Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 7
7 பிரம்மனுக்கு அருள் ஞானம்

एवं देव चतुर्दशात्मकजगद्रूपेण जात: पुन-स्तस्योर्ध्वं खलु सत्यलोकनिलये जातोऽसि धाता स्वयम् ।
यं शंसन्ति हिरण्यगर्भमखिलत्रैलोक्यजीवात्मकं योऽभूत् स्फीतरजोविकारविकसन्नानासिसृक्षारस: ॥१॥

ēvaṁ dēva caturdaśātmakajagadrūpēṇa jātaḥ puna-stasyōrdhvaṁ khalu satyalōkanilayē jātō:’si dhātā svayam |
yaṁ śaṁsanti hiraṇyagarbhamakhilatrailōkyajīvātmakaṁyō:’bhūt sphītarajōvikāravikasannānāsisr̥kṣārasaḥ || 7-1 ||

ஏவம் தே³வ சதுர்த³ஶாத்மகஜக³த்³ரூபேண ஜாத꞉ புன-ஸ்தஸ்யோர்த்⁴வம் க²லு ஸத்யலோகனிலயே ஜாதோ(அ)ஸி தா⁴தா ஸ்வயம் |
யம் ஶம்ஸந்தி ஹிரண்யக³ர்ப⁴மகி²லத்ரைலோக்யஜீவாத்மகம் யோ(அ)பூ⁴த் ஸ்பீ²தரஜோ விகாரவிகஸன் னானா ஸிஸ்ருக்ஷாரஸ꞉ || 7-1 ||

நாராயண பட்டத்ரி குருவாயூரப்பன் எதிரே அமர்ந்து பாடுகிறார். என்னப்பனே, பிரளயம் முடிந்தபின்னே மீண்டும் ஜீவ ஸ்ரிஷ்டிக்காக நீயே மேலேழு , கீழேழு லோகங்களாக உருவெடுத்தாய். எல்லாம் உன் மாயை. லோகங்களிலேயே உயர்ந்ததும் சிறந்ததுமான சத்யலோகத்தில் பிரஜாபதி, ப்ரம்மாவாக சிருஷ்டியை மேற்கொண்டாய். பொன்னிற அண்டமாக ஹிரண்யகர்பனாக மூவுலகின் சர்வ ஜீவன்களுக்கும் நீயே உற்பத்தி ஸ்தானமானவன். தீவிரமாக செயலில் ஈடுபடும் ரஜோகுண சம்பந்தனாக ஹிரண்யகர்பனாக சங்கல்பித்து சிருஷ்டி துவங்கினாய் .

सोऽयं विश्वविसर्गदत्तहृदय: सम्पश्यमान: स्वयं
बोधं खल्वनवाप्य विश्वविषयं चिन्ताकुलस्तस्थिवान् ।
तावत्त्वं जगतां पते तप तपेत्येवं हि वैहायसीं
वाणीमेनमशिश्रव: श्रुतिसुखां कुर्वंस्तप:प्रेरणाम् ॥२॥

sō:’yaṁ viśvavisargadattahr̥dayaḥ sampaśyamānaḥ svayaṁ
bōdhaṁ khalvanavāpya viśvaviṣayaṁ cintākulastasthivān |
tāvattvaṁ jagatāmpatē tapa tapētyēvaṁ hi vaihāyasīṁ
vāṇīmēnamaśiśravaḥ śrutisukhāṁ kurvaṁstapaḥprēraṇām || 7-2 ||

ஸோ(அ)யம் விஶ்வவிஸர்க³த³த்தஹ்ருத³ய꞉ ஸம்பஶ்யமான꞉ ஸ்வயம்
போ³த⁴ம் க²ல்வனவாப்ய விஶ்வவிஷயம் சிந்தாகுலஸ்தஸ்தி²வான் |
தாவத்த்வம் ஜக³தாம்பதே தப தபேத்யேவம் ஹி வைஹாயஸீம்
வாணீமேனமஶிஶ்ரவ꞉ ஶ்ருதிஸுகா²ம் குர்வம்ஸ்தப꞉ப்ரேரணாம் || 7-2 ||

பிரபஞ்ச நாயகா, குருவாயூரப்பா, சிருஷ்டியைத் துவங்கு என்று பிரம்மனுக்கு கட்டளையிட்டாயிற்று. அவன் சிருஷ்டிக்க ஆரம்பிக்கிறான். அது சரி ஸ்ரிஷ்டிக்கான பயிற்சி வழிமுறை உபதேசம் இருந்தால் தானே சிறப்பாக சிருஷ்டிக்க முடியும்? அவனால் இயலவில்லை என்று நீ அறிவாய். அவனை ஊக்குவிக்க, அவன் காதுகளில் கேட்கும்படியாக ''தப தப '' என்ற சொல் அவன் செவிகளில் பாய்ந்து அவனை முதலில் தவம் செய்ய வைத்தது. உன்னையன்றி வேறு யாரை வேண்டி அவன் தவமிருப்பான்?


कोऽसौ मामवदत् पुमानिति जलापूर्णे जगन्मण्डले
दिक्षूद्वीक्ष्य किमप्यनीक्षितवता वाक्यार्थमुत्पश्यता ।
दिव्यं वर्षसहस्रमात्ततपसा तेन त्वमाराधित -
स्तस्मै दर्शितवानसि स्वनिलयं वैकुण्ठमेकाद्भुतम् ॥३॥

kō:’sau māmavadatpumāniti jalāpūrṇē jaganmaṇḍalē
dikṣūdvīkṣya kimapyanīkṣitavatā vākyārthamutpaśyatā |
divyaṁ varṣasahasramāttatapasā tēna tvamārādhita-
stasmai darśitavānasi svanilayaṁ vaikuṇṭhamēkādbhutam || 7-3 ||

கோ(அ)ஸௌ மாமவத³த்புமானிதி ஜலாபூர்ணே ஜக³ன்மண்ட³லே
தி³க்ஷூத்³வீக்ஷ்ய கிமப்யனீக்ஷிதவதா வாக்யார்த²முத்பஶ்யதா |
தி³வ்யம் வர்ஷஸஹஸ்ரமாத்ததபஸா தேன த்வமாராதி⁴த-
ஸ்தஸ்மை த³ர்ஶிதவானஸி ஸ்வனிலயம் வைகுண்ட²மேகாத்³பு⁴தம் || 7-3 ||

''முதலில் பிரம்மதேவன் ஆச்சரியப்பட்டான். எப்படி என் மனதில் தோன்றிய சம்சயம் வெளியுலகில் எவருக்கோ தெரிந்துள்ளது. யார் அவர், இப்படி எனக்கு தவமிருக்க வழிகாட்டியது. பிரமன் நான்முகன் அல்லவா? நாலாபக்கமும் பார்க்கமுடியுமே . பார்த்தான். எங்கும் ஜலசமுத்ரம். எவரும் கண்ணில் படவில்லை. ஓஹோ என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் பரமாத்மாவின் குரல் அல்லவா இது என மகிழ்ந்து ஆயிரம் வருஷங்கள் உன்னை வணங்கி தவமிருந்தவன். உன்னால் அவ்வாறு வைகுந்தத்தை அடைந்தவன் பிரம்மன் என்று நான் புரிந்து கொண்டேன் குருவாயூரப்பா.

माया यत्र कदापि नो विकुरुते भाते जगद्भ्यो बहि:
शोकक्रोधविमोहसाध्वसमुखा भावास्तु दूरं गता: ।
सान्द्रानन्दझरी च यत्र परमज्योति:प्रकाशात्मके
तत्ते धाम विभावितं विजयते वैकुण्ठरूपं विभो ॥४॥

māyā yatra kadāpi nō vikurutē bhātē jagadbhyō bahi-
śśōkakrōdhavimōhasādhvasamukhā bhāvāstu dūraṁ gatāḥ |
sāndrānandajharī ca yatra paramajyōtiḥprakāśātmakē
tattē dhāma vibhāvitaṁ vijayatē vaikuṇṭharūpaṁ vibhō || 7-4 ||

மாயா யத்ர கதா³பி நோ விகுருதே பா⁴தே ஜக³த்³ப்⁴யோ ப³ஹி-
ஶ்ஶோகக்ரோத⁴விமோஹஸாத்⁴வஸமுகா² பா⁴வாஸ்து தூ³ரம் க³தா꞉ |
ஸாந்த்³ரானந்த³ஜ²ரீ ச யத்ர பரமஜ்யோதி꞉ப்ரகாஶாத்மகே
தத்தே தா⁴ம விபா⁴விதம் விஜயதே வைகுண்ட²ரூபம் விபோ⁴ || 7-4 ||

எங்கும் நிறைந்த பரமாத்மா, மாயையால் நெருங்கமுடியாத மாதவா, பதினாலு லோகங்களிலும் வியாபித்து மனதை ஆட்கொள்ளும் மாயை அல்லவோ மனதில் துக்கம், கோபம், பயம், கலக்கம்,எல்லாவற்றுக்கும் காரணம் என்றாலும் அதால் நெருங்கமுடியாதவனே. வைகுண்டவாஸா, பேரானந்தம் அருளும் பிரபு, காருண்ய ஒளி வீசும் கருணாகரா , வைகுண்ட ஞான ஒளியை பிரமனுக்கு அளித்த பரமா. உனக்கு கோடி நமஸ்காரம்.


यस्मिन्नाम चतुर्भुजा हरिमणिश्यामावदातत्विषो
नानाभूषणरत्नदीपितदिशो राजद्विमानालया: ।
भक्तिप्राप्ततथाविधोन्नतपदा दीव्यन्ति दिव्या जना-
तत्ते धाम निरस्तसर्वशमलं वैकुण्ठरूपं जयेत् ॥५॥

yasminnāma caturbhujā harimaṇiśyāmāvadātatviṣō
nānābhūṣaṇaratnadīpitadiśō rājadvimānālayāḥ |
bhaktiprāptatathāvidhōnnatapadā dīvyanti divyā janā-
stattē dhāma nirastasarvaśamalaṁ vaikuṇṭharūpaṁ jayēt || 7-5 ||

யஸ்மின்னாம சதுர்பு⁴ஜா ஹரிமணிஶ்யாமாவதா³தத்விஷோ
நானாபூ⁴ஷணரத்னதீ³பிததி³ஶோ ராஜத்³விமானாலயா꞉ |
ப⁴க்திப்ராப்தததா²விதோ⁴ன்னதபதா³ தீ³வ்யந்தி தி³வ்யா ஜனா-
ஸ்தத்தே தா⁴ம நிரஸ்தஸர்வஶமலம் வைகுண்ட²ரூபம் ஜயேத் || 7-5 ||

நாராயணா, நீ வாசம் செய்யும் வைகுண்டத்தில் அல்லவோ நாற்கரங்கள் கொண்ட கருநீல வண்ண தெய்வ ஸ்வரூபமான ஒளி வீசி எங்கும் காட்சி தருகிறது. கண்ணைப்பறிக்கும் சர்வாலங்காரத்தோடு ஒளிவீசும் உனது தெய்வீக ஆபரணங்கள் மனதை இனிக்க செயகிறது. தெய்வீக தேர்களில் வான வீதியில் நீ உலாவரும் அந்த அற்புதத்தை என்ன சொல்வேன்? பக்தியில் திளைத்து பரவசம் கொள்ளச்செய்யும் பரமானந்த குருவே. உனது திவ்ய ஸ்வரூப புனித வைகுந்தத்துக்கு எனது எண்ணற்ற நமஸ்காரங்கள். .

नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया
विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा ।
त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते
यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥

nānādivyavadhūjanairabhivr̥tā vidyullatātulyayā
viśvōnmādanahr̥dyagātralatayā vidyōtitāśāntarā |
tvatpādāṁbujasaurabhaikakutukāllakṣmīḥ svayaṁ lakṣyatē
yasmin vismayanīyadivyavibhavaṁ tattē padaṁ dēhi mē || 7-6 ||

நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருதா வித்³யுல்லதாதுல்யயா
விஶ்வோன்மாத³னஹ்ருத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஶாந்தரா |
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ꞉ ஸ்வயம் லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம் தத்தே பத³ம் தே³ஹி மே || 7-6 ||

என் தலைவா, குருவாயூரப்பா, உனது தெய்வீக்க வாஸ ஸ்தலமான வைகுண்டத்தில் அல்லவோ, என் தாய் மகாலட்சுமியும் வாசம் செய்கிறாள். அவளை சுற்றி ஆஹா எவ்வளவு எண்ணற்ற தோழிகள், பக்தைகள். விண்ணில் கண்ணைப்பறிக்கும் மின்னல் கொடி போல அல்லவோ ஜொலிக்கிறாள். கை தொழும் பக்தர்கள் மனம் கவர்ந்து புளகாங்கிதம் அடையச்செய்யும் சர்வலோக நாயகி அல்லவா? வைகுண்டத்துக்கே ஒளி தருபவளோ? உங்கள் தாமரைத் திருவடிகளை நெஞ்சில் சுமக்கும் பெரும் செல்வந்தன் நான். வைகுண்டத்தில் காணாத அருள் ஞான செல்வமா? நீங்கள் என்னை ரக்ஷித்தருள வேண்டுகிறேன்.

तत्रैवं प्रतिदर्शिते निजपदे रत्नासनाध्यासितं
भास्वत्कोटिलसत्किरीटकटकाद्याकल्पदीप्राकृति ।
श्रीवत्साङ्कितमात्तकौस्तुभमणिच्छायारुणं कारणं
विश्वेषां तव रूपमैक्षत विधिस्तत्ते विभो भातु मे ॥७॥

tatraivaṁ pratidarśitē nijapadē ratnāsanādhyāsitaṁ
bhāsvatkōṭilasatkirīṭakaṭakādyākalpadīprākr̥ti |
śrīvatsāṅkitamāttakaustubhamaṇicchāyāruṇaṁ kāraṇaṁ
viśvēṣāṁ tava rūpamaikṣata vidhistattē vibhō bhātu mē || 7-7 ||

தத்ரைவம் ப்ரதித³ர்ஶிதே நிஜபதே³ ரத்னாஸனாத்⁴யாஸிதம்
பா⁴ஸ்வத்கோடிலஸத்கிரீடகடகாத்³யாகல்பதீ³ப்ராக்ருதி |
ஶ்ரீவத்ஸாங்கிதமாத்தகௌஸ்துப⁴மணிச்சா²யாருணம் காரணம்
விஶ்வேஷாம் தவ ரூபமைக்ஷத விதி⁴ஸ்தத்தே விபோ⁴ பா⁴து மே || 7-7 ||

பிரம்மனுக்கு வைகுந்தத்தில் காட்சி தந்து மகிழ்வித்த பெருமாளே, ஞான பீட சிம்மாசனத்தில் ஒளி வீச அமர்ந்தவனே , பல சூரியன்கள் உடலில் ஒளிவீசுவது போல் ஆபரணங்கள் அணிந்து அருள் தரிசனம் தருபவனே, மார்பில் ஸ்ரீவத்சம் தனித்து காட்சி அளித்து தோன்றி என் கண்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறதே. கௌஸ்துப மாலை கண்ணைப் பறிக்கிறதே , காருண்யா, குருவாயூரப்பா, எங்கும் காணாத சிவந்த ஒளிவீசும் மலர் மார்பா, சர்வ ஜீவ காரணா , உன் திவ்ய சுந்தர தரிசனம் தந்தருள்வாய். 7

कालांभोदकलायकोमलरुचीचक्रेण चक्रं दिशा -
मावृण्वानमुदारमन्दहसितस्यन्दप्रसन्नाननम् ।
राजत्कम्बुगदारिपङ्कजधरश्रीमद्भुजामण्डलं
स्रष्टुस्तुष्टिकरं वपुस्तव विभो मद्रोगमुद्वासयेत् ॥८॥

kālāṁbhōdakalāyakōmalarucīcakrēṇa cakraṁ diśā-
māvr̥ṇvānamudāramandahasitasyandaprasannānanam |
rājatkaṁbugadāripaṅkajadharaśrīmadbhujāmaṇḍalaṁ
sraṣṭustuṣṭikaraṁ vapustava vibhō madrōgamudvāsayēt || 7-8 ||

காலாம்போ⁴த³கலாயகோமலருசீசக்ரேண சக்ரம் தி³ஶா-
மாவ்ருண்வானமுதா³ரமந்த³ஹஸிதஸ்யந்த³ப்ரஸன்னானநம் |
ராஜத்கம்பு³க³தா³ரிபங்கஜத⁴ரஶ்ரீமத்³பு⁴ஜாமண்ட³லம்
ஸ்ரஷ்டுஸ்துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ⁴ மத்³ரோக³முத்³வாஸயேத் || 7-8 ||

என்னப்பனே உண்ணி கிருஷ்ணா, கருத்த மேகங்களா நீயா என்று அடையாளம் தெரியவில்லையடா. அதில் எப்படி நீல மலர்கள் போல் உன் உருவம். ஒளிவீசும் வட்டம். எங்கும் பிரகாசம் தரும் பர ஒளி. உன் முகத்தில் காணும் குறும் புன்னகையின் காந்த சக்தியை எப்படி சொல்வேனடா. உனது திரண்ட புஜங்கள், நாற் கரங்களில் நீ தாங்கிய பாஞ்சஜன்யம், சுதர்சன சக்ரம், கௌமோதகி, நந்தகம், தாமரை எதை எப்படி வர்ணிப்பேன், வார்த்தைகள் தேடுகிறேன் ப்ரபோ. இந்த திவ்ய சுந்தர ரூபம் அல்லவோ வைகுண்டத்தில் பிரம்மனை மகிழ்வுறச் செய்தது. என் நோயெல்லாம் தீர இந்த தரிசனம் ஒன்றே போதுமே.

दृष्ट्वा सम्भृतसम्भ्रम: कमलभूस्त्वत्पादपाथोरुहे
हर्षावेशवशंवदो निपतित: प्रीत्या कृतार्थीभवन् ।
जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय
द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे ॥९॥

dr̥ṣṭvā saṁbhr̥tasaṁbhramaḥ kamalabhūstvatpādapāthōruhē
harṣāvēśavaśaṁvadō nipatitaḥ prītyā kr̥tārthībhavan |
jānāsyēva manīṣitaṁ mama vibhō jñānaṁ tadāpādaya
dvaitādvaitabhavatsvarūpaparamityācaṣṭa taṁ tvāṁ bhajē || 7-9 ||

த்³ருஷ்ட்வா ஸம்ப்⁴ருதஸம்ப்⁴ரம꞉ கமலபூ⁴ஸ்த்வத்பாத³பாதோ²ருஹே
ஹர்ஷாவேஶவஶம்வதோ³ நிபதித꞉ ப்ரீத்யா க்ருதார்தீ²ப⁴வன் |
ஜானாஸ்யேவ மனீஷிதம் மம விபோ⁴ ஜ்ஞானம் ததா³பாத³ய
த்³வைதாத்³வைதப⁴வத்ஸ்வரூபபரமித்யாசஷ்ட தம் த்வாம் ப⁴ஜே || 7-9 ||

லோகநாயகா, பிரம்ம தேவன் உன் திரு உருவம் காணப்பெற்று அடைந்த ஆச்சர்யம் கொஞ்சமா நஞ்சமா. எவ்வளவு ஆனந்தத்தில் திளைத்தான். மன நிறைவு பெற்றான். சாஷ்டாங்கமாக நான்கு சிரங்களும் நினது தாமரை மலர்ப் பாதங்களில் வைத்து வணங்கினான். ''என் தந்தையே, தாங்கள் எனது கடமையைச் செய்ய அருள்வீர்கள், சிருஷ்டிப்பது எனக்கு தொழிலாக அருளிய தாங்களே என்னை அதில் சிறக்கச் செய்ய வேண்டும் என வேண்டினான். அதற்குத் தேவையான ஞானமும் அருளும் ஆசியும் வழங்க வேண்டுகிறேன் என்று வேண்டினான் அல்லவா. அத்வைத த்வைத ஸ்வரூபமே உன் திருவடிகளில் வணங்குகிறேன்.

आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन्
बोधस्ते भविता न सर्गविधिभिर्बन्धोऽपि सञ्जायते ।
इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढ: स्वयं
सृष्टौ तं समुदैरय: स भगवन्नुल्लासयोल्लाघताम् ॥१०॥

ātāmrē caraṇē vinamramatha taṁ hastēna hastē spr̥śan
bōdhastē bhavitā na sargavidhibirbandhō:’pi sañjāyatē |
ityābhāṣya giraṁ pratōṣya nitarāṁ taccittagūḍhaḥ svayaṁ
sr̥ṣṭau taṁ samudairayaḥ sa bhagavannullāsayōllāghatām || 7-10 ||

ஆதாம்ரே சரணே வினம்ரமத² தம் ஹஸ்தேன ஹஸ்தே ஸ்ப்ருஶன்
போ³த⁴ஸ்தே ப⁴விதா ந ஸர்க³விதி⁴பி³ர்ப³ந்தோ⁴(அ)பி ஸஞ்ஜாயதே |
இத்யாபா⁴ஷ்ய கி³ரம் ப்ரதோஷ்ய நிதராம் தச்சித்தகூ³ட⁴꞉ ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை³ரய꞉ ஸ ப⁴க³வன்னுல்லாஸயோல்லாக⁴தாம் || 7-10 ||

பிரம்மன் பக்தி பூர்வமாக என்னப்பா, உன் சிவந்த தாமரைத் திருவடிகளில் இவ்வாறு விழுந்து வணங்கினான் அல்லவா. அவன் கரங்களைத் தொட்டு அணைத்து , அவனுக்கு தேவைப்பட்ட சிருஷ்டி ஞானத்தை அளித்து அருளியவனே, அவனது சிருஷ்டி யாகிய ரஜோ குண கர்மத்தால் எந்த பலனும் தீண்டாமல் பரிபூர்ணமாக அவன் ஈடுபட அருள் செய்தவா. இவ்வாறு அவன் விருப்பத்தை நிறைவேற்றிய ஆனந்த ஸ்வரூபா, அவனை மகிழ்வித்த மது சூதனா, பிரம்மன் அதுமுதல் சிருஷ்டியில் இடைவிடாது ஈடுபடுகிறான். அவன் மனத்தில் நிறைந்த நீ அவனை ஊக்குவிக்கிறாய். பிரபஞ்சம் பல்லுயிர் பெற்றது. காருண்ய சீலா , குருவாயூரப்பா, என்குறையும் தீர்த்து அருள்வாய் குருவாயூரப்பா.