Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 84
84. பிரிந்தவர் கூடினால்.....

மஹாபாரத யுத்தம் நடந்த ஸ்தலம் குருக்ஷேத்ரம். குருக்ஷேத்திரத்துக்கு இன்னொரு பெயர் சமந்த பஞ்சகம் (ஐந்து ஏரிகள் ). குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனோடு யுத்தத்தில் ஆயுதம் தொடாத பார்த்தசாரதியாக பங்கேற்ற கிருஷ்ணன் முந்தைய ஒரு அவதாரத்தில் பரசுராமராக 27 தலைமுறையைச் சேர்ந்த க்ஷத்ரியர்களைக் கொன்று அவர்களுடைய ரத்த ஆறு பெருகி ஓடி ஐந்து ரத்த ஏரிகளாக காணப்பட்ட இடம் தான் குருக்ஷேத்ரத்தில் சமந்தபஞ்சகம் .

துவாரகையிலிருந்து கிருஷ்ணன் தனது குடும்பத்தோடு சமந்த பஞ்சகம் செல்கிறார். அங்கே கிருஷ்ணன் வரப்போவதை அறிந்த பிருந்தாவன கோபியர்கள், ராதை உட்பட கிருஷ்ணனை அங்கே சந்திக்கிறார்கள்.

क्वचिदथ तपनोपरागकाले पुरि निदधत् कृतवर्मकामसूनू ।
यदुकुलमहिलावृत: सुतीर्थं समुपगतोऽसि समन्तपञ्चकाख्यम् ॥१॥

kvachidatha tapanOparaaga kaale
puri nidadhat kR^itavarma kaamasuunuu |
yadukula mahilaavR^itaH sutiirthaM
samupagatO(a)si samanta pa~nchakaakhyam || 1

க்வசித³த² தபனோபராக³காலே
புரி நித³த⁴த்க்ருதவர்மகாமஸூனூ |
யது³குலமஹிலாவ்ருத꞉ ஸுதீர்த²ம்
ஸமுபக³தோ(அ)ஸி ஸமந்தபஞ்சகாக்²யம் || 84-1 ||

சூர்ய கிரஹண புண்யகாலத்தில் பலர் சமந்த பஞ்சகம் சென்று தர்ப்பணம் பண்ணுவது வழக்கம். கிருஷ்ணன் துவாரகையிலிருந்து தனது குடும்பத்தோடு அங்கே செல்கிறார். இதற்காக கிருஷ்ணா, நீ க்ருதவர்மன், அநிருத்தன் இருவரையும் அழைத்து ''நாங்கள் திரும்பி வரும் வரை நீங்கள் துவாரகையை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டிருங்கள்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினாய். உன்னோடு பல யாதவ குடும்பங்களும் சேர்ந்துகொண்டது.

बहुतरजनताहिताय तत्र त्वमपि पुनन् विनिमज्य तीर्थतोयम् ।
द्विजगणपरिमुक्तवित्तराशि: सममिलथा: कुरुपाण्डवादिमित्रै: ॥२॥

bahutara janataahitaaya tatra
tvamapi punan vinimajjya tiirthatOyaM |
dvijagaNa parimukta vittaraashiH
samamilathaaH kurupaaNDavaadi mitraiH || 2

ப³ஹுதரஜனதாஹிதாய தத்ர
த்வமபி புனர்வினிமஜ்ஜ்ய தீர்த²தோயம் |
த்³விஜக³ணபரிமுக்தவித்தராஶி꞉
ஸமமிலதா²꞉ குருபாண்ட³வாதி³மித்ரை꞉ || 84-2 ||

பலரின் ஆத்ம சாந்திக்காக கிருஷ்ணா நீ எண்ணற்றோருக்கு தர்ப்பணங்கள் செய்தாய். அநேக பிராமணர்களுக்கு தான தர்மம் வழங்கினாய். பாண்டவ கௌரவ குடும்பங்களும் மற்றவர்கள் பலரும் அங்கே உன்னை சந்தித்தனர்.

तव खलु दयिताजनै: समेता द्रुपदसुता त्वयि गाढभक्तिभारा ।
तदुदितभवदाहृतिप्रकारै: अतिमुमुदे सममन्यभामिनीभि: ॥३॥

tava khalu dayitaajanaiH sametaa
drupadasutaa tvayi gaaDha bhaktibhaaraa |
taduditabhavadaahR^iti prakaaraiH
ati mumude samamanya bhaaminiibhiH || 3

தவ க²லு த³யிதாஜனை꞉ ஸமேதா
த்³ருபத³ஸுதா த்வயி கா³ட⁴ப⁴க்திபா⁴ரா |
தது³தி³தப⁴வதா³ஹ்ருதிப்ரகாரை-
ரதிமுமுதே³ ஸமமன்யபா⁴மினீபி⁴꞉ || 84-3 ||

துருபதன் மகள் பாஞ்சாலி, எனும் திரௌபதி, உன் பக்தை, உன் மனைவிகளை எல்லாம் தனித்தனியே சந்தித்து அவர்கள் உன்னை மணம் செய்து கொண்ட விதம், பற்றிய பழங்கதைகளைக் கேட்டு மகிழ்கிறாள்.

तदनु च भगवन् निरीक्ष्य गोपानतिकुतुकादुपगम्य मानयित्वा।
चिरतरविरहातुराङ्गरेखा: पशुपवधू: सरसं त्वमन्वयासी: ॥४॥

tadanu cha bhagavanniriikshya gOpaan
ati kutukaatupagamya maanayitvaa |
chiratara virahaaturaangarekhaaH
pashupavadhuuH sarasaM tvamanvayaasiiH ||4

தத³னு ச ப⁴க³வன் நிரீக்ஷ்ய கோ³பா-
நதிகுதுகாது³பக³ம்ய மானயித்வா |
சிரதரவிரஹாதுராங்க³ரேகா²꞉
பஶுபவதூ⁴꞉ ஸரஸம் த்வமன்வயாஸீ꞉ || 84-4 ||

சமந்த பஞ்சகம் அங்கே வந்திருந்த பிருந்தாவன கோப கோபியர்களை சந்தித்து மிகவும் சந்தோஷமாக பேசி குசலம் விசாரித்தாயே கிருஷ்ணா ஞாபகம் இருக்கிறதா உனக்கு? எல்லோருமே நீ இல்லாமல், உனைக் காணாமல் துரும்பாக இளைத்திருந்தார்கள்.

सपदि च भवदीक्षणोत्सवेन प्रमुषितमानहृदां नितम्बिनीनाम् ।
अतिरसपरिमुक्तकञ्चुलीके परिचयहृद्यतरे कुचे न्यलैषी: ॥५॥

sapadi cha bhavadiikshaNOtsavena
pramuShitamaanahR^idaaM nitambiniinaam |
atirasa parimukta ka~nchuliike
parichaya hR^idyatare kuche nyalaiShiiH || 5

ஸபதி³ ச ப⁴வதீ³க்ஷணோத்ஸவேன
ப்ரமுதி³தமானஹ்ருதா³ம் நிதம்பி³னீனாம் | [** ப்ரமுஷித **]
அதிரஸபரிமுக்தகஞ்சுலீகே
பரிசிதஹ்ருத்³யதரே குசே ந்யலைஷீ꞉ || 84-5 ||

ஆனால் உனைக் கண்ட மறுகணமே, அத்தனைபேரின் துயரமும் துன்பமும் கதிரவன் முன் பனிபோல் விலகிவிட்டதே. உன்னோடு அவர்கள் கழித்த அந்த பழைய பிரிந்தாவன ஆனந்த வாழ்க்கை மனக்கண் முன் தோன்றி மகிழ்வித்தது.

रिपुजनकलहै: पुन: पुनर्मे समुपगतैरियती विलम्बनाऽभूत् ।
इति कृतपरिरम्भणेत्वयि द्राक् अतिविवशा खलु राधिका निलिल्ये ॥६॥

ripujanakalahaiH punaH punarme
samupagatairiyatii vilambanaa(a)bhuut |
iti kR^ita parirambhaNe tvayi draak
ati vivashaa khalu raadhikaa nililye || 6

ரிபுஜனகலஹை꞉ புன꞉ புனர்மே
ஸமுபக³தைரியதீ விலம்ப³னாபூ⁴த் |
இதி க்ருதபரிரம்ப⁴ணே த்வயி த்³ரா-
க³திவிவஶா க²லு ராதி⁴கா நிலில்யே || 84-6 ||

கிருஷ்ணா, நீ வந்திருக்கிறாய் என்ற சேதி கேட்டு உனை மீண்டும் பார்க்க கிடைத்த ஆனந்தத்தில் ராதை உன்னைத் தேடி ஓடி வந்தாள் . உன்னை ஆரத் தழுவி அணைத்துக் கொண்டாள்
''கிருஷ்ணா, என் கிருஷ்ணா..''.. அவளால் மேலே பேச முடியவில்லை... உணர்ச்சி வசப்பட்டு கண்களில் நீர் திரையிட்டது..
''ராதா, எத்தனை காலம் ஆச்சு உன்னை பார்த்து?
''ஆமாம் கிருஷ்ணா, நீ தான் எங்களை, என்னை, அடியோடு மறந்து போய்விட்டாயே, கல் நெஞ்சக் காரா''
' ராதா, உனக்கு சொன்னால் புரியவே புரியாது. நான் எதிர்கொண்ட இக்கட்டுகள், முடிவில்லாத சோதனைகள்,என்னை எப்போதும் தொடர்ந்து என் உயிரைக் குடிக்க அலைந்த விரோதிகள், எத்தனை எத்தனை, தெரியுமா உனக்கு? அவற்றை, அவர்களை சமாளிக்கவே, வெல்லவே, எனக்கு மூச்சுவிட கூட சரியான நேரம் கிடைக்கவில்லை என்பதை நீ எப்படி அறிவாய்?' BETTER LATE THAN NEVER. ஒருமுறையாவது உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க இந்த சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்கிறேன். ராதா, நான் மனதால் உன்னை எப்போதும் பிரியவே மாட்டேன் என்று உனக்கே தெரியுமே''

अपगतविरहव्यथास्तदा ता रहसि विधाय ददाथ तत्त्वबोधम् ।
परमसुखचिदात्मकोऽहमात्मेत्युदयतु व: स्फुटमेव चेतसीति ॥७॥

apagata viraha vyathaastadaa taa
rahasi vidhaaya dadaatha tattvabOdham |
paramasukhachidaatmakO(a)hamaatmetyudayatu
vaH sphuTameva chetasiiti || 7

அபக³தவிரஹவ்யதா²ஸ்ததா³ தா
ரஹஸி விதா⁴ய த³தா³த² தத்த்வபோ³த⁴ம் |
பரமஸுக²சிதா³த்மகோ(அ)ஹமாத்மே-
த்யுத³யது வ꞉ ஸ்பு²டமேவ சேதஸீதி || 84-7 ||

கிருஷ்ணா, அவர்கள் அனைவரின் மனத்துயர் துடைத்தவனே, மெதுவாக அந்த எளிய கிராம ஜனங்களுக்கு நீ யார் என்பதை உணர்த்தினாய். ''என் பிரியமானவர்களே, உங்கள் மனதில் எப்போதும் நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒளிரும் பிரம்மானந்த தெய்வீக சந்தோஷம் என்பதே நான் தான் என்று நீங்கள் உறுதியாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காணும் சகல உயிர்களிலும் என்னையே நீங்கள் எப்போதும் காண்பீர்கள். எல்லாவற்றிலும் திகழும் ஆத்மாவான பரமாத்மா நானே ''

உன் பேச்சின் அர்த்தம் அவர்களுக்கு புரிந்ததோ இல்லையே உன் மதுரக் குரலில் நீ சொல்வதை மனதில் அப்படியே பதித்துக் கொண்டார்கள்.

सुखरसपरिमिश्रितो वियोग: किमपि पुराऽभवदुद्धवोपदेशै: ।
समभवदमुत: परं तु तासां परमसुखैक्यमयी भवद्विचिन्ता ॥८॥

sukharasa parimishritO viyOgaH
kimapi puraa(a)bhavaduddhavOpadeshaiH |
samabhavadamutaH parantu taasaaM
paramasukhaikya mayii bhavadvichintaa || 8

ஸுக²ரஸபரிமிஶ்ரிதோ வியோக³꞉
கிமபி புரா(அ)ப⁴வது³த்³த⁴வோபதே³ஶை꞉ |
ஸமப⁴வத³முத꞉ பரம் து தாஸாம்
பரமஸுகை²க்யமயீ ப⁴வத்³விசிந்தா || 84-8 ||

நீ பிருந்தாவனத்தை விட்டு சென்றதும் ஒரு நாள் உத்தவரை பிரிந்தவனத்துக்கு அனுப்பினாய். கிளிப்பிள்ளையாக நீ சொன்னதை அழகாக அப்படியே அந்த கோபகோபியருக்கு அந்த மஹான் எடுத்துச் சொன்னார். உன்னைக் காணாத கண்களுக்கு உத்தவர் விருந்தாக காட்சி அளித்ததுடன் உன் வார்த்தைகளால் அவர்கள் மனதில் இடம்பிடித்தார். இதயத்துக்கு இதமாக இருந்தது அவர் அளித்த ஆறுதல் சொற்கள். அவர்கள் மீண்டும் ஆனந்த பரவசம் எய்தினார்கள்.

मुनिवरनिवहैस्तवाथ पित्रा दुरितशमाय शुभानि पृच्छ्यमानै: ।
त्वयि सति किमिदं शुभान्तरै: रित्युरुहसितैरपि याजितस्तदाऽसौ ॥९॥

munivara nivahaistavaatha pitraa
durita shamaaya shubhaani pR^ichChyamaanaiH |
tvayi sati kimidaM shubhaantaraiH
ityuruhasitairapi yaajitastadaa(a)sau || 9

முனிவரனிவஹைஸ்தவாத² பித்ரா
து³ரிதஶமாய ஶுபா⁴னி ப்ருச்ச்²யமானை꞉ |
த்வயி ஸதி கிமித³ம் ஶுபா⁴ந்தரைரி-
த்யுருஹஸிதைரபி யாஜிதஸ்ததா³ஸௌ || 84-9 ||

மீண்டும் சமந்த பஞ்சகத்துக்கே போவோம். நீங்கள் எல்லாரும் ஸ்னானம் செய்து பிரார்த்தனைகள் செய்யும்போது அங்கே கூடியிருந்த முனிவர்களை, ரிஷிகளை அணுகி உன் தந்தை வசுதேவர் ' இன்னும் பாபங்கள், தீமைகள் என்னை விட்டு விலக நான் என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் '' என்று கேட்டார்.
''ஐயா, வசுதேவரே , நீர் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. எந்த பரிகாரமும் உங்களுக்கு செய்யவேண்டிய அவசியமே இல்லை. பகவானையே பிள்ளையாக பெற்ற பாக்கியசாலி உங்களை பார்த்ததில் எங்கள் பாபம் எல்லாம் தீர்ந்து விட்டது'' என்றார்கள் அந்த ரிஷிகள். ஏதோ வேடிக்கை பேச்சு என்பது போல் அருகே நின்றிருந்த நீ ஹாஹா என்று வாய்விட்டு சிரித்தாய். வசுதேவர் சில யாகங்களை செய்து முடித்தார்.

सुमहति यजने वितायमाने प्रमुदितमित्रजने सहैव गोपा: ।
यदुजनमहितास्त्रिमासमात्रं भवदनुषङ्गरसं पुरेव भेजु : ॥१०॥

sumahati yajane vitaayamaane
pramudita mitrajane sahaiva gOpaaH |
yadujana mahitaasitramaasa maatraM
bhavadanuShangarasaM pureva bhejuH || 10

ஸுமஹதி யஜனே விதாயமானே
ப்ரமுதி³தமித்ரஜனே ஸஹைவ கோ³பா꞉ |
யது³ஜனமஹிதாஸ்த்ரிமாஸமாத்ரம்
ப⁴வத³னுஷங்க³ரஸம் புரேவ பே⁴ஜு꞉ || 84-10 ||

கிருஷ்ணா நீ சமந்த பஞ்சகத்தில் மூன்று மாத காலங்கள் இருந்தாய். அத்தனை கோப கோபியரும் உன்னோடு தாங்களும் தங்கிவிட்டார்கள். அவர்களைக் கண்ட யாதவர்கள் குடும்பத்தோடு, உனது அன்பு நண்பர்களான அவர்களை வணங்கி மகிழ்ந்தார்கள். அந்த மூன்று மாத காலமும் கோப கோபியர்கள் ஒவ்வொரு நிமிஷமும் தாங்கள் முன் போல் உன்னோடு பிருந்தாவனத்தில் இருப்பதாக தான் உணர்ந்தார்கள்.

व्यपगमसमये समेत्य राधां दृढमुपगूह्य निरीक्ष्य वीतखेदाम् ।
प्रमुदितहृदय: पुरं प्रयात: पवनपुरेश्वर पाहि मां गदेभ्य: ॥११

vyapagama samaye sametya raadhaaM
dR^iDha mupaguuhya niriikshya viitakhedaam |
pramudita hR^idayaH puraM prayaataH
pavanapureshvara paahi maaM gadebhyaH ||11

வ்யபக³மஸமயே ஸமேத்ய ராதா⁴ம்
த்³ருட⁴முபகூ³ஹ்ய நிரீக்ஷ்ய வீதகே²தா³ம் |
ப்ரமுதி³தஹ்ருத³ய꞉ புரம் ப்ரயாத꞉
பவனபுரேஶ்வர பாஹி மாம் க³தே³ப்⁴ய꞉ || 11

எல்லோரும் புறப்படும் நேரம் வந்தது. ராதா மறுபடியும் கண்களில் நீரோடு உன்னெதிரே சிலையாக நின்றாள். அவளை அப்படியே அணைத்து தாய் போல் முதுகைத்த தட்டி ஆறுதல் அளித்தாய். அவள் மனதில் இருந்த சோகம், துயரம் வருத்தம் வேதனை அனைத்தும் நீங்கச் செய்தாய். அவள் மலர்ந்து சிரித்தாள். அந்த மலர்ச்சியில் நீயும் புத்துணர்ச்சி பெற்றாய். நீங்கள் எல்லோரும் துவாரகைக்கு திரும்பினீர்கள். எண்டே குருவாயூரப்பா, நானும் மகிழ என் நோய் தீர்த்து ரக்ஷிப்பாயப்பா ..