தில் தேவலோக சிற்பி மயனை விட்டு அமைத்த பிறகு தானே நீ துவாரகை திரும்பினாய் .

भद्रां भद्रां भवदवरजां कौरवेणार्थ्यमानां
त्वद्वाचा तामहृत कुहनामस्करी शक्रसूनु: ।
तत्र क्रुद्धं बलमनुनयन् प्रत्यगास्तेन सार्धं
शक्रप्रस्थं प्रियसखमुदे सत्यभामासहाय: ॥२॥

bhadraaM bhadraaM bhavadavarajaaM kauraveNaarthyamaanaaM
tvadvaachaa taamahR^ita kuhanaamaskarii shakrasuunuH |
tatra kruddhaM balamanunayan pratyagaastena saardhaM
shakraprasthaM priyasakha mude satyabhaamaa sahaayaH || 2

ப⁴த்³ராம் ப⁴த்³ராம் ப⁴வத³வரஜாம் கௌரவேணார்த்²யமானாம்
த்வத்³வாசா தாமஹ்ருத குஹனாமஸ்கரீ ஶக்ரஸூனு꞉ |
தத்ர க்ருத்³த⁴ம் ப³லமனுனயன் ப்ரத்யகா³ஸ்தேன ஸார்த⁴ம்
ஶக்ரப்ரஸ்த²ம் ப்ரியஸக²முதே³ ஸத்யபா⁴மாஸஹாய꞉ || 81-2 ||

கிருஷ்ணா, அதற்குப்பிறகு தான் உன் நண்பன் அர்ஜுனனின் சந்நியாசி நாடகம் நிகழ்ந்தது. காரண கர்த்தா நீ தானே. உன்னைப்போலவே உன் நண்பனும். உன் அழகிய சகோதரி சுபத்திராவை கடத்திச் சென்றான். உன் சகோதரன் பலராமனுக்கு அவளை துரியோதனனுக்கு மணம் முடிக்க விருப்பம் என்பது உனக்கு தெரிந்தான் இந்த நாடகம் நிகழ்த்தினாய். கோபம் கொண்ட பலராமனை சமாதானப்படுத்தி விட்டு பலராமன், சத்யபாமாவோடு இந்த்ரப்ரஸ்தத்தில் சில காலம் தங்கினாய்.

तत्र क्रीडन्नपि च यमुनाकूलदृष्टां गृहीत्वा
तां कालिन्दीं नगरमगम: खाण्डवप्रीणिताग्नि: ।
भ्रातृत्रस्तां प्रणयविवशां देव पैतृष्वसेयीं
राज्ञां मध्ये सपदि जहृषे मित्रविन्दामवन्तीम् ॥३॥

tatra kriiDannapi cha yamunaakuula dR^iShTaaM gR^ihiitvaa
taaM kaalindiiM nagaramagamaH khaaNDavapriiNitaagniH |
bhraatR^itrastaaM praNayavivashaaM deva paitR^iShvaseyiiM
raaj~naaM madhye sapadi jahR^iShe mitravindaamavantiim || 3

தத்ர க்ரீட³ன்னபி ச யமுனாகூலத்³ருஷ்டாம் க்³ருஹீத்வா
தாம் காலிந்தீ³ம் நக³ரமக³ம꞉ கா²ண்ட³வப்ரீணிதாக்³னி꞉ |
ப்⁴ராத்ருத்ரஸ்தாம் ப்ரணயவிவஶாம் தே³வ பைத்ருஷ்வஸேயீம்
ராஜ்ஞாம் மத்⁴யே ஸபதி³ ஜஹ்ருஷே மித்ரவிந்தா³மவந்தீம் || 81-3

இந்த்ரப்ரஸ்தத்தில் விருந்தாளியாக வந்தவன் ஒருநாள் வேட்டையாட சென்றாய். யமுனைக்கரையில் காடுகளில் காளிந்தியை சந்தித்து மனைவியாக ஏற்றுக் கொண்டாய். எவ்வளவு சுலபமாக உனக்கு ஒவ்வொரு கல்யாணமும் நிகழ்கிறது. அதற்குப்பிறகு காண்டவவனம் தீப்பற்றி எரிந்தது. அக்னிக்கு பசி ஆறியது. அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்தது.அப்புறம் தான் துவாரகை திரும்பினாய். துவாரகையில் ஒரு ராஜாக்கள் கூடிய சபையில் உன் தந்தை வசுதேவரின் சகோதரி மகள் மித்ரவிந்தாவை சந்தித்தாய். அவளுக்கும் உன்மேல் கொள்ளை கொள்ளையாக ஆசை. வெளியே சொல்ல பயம். அவள் சகோதரர்கள் அப்படிப்பட்டவர்கள். நீ அவளைக் காப்பாற்றினாய், கைப்பற்றினாய்.

सत्यां गत्वा पुनरुदवहो नग्नजिन्नन्दनां तां
बध्वा सप्तापि च वृषवरान् सप्तमूर्तिर्निमेषात् ।
भद्रां नाम प्रददुरथ ते देव सन्तर्दनाद्या-
स्तत्सोदर्या वरद भवत: साऽपि पैतृष्वसेयी ॥४॥

satyaaM gatvaa punarudavahO nagnajinnandanaaM taaM
baddhvaa saptaapi cha vR^iShavaraan saptamuurtirnimeShaat
bhadraaM naama pradaduratha te deva santardanaadyaaH
tatsOdaryaaM varada bhavataH saa(a)pi paitR^iShvaseyii4

ஸத்யாம் க³த்வா புனருத³வஹோ நக்³னஜின்னந்த³னாம் தாம்
ப³த்⁴வா ஸப்தாபி ச வ்ருஷவரான்ஸப்தமூர்திர்னிமேஷாத் |
ப⁴த்³ராம் நாம ப்ரத³து³ரத² தே தே³வ ஸந்தர்த³னாத்³யா-
ஸ்தத்ஸோத³ர்யாம் வரத³ ப⁴வத꞉ ஸாபி பைத்ருஷ்வஸேயீ || 81-4 ||

உன் பிரதாபம் மேலும் தொடரட்டுமா கிருஷ்ணா? அப்புறம் நீ கோசலா நகரம் சென்றபோது அங்கே என்ன நடந்தது? ஏழு பலம் கொண்ட காளைகளை அடக்கினாய். அந்த ஏழு காளைகளுக்கும் நீ ஏழு கிருஷ்ணர்களாக உருவெடுத்து உன்னை பிரித்துக் கொண்டு தனித்தனியாக அவற்றை ஒரே சமயம் வென்றாய். ராஜா நக்நஞ்சினந்தன் தனது மகள் சத்யாவை உனக்கு மணமுடித்தான். கிருஷ்ண மாப்பிள்ளையை யாராவது வேண்டாம் என்பார்களா? இதை தொடர்ந்து மற்றொரு கல்யாணம். பத்ரா என்பவளின் சகோதரர்கள் அவளை உனக்கு பரிசளித்தார்கள் . அவளும் உனது அத்தை ஸ்ருதகீர்த்தி மகள் தான்.

पार्थाद्यैरप्यकृतलवनं तोयमात्राभिलक्ष्यं
लक्षं छित्वा शफरमवृथा लक्ष्मणां मद्रकन्याम् ।
अष्टावेवं तव समभवन् वल्लभास्तत्र मध्ये
शुश्रोथ त्वं सुरपतिगिरा भौमदुश्चेष्टितानि ॥५॥

paarthaadyairapyakR^italavanaM tOyamaatraabhi lakshyaM
lakshaM Chitvaa shapharamavR^ithaa lakshmaNaaM madrakanyaaM |
aShTaavevam tava samabhavan vallabhaastatra madhye
shushrOthatvaM surapati giraa bhaumadushcheShTitaani || 5

பார்தா²த்³யைரப்யக்ருதலவனம் தோயமாத்ராபி⁴லக்ஷ்யம்
லக்ஷம் சி²த்வா ஶப²ரமவ்ருதா² லக்ஷ்மணாம் மத்³ரகன்யாம் |
அஷ்டாவேவம் தவ ஸமப⁴வன் வல்லபா⁴ஸ்தத்ர மத்⁴யே
ஶுஶ்ரோத² த்வம் ஸுரபதிகி³ரா பௌ⁴மது³ஶ்சேஷ்டிதானி || 81-5 ||

அடேயப்பா, இது என்ன கல்யாண ஸீஸனா ? உன் நண்பன் அர்ஜூனனால் கூட நிகழ்த்த முடியாத ஒரு அற்புதமான போட்டியில், ஜலத்தில் மேலே சுழலும் மத்ஸ்யத்தின் உருவத்தை கணித்து, அம்பை செலுத்தி அதை வீழ்த்தி, மத்ர தேச ராஜாவின் மகள் லக்ஷ்மணாவை மணந்து கொண்டாய்.
அடேயப்பா, உனக்கு எட்டு பட்டமகிஷிகள். கிட்டுவுக்கு எட்டு மனைவிகள் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.

இதற்கிடையில் உனக்கு தேவேந்திரனிடமிருந்து உனக்கு அவசரமாக ஒரு வேண்டுகோள். பூமாதேவியின் புத்ரன் பௌமாசுரனின் அட்டகாசம் ரகளை, அதிகமாகி எல்லோரையும் துன்புறுத்துகிறான் என்பதால் நீ அவனை அடக்கவோ அழிக்கவோ தேவைப்பட்டாய்.

स्मृतायातं पक्षिप्रवरमधिरूढस्त्वमगमो
वहन्नङ्के भामामुपवनमिवारातिभवनम् ।
विभिन्दन् दुर्गाणि त्रुटितपृतनाशोणितरसै:
पुरं तावत् प्राग्ज्योतिषमकुरुथा: शोणितपुरम् ॥६॥

smR^itaayaataM pakshipravaramadhiruuDhastvamagamO
vahannanke bhaamaamupavanamivaaraati bhavanam |
vibhindan durgaaNi truTita pR^itanaa shONitarasaiH
puraM taavat praagjyOtiShamakuruthaashshONita puram || 6

ஸ்ம்ருதாயாதம் பக்ஷிப்ரவரமதி⁴ரூட⁴ஸ்த்வமக³மோ
வஹன்னங்கே பா⁴மாமுபவனமிவாராதிப⁴வனம் |
விபி⁴ந்த³ன் து³ர்கா³ணி த்ருடிதப்ருதனாஶோனிதரஸை꞉
புரம் தாவத்ப்ராக்³ஜ்யோதிஷமகுருதா²꞉ ஶோணிதபுரம் || 81-6 ||

கருடனை மனதால் நினைத்த மாத்திரம் அவன் வந்து சேர்ந்தான். சத்யபாமா உன்னோடு கருடன் மேல் அமர்ந்துகொள்ள பௌமாசுரனை நோக்கி சென்றாய். ஏதோ ரெண்டு பேரும், நந்தவனத் துக்கு செல்வது போல் அல்லவா சென்றீர்கள்? பௌமாசுரனின் கோட்டை கொத்தளங்களை தவிடுபொடி யாக்கினாய். அவன் தலைநகரம் ப்ரக்ஜோதிஷபுரம் ரத்த புரமாயிற்று .

मुरस्त्वां पञ्चास्यो जलधिवनमध्यादुदपतत्
स चक्रे चक्रेण प्रदलितशिरा मङ्क्षु भवता ।
चतुर्दन्तैर्दन्तावलपतिभिरिन्धानसमरं
रथाङ्गेन छित्वा नरकमकरोस्तीर्णनरकम् ॥७॥

murastvaaM pa~nchaasyO jaladhivanamadhyaadudapatat
sa chakre chakreNa pradalitashiraa mankshu bhavataa |
chaturdantairdantaavala patibhirindhaana samara
rathaangena Chitvaa narakamakarOstiirNanarakam || 7

முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி⁴வனமத்⁴யாது³த³பதத்
ஸ சக்ரே சக்ரேண ப்ரத³லிதஶிரா மங்க்ஷு ப⁴வதா |
சதுர்த³ந்தைர்த³ந்தாவலபதிபி⁴ரிந்தா⁴னஸமரம்
ரதா²ங்கே³ன சி²த்வா நரகமகரோஸ்தீர்ணனரகம் || 81-7 ||

அவனைச் சேர்ந்த முரன் எனும் அசுரன் உனக்கு முராரி என்ற பெயர் கிடைப்பதற்காகவே, பிறந்து உன் கையால் மாண்டான் போல் இருக்கிறது. நடுக்கடலில் வசிப்பவன் முரன். அவன் சிரத்தை உன் சுதர்சனம் துண்டித்தது. முரனைத் தொடர்ந்து அசுராதிபன் பௌமாசுரன் எனும் நரகாசுரன் நேரில் வந்து விட்டான்.தனியாக இல்லை, அறுபத்தைந்து நான்கு தந்தங்கள் கொண்ட யானைப்படை யோடு, உன் ஒருவனைக் கொல்ல ! நரகனும் யுத்தத்தில் மாண்டான். வைகுண்டம் மீண்டான்.

स्तुतो भूम्या राज्यं सपदि भगदत्तेऽस्य तनये
गजञ्चैकं दत्वा प्रजिघयिथ नागान्निजपुरीम् ।
खलेनाबद्धानां स्वगतमनसां षोडश पुन:
सहस्राणि स्त्रीणामपि च धनराशिं च विपुलं ॥८॥

stutO bhuumyaa raajyaM sapadi bhagadatte(a)sya tanaye
gajaM chaikaM dattvaa prajighayitha naagaannijapuram |
khalenaabaddhaanaaM svagatamanasaaM ShODasha punaH
sahasraaNi striiNaamapi cha dhanaraashiM cha vipulam || 8

ஸ்துதோ பூ⁴ம்யா ராஜ்யம் ஸபதி³ ப⁴க³த³த்தே(அ)ஸ்ய தனயே
க³ஜஞ்சைகம் த³த்த்வா ப்ரஜிக⁴யித² நாகா³ன்னிஜபுரீம் |
க²லேனாப³த்³தா⁴னாம் ஸ்வக³தமனஸாம் ஷோட³ஶ புன꞉
ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாமபி ச த⁴னராஶிம் ச விபுலம் || 81-8 ||

பூமாதேவி வந்து உன்னை வணங்கினாள். அவள் துயரம் போக்கியவன் அல்லவா நீ. நரகாசுரன் மகன் பகதத்தனை அரசனாக்கினாய். அந்த யானைகளில் ஒன்றை அவனுக்கு பரிசாக அளித்தாய். மற்ற யானைகள் துவாரகை நோக்கி நகர்ந்தன. இதன் காரணமாக நரகாசுரன் சிறைப் பிடித்தி ருந்த பதினாறாயிரம் பெண்களை உயிர்தப்பி விடுதலை பெற வைத்தாய்.

भौमापाहृतकुण्डलं तददितेर्दातुं प्रयातो दिवं
शक्राद्यैर्महित: समं दयितया द्युस्त्रीषु दत्तह्रिया ।
हृत्वा कल्पतरुं रुषाभिपतितं जित्वेन्द्रमभ्यागम-
स्तत्तु श्रीमददोष ईदृश इति व्याख्यातुमेवाकृथा: ॥९॥

bhaumaapaahR^ita kuNDalaM tadaditerdaatuM prayaatO divaM
shakraadyairmahitaHsamandayitayaa dyustriiShu dattahriyaa |
hR^ittvaa kalpataruM ruShaa(a)bhipatitaM jitvendramabhyaagamaH
tattu shriimadadOSha iidR^isha iti vyaakhyaatumevaakR^ithaaH || 9

பௌ⁴மாபாஹ்ருதகுண்ட³லம் தத³தி³தேர்தா³தும் ப்ரயாதோ தி³வம்
ஶக்ராத்³யைர்மஹித꞉ ஸமம் த³யிதயா த்³யுஸ்த்ரீஷு த³த்தஹ்ரியா |
ஹ்ருத்வா கல்பதரும் ருஷாபி⁴பதிதம் ஜித்வேந்த்³ரமப்⁴யாக³ம-
ஸ்தத்து ஶ்ரீமத³தோ³ஷ ஈத்³ருஶ இதி வ்யாக்²யாதுமேவாக்ருதா²꞉ || 81-9 ||

சத்யபாமாவுடன் தேவலோகம் சென்ற கிருஷ்ணா, நீ அதிதியிடமிருந்து நரகாசுரன் களவாடிய, கொள்ளையடித்த செவி குண்டலங்களை அவளிடமே திருப்பி அளித்தாய். தேவேந்திரன் உங்களை வரவேற்று உபசரித்தான். தேவலோகத்தில் இந்திரன் தோட்டத்திலிருந்து பாரிஜாத செடியை சத்யபாமா விரும்ப அதை நீ எடுத்துக் கொண்டதும் இந்திரன் கோபமடைந்தான். உன்னை எதிர்த்தான் மோதினான் தோற்றான். வெற்றிவீரனாக நீ துவாரகை திரும்பினாய். உன் சக்தியை விண்ணும் மண்ணும் உணர்ந்தது.

कल्पद्रुं सत्यभामाभवनभुवि सृजन् द्व्यष्टसाहस्रयोषा:
स्वीकृत्य प्रत्यगारं विहितबहुवपुर्लालयन् केलिभेदै: ।
आश्चर्यान्नारदालोकितविविधगतिस्तत्र तत्रापि गेहे
भूय: सर्वासु कुर्वन् दश दश तनयान् पाहि वातालयेश ॥१०॥

kalpadruM satyabhaamaa bhavana bhuvi sR^ijan dvyaShTasaahasra yOShaaH
sviikR^itya pratyagaaraM vihita bahuvapuH laalayan keli bhedaiH |
aashcharyaannaaradaalOkita vividhagatistatra tatraapi gehe
bhuuyaH sarvaasu kurvan dasha dasha tanayaan paahi vaataalayesha ||

கல்பத்³ரும் ஸத்யபா⁴மாப⁴வனபு⁴வி ஸ்ருஜந்த்³வ்யஷ்டஸாஹஸ்ரயோஷா꞉
ஸ்வீக்ருத்ய ப்ரத்யகா³ரம் விஹிதப³ஹுவபுர்லாலயன்கேலிபே⁴தை³꞉ |
ஆஶ்சர்யான்னாரதா³லோகிதவிவித⁴க³திஸ்தத்ர தத்ராபி கே³ஹே
பூ⁴ய꞉ ஸர்வாஸு குர்வன் த³ஶ த³ஶ தனயான் பாஹி வாதாலயேஶ || 81-10 ||

சத்யபாமாவின் அரண்மனை தோட்டத்தில் பாரிஜாத மரம் வளர்ந்தது. நீ சிறை மீட்ட பதினா றாயிரம் பெண்களும் உன்னையே கணவனாக வேண்டினார்கள் என்பதால் அவர்களையும் மணந்தாய். யோகரூபன் நீ மாயாஜாலன் அல்லவா. அவர்களுக்காக பதினாறாயிரம் உருவமெடுத்து அவர்களை மகிழ்விப்பது உனக்கு கடினமான காரியம் இல்லையே. உன் அன்பும் பாசமும் நேசமும் உன்னை மணந்தோர்க்கு மட்டுமல்ல நினைந்தோர்க்கும் என்றும் எப்போதும் உண்டே. இந்த அபூர்வ தன்மையைக் கண்டு மகிழ்ந்து உன்னை தரிசிக்க வந்தார் நாரதர்.

எல்லோரையும் மகிழ்விக்கும் எண்டே குருவாயூரப்பா, என்னையும் நோய் தீர்த்து வாழ அருள்புரிவாய்.